மேலும் அறிய

வீட்டின் மாடியில் இருந்த 450 கிலோ வெடி பொருட்கள்... தஞ்சை அருகே பரபரப்பு

வீட்டின் மாடி பகுதியில் 450 கிலோ எடையில், நாட்டு வெடிகள், வெடி பொருட்கள் ஆகியவை அனுமதியின்றி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியில் அனுமதியின்றி பதுக்கி வைக்கப்பட்ட 450 கிலோ வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
 
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியில் அனுமதியின்றி பதுக்கி வைக்கப்பட்ட 450 கிலோ நாட்டு வெடிமருந்து உள்ளிட்ட பொருட்களை வருவாய்துறையினர் கைப்பற்றினர். இது தொடர்பாக மதுக்கூர் காவல் நிலைய போலீஸார் ஒருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் பகுதியில் கடந்த வாரம் அனுமதியின்றி செயல்பட்ட பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் இருவர் உயிரிழந்தனர். 

இதையடுத்து மாவட்டம் முழுவதும் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலைகள் மற்றும் பட்டாசு விற்பனையாளர்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட கலெக்டர் பா.பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டார். இதையடுத்து  பட்டுக்கோட்டை வட்டத்தில் இது தொடர்பாக வேறு இடங்களில் ஏதும்  வெடிபொருட்கள் முறையாக உரிமம் பெறாமல் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து தொடர்ந்து கண்காணிப்பட்டு வருகிறது. 

இந்த ஆய்வின் போது பட்டுக்கோட்டை வட்டாட்சியர் தர்மேந்திரா, துணை வட்டாட்சியர் ஷேக் உமர்ஷா, மதுக்கூர் காவல் உதவி ஆய்வாளர் கார்த்திகேயன், மதுக்கூர் சரக வருவாய் ஆய்வாளர் கவுதமன், கீழக்குறிச்சி கிழக்கு கிராம நிர்வாக அலுவலர் ஆறுமுகம், கீழக்குறிச்சி மேற்கு கிராம நிர்வாக அலுவலர் வீரசோழன், கிராம உதவியாளர்கள் பத்மா, ரவிச்சந்திரன் ஆகியோர் கீழக்குறிச்சி பகுதியில் ப.அம்பிகாபதி (45) என்பவரது வீட்டில் ஆய்வு செய்தனர்.அப்போது, அவர் வீட்டின் மாடி பகுதியில் 450 கிலோ எடையில், நாட்டு வெடிகள், வெடி பொருட்கள் ஆகியவை அனுமதியின்றி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவற்றை வருவாய் துறை அதிகாரிகள்  பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக மதுக்கூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அம்பிகாபதியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தற்போது கோயில் விழாக்கள், காதணி விழா, திருமணம் என ஏராளமாக நடந்து வருகிறது. இதில் நாட்டு வெடிகள் வெடிக்கப்படுகின்றன. இதற்காக உரிமம் வாங்காமல் விதிகளை மீறி வெடிகள் தயாரிக்கப்படுகின்றன. அதுபோல்தான் அனுமதியின்றி திருவோணம் பகுதியில் வெடிகள் தயாரிப்பு பணியின் போது கிடங்கு வெடித்து சிதறி 2 தொழிலாளர்கள் பரிதாபமாக பலியான சம்பவம் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதையடுத்து அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் இறங்கி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். எனவே இதுபோன்று ஏதாவது தகவல் கிடைத்தால் அதிகாரிகளுக்கு தெரிவிப்பது பொதுமக்களின் கடமையாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் 15ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் 15ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
தண்டவாளம் மீது விழுந்த கிரேன்.. தூக்கி வீசப்பட்ட ரயில்.. 22 பேர் சம்பவ இடத்திலேயே பலி
தண்டவாளம் மீது விழுந்த கிரேன்.. தூக்கி வீசப்பட்ட ரயில்.. 22 பேர் சம்பவ இடத்திலேயே பலி
Chennai AQI: அடங்காத சென்னையன்ஸ்.. பனியுடன் சேர்ந்து சுத்துப்போட்ட போகி புகை.. மூச்சடைக்கும் தலைநகர்
Chennai AQI: அடங்காத சென்னையன்ஸ்.. பனியுடன் சேர்ந்து சுத்துப்போட்ட போகி புகை.. மூச்சடைக்கும் தலைநகர்
Iran Trump Russia Warning: ஈரான் போராட்டக்காரர்களை தூண்டிவிட்ட ட்ரம்ப்; எச்சரித்த ரஷ்யா; அப்போ உலகப் போர் தானா.?
ஈரான் போராட்டக்காரர்களை தூண்டிவிட்ட ட்ரம்ப்; எச்சரித்த ரஷ்யா; அப்போ உலகப் போர் தானா.?
ABP Premium

வீடியோ

Thackeray Vs Tamils | ”லுங்கியை கழட்டி ஓடவிடுவேன்” தமிழர்களுக்கு எதிரான தீ.. பற்றவைத்த பால் தாக்ரே!
H.ராஜா ARREST! போலீசாருடன் வாக்குவாதம்! ”உங்க வண்டில ஏன் ஏறணும்”
ஆட்சியில் பங்கு பஞ்சாயத்து! தமிழ்நாடு வரும் ராகுல்! நிர்வாகிகளுடன் MEETING
Vijay in CBI Office | டெல்லி சென்ற விஜய் திக்திக் CBI விசாரணை உச்சக்கட்ட பரபரப்பில் தவெகவினர் | TVK | Karur Stampede

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் 15ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் 15ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
தண்டவாளம் மீது விழுந்த கிரேன்.. தூக்கி வீசப்பட்ட ரயில்.. 22 பேர் சம்பவ இடத்திலேயே பலி
தண்டவாளம் மீது விழுந்த கிரேன்.. தூக்கி வீசப்பட்ட ரயில்.. 22 பேர் சம்பவ இடத்திலேயே பலி
Chennai AQI: அடங்காத சென்னையன்ஸ்.. பனியுடன் சேர்ந்து சுத்துப்போட்ட போகி புகை.. மூச்சடைக்கும் தலைநகர்
Chennai AQI: அடங்காத சென்னையன்ஸ்.. பனியுடன் சேர்ந்து சுத்துப்போட்ட போகி புகை.. மூச்சடைக்கும் தலைநகர்
Iran Trump Russia Warning: ஈரான் போராட்டக்காரர்களை தூண்டிவிட்ட ட்ரம்ப்; எச்சரித்த ரஷ்யா; அப்போ உலகப் போர் தானா.?
ஈரான் போராட்டக்காரர்களை தூண்டிவிட்ட ட்ரம்ப்; எச்சரித்த ரஷ்யா; அப்போ உலகப் போர் தானா.?
Maruti Fronx No.1: காம்பேக்ட் SUV பிரிவில் நம்பர் 1; தட்டித் தூக்கிய மாருதி ஃப்ராங்க்ஸ்; டாடா, ஹுண்டாயின் நிலை என்ன.?
காம்பேக்ட் SUV பிரிவில் நம்பர் 1; தட்டித் தூக்கிய மாருதி ஃப்ராங்க்ஸ்; டாடா, ஹுண்டாயின் நிலை என்ன.?
Gold Silver Rate New Peak: ஏய் தங்கமே.. உனக்கு மனசாட்சியே இல்லையா.? இன்று சவரனுக்கு ரூ.880 உயர்வு; ரூ.300-ஐ கடந்த வெள்ளி
ஏய் தங்கமே.. உனக்கு மனசாட்சியே இல்லையா.? இன்று சவரனுக்கு ரூ.880 உயர்வு; ரூ.300-ஐ கடந்த வெள்ளி
7 Seater SUV: 7 சீட்டர்னா நாங்க தான்.. சட்டையை கிழித்து சண்டை - எர்டிகா Vs ஸ்கார்ப்பியோ, குறுக்கே பொலேரோ
7 Seater SUV: 7 சீட்டர்னா நாங்க தான்.. சட்டையை கிழித்து சண்டை - எர்டிகா Vs ஸ்கார்ப்பியோ, குறுக்கே பொலேரோ
Happy Pongal 2026 Wishes: தைத்திருநாளில் நட்புக்கும் உறவுக்கும் அனுப்ப 10 புதுமையான வாழ்த்துகள் இதோ!
Happy Pongal 2026 Wishes: தைத்திருநாளில் நட்புக்கும் உறவுக்கும் அனுப்ப 10 புதுமையான வாழ்த்துகள் இதோ!
Embed widget