மேலும் அறிய

இனி டாட்டா பை..பை..தான்...வருது... வருது போக்குவரத்து நெரிசலை தீர்க்க சூப்பரான ஒன்னு வருது!!

எப்பொழுதும் மக்கள் நடமாட்டமும், அதிகளவில் போக்குவரத்து நெரிசலும் இருக்கும் பகுதிகளாக இருந்து வருகின்றன. போக்குவரத்து நெரிசலில் சிக்கி மக்கள் படாதபாடு பட்டு வருகின்றனர்.

திருச்சி: நொந்து கொள்ள வைக்கும் நெரிசலுக்கு இனி டாட்டா பை..பை..தான். எங்கு. எதனால் தெரியுங்களா? திருச்சிக்கு வரும் புதிய மேம்பாலங்களால் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. சென்னைக்கு நிகராக திருச்சி இப்போது செமையாக புதுப்பொலிவு பெற்று வருகிறது.

திருச்சி மாநகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ஓடத்துறை முதல் மல்லாட்சிபுரம் வரை 2.4 கி.மீ உயர்மட்ட பாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, நிலப்பரப்பு ஆய்வு மற்றும் போக்குவரத்து கணக்கெடுப்பு பணிகள் முடிந்துள்ளன என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

திருச்சி மாவட்டத்தில் சத்திரம் பேருந்து நிலையம் கரூர் புறவழிச்சாலை மற்றும் அரசு மருத்துவமனை, மாநகராட்சி மைய அலுவலகம் உள்ளிட்ட முக்கிய அலுவலகங்கள் இயங்கி வரும் பாரதிதாசன் சாலை, ஈவேரா சாலை, புத்தூர் பிரதான சாலைகள் எப்பொழுதும் மக்கள் நடமாட்டமும், அதிகளவில் போக்குவரத்து நெரிசலும் இருக்கும் பகுதிகளாக இருந்து வருகின்றன. போக்குவரத்து நெரிசலில் சிக்கி மக்கள் படாதபாடு பட்டு வருகின்றனர். சிலநேரங்களில் ஏன் வெளியில் வாகனத்தில் இந்த பகுதிக்கு வந்தோம் என்று நொந்து கொள்ள வைக்கும் அளவிற்கு வாகன நெரிசல் இருக்கும்.


இனி டாட்டா பை..பை..தான்...வருது... வருது போக்குவரத்து நெரிசலை தீர்க்க சூப்பரான ஒன்னு வருது!!

இதன் காரணமாக இந்த பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. இந்த போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், மக்கள் போக்குவரத்து நெரிசல் இன்றி பயணம் செய்ய ஏதுவாக திருச்சி மாநகரில் இரண்டு உயர்மட்ட பாலங்கள் அமைக்கப்படும் என்று ஏற்கனவே அமைச்சர் கே என் நேரு தெரிவித்திருந்தார்.

அதன்படி அரசு மருத்துவமனை எம் ஜி ஆர் ரவுண்டானா மத்திய பேருந்து நிலையம் செல்லும் வழி வயலூர் சாலை பகுதிகள் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக ஏற்கனவே தலைமை தபால் நிலையம் புத்தூர் வரை உயர்மட்ட பாலம் அமைக்க விரிவான திட்ட அறிக்கைக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இது குறித்த தகவல் வெளியாகி மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டு வருகின்றனர்.

இதற்கு அடுத்தபடியாக காவிரி பாலம் தொடங்கும் பகுதி சத்திரம் பேருந்து நிலையம் அதனை சுற்றியுள்ள அண்ணா சிலை ரவுண்டானா, கரூர் புறவழிச்சாலை கலைஞர் அறிவாலயம் சிக்னல் போன்ற பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக ஓடத்துறை மல்லாட்சிபுரம் இடையே உயர் மட்ட பாலம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பாலம் அமைக்கும் திட்டமானது தமிழக அரசின் நிர்வாக அனுமதிக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தரப்பில் கூறுகையில்,  திருச்சி மாநகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ஓடத்துறை காவிரி பாலம் முதல் அண்ணா சிலை கலைஞர் அறிவாலயம் வழியாக மல்லாச்சிபுரம் பறவைகள் பூங்கா அருகே வரை சுமார் 2.4 கிலோ மீட்டர் தொலைவுக்கு உயர்மட்ட பாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த பாலம் முதலில் 17.2 மீட்டர் அகலத்தில் தொடங்கி சில பகுதிகளில் 13 மீட்டர் ஆகி குடமுருட்டி பாலத்துக்கு அருகே மல்லாட்சிபுரத்தில் நிறைவடையும் பகுதியில் 10 மீட்டராக இருக்கும் வகையில் அமைக்கப்பட்ட அமைக்கப்படும் இடையே சத்திரம் பேருந்து நிலையத்திற்கு எட்டு மீட்டர் அகலத்தில் ஒரு இணைப்பு பாதை அமைக்கப்பட உள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணப்படும்.

இந்த உயர்மட்ட பாலம் அமைக்கும் பணிக்கு சுமார் 1.37 கோடி ரூபாயில் விரிவான திட்ட அறிக்கை தயாரித்து நிலப்பரப்பு ஆய்வு மற்றும் போக்குவரத்து கணக்கெடுக்கும் பணியானது தற்போது அனைத்தும் முடிக்கப்பட்டுள்ளது. திருச்சி மாநகராட்சி அதிகாரிகள் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து இது தொடர்பான அறிக்கை அரசு நிர்வாக ஒப்புதலுக்காக நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் வழியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றனர்.

மல்லாட்சிபுரம் உயர்மட்ட பாலத்துக்கான நிலம் கையப்படுத்தும் பணிகளுக்காக 97.65 கோடியும் பயன்பாட்டு மாற்றத்திற்கு 31 கோடியும், உயர்மட்ட பாலம் அமைக்கும் பணிக்கு 338.95 கோடிகளும் பணிகளை மேற்கொள்ள அரசு நிர்வாக ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் நிர்வாக ஒப்புதல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு உயர் மட்ட மேம்பாலங்களும் அமைக்கப்பட்டால் திருச்சி மாநகரின் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என மக்கள் வெகு மகிழ்ச்சியில் உள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Ration Card: 55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
Embed widget