மேலும் அறிய

Crime: நடுக்கடலில் பீடி இலைகள் கடத்தல்; தமிழகம், இலங்கை மீனவர்கள் 16 பேர் கைது

தூத்துக்குடியில் இருந்து கடல் மார்க்கமாக இலங்கைக்கு கடத்தல் சம்பவம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனை தடுக்கும் வண்ணம் கியூ பிரிவினர் தீவிரமான கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டும் வருகின்றனர்.

தூத்துக்குடி அருகே  நடுக்கடலில் இரண்டு விசைப்படகில் இருந்து பீடி இலை பண்டல்கள் இலங்கை படகில் கைமாற்றும் போது, இந்திய கடலோர காவல் படையினர் மடக்கிப் பிடித்தனர். படகில்  கடத்தப்பட இருந்த பல லட்சம் மதிப்புள்ள சுமார் மூன்றரை டன்  பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இலங்கையைச் சேர்ந்த 6 மீனவர்கள் மற்றும் தூத்துக்குடியை சேர்ந்த 10 மீனவர்கள் என 16 பேர் கைது செய்யப்பட்டனர்.


Crime: நடுக்கடலில் பீடி இலைகள் கடத்தல்; தமிழகம், இலங்கை மீனவர்கள் 16 பேர் கைது

தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து இலங்கைக்கு பல்வேறு அத்தியாவசிய பொருட்கள் கடத்தப்பட்டு வருகின்றன. அதே போன்று கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள், பீடி இலை கடத்தலும் அதிகரித்துள்ளது. இதனால் கடலோர பகுதிகளில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. அவ்வப்போது கியூ பிரிவு போலீசார் கடத்தல் சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கைது செய்து சுங்கத்துறை வசம் ஒப்படைத்து வருகின்றனர். ஆனாலும் தொடர்ச்சியாக கடத்தல் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இந்த நிலையில் தூத்துக்குடி கடலோர காவல்படையினர் ஆழ்கடல் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் கடலோர காவல்படையின் ரோந்து கப்பல் வஜ்ரா மூலம் கடலோர காவல்படையினர் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.


Crime: நடுக்கடலில் பீடி இலைகள் கடத்தல்; தமிழகம், இலங்கை மீனவர்கள் 16 பேர் கைது

அப்போது, தூத்துக்குடியில் இருந்து சுமார் 60 கடல்மைல் தொலைவில் சந்தேகப்படும்படியாக 4 படகுகள் நின்று கொண்டு இருந்தன. இதனை கவனித்த கடலோர காவல்படையினர் விரைந்து சென்றனர். அங்கு 2 இந்திய படகுகளும், 2 இலங்கை படகுகளும் இருந்தன. இந்த படகுகளில் தூத்துக்குடியை சேர்ந்த 10 பேரும், இலங்கையை சேர்ந்த 6 பேரும் இருந்தனர். அதே போன்று படகுகளில் வெள்ளை நிற சாக்கு மூட்டைகளும் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. உடனடியாக கடலோர காவல்படையினர் அந்த படகுகளுக்கு சென்று சோதனை நடத்தினர்.


Crime: நடுக்கடலில் பீடி இலைகள் கடத்தல்; தமிழகம், இலங்கை மீனவர்கள் 16 பேர் கைது

இதில் அந்த வெள்ளை நிறச் சாக்கு மூட்டைகளில் மொத்தம் 3.7 டன் பீடி இலை மறைத்து வைக்கப்பட்டு இருந்தது. இந்த பீடி இலைகளை சட்டவிரோதமாக தூத்துக்குடி மீனவர்கள் இலங்கைக்கு கடத்துவதும், அதனை வாங்குவதற்காக இலங்கையை சேர்ந்தவர்கள் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து கடலோர காவல்படையினர் 14 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 4 நாட்டுப்படகுகள், பீடி இலை மூட்டைகளையும் பறிமுதல் செய்தனர். இதன் சர்வதேச மதிப்பு ரூ.30 லட்சம் என்று கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து கடலோர காவல்படையினர் கைதான 14 பேர் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களையும் தூத்துக்குடிக்கு கொண்டு வந்தனர்.



Crime: நடுக்கடலில் பீடி இலைகள் கடத்தல்; தமிழகம், இலங்கை மீனவர்கள் 16 பேர் கைது

இலங்கையை சேர்ந்த கல்பட்டி பகுதியில் இருந்து ரனில்சமரா, உதராகசன், சகான் ஸ்டீவன், சஞ்சீவ, சுதேஷ் சஞ்சீவ, சங்கலப்பாஜீவன்தா எனவும் அவர்களுக்கு தூத்துக்குடியைச் சேர்ந்த இரண்டு விசைப்படகில் காட்வின், லெமிட்டன், ராபின் ,நிஷாந்த், சேவியர், கிங்ஸ்டன், வெர்னோ, கோல்வின்,  சசிகுமார், டார்வின் மீனவர்கள் இருப்பதும் தெரிய வந்துள்ளது. இதைத் தொடர்ந்து உளவுப்பிரிவு போலீசார், சுங்கத்துறையினர், கடலோர பாதுகாப்பு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து இலங்கையை சேர்ந்த 6 மீனவர்கள் மற்றும் தூத்துக்குடி சேர்ந்த 10  மீனவர்களிடம் சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் கியூ பிரிவு போலீசார் பீடி இலை கடத்த வந்தார்களா? அல்லது போதைப் பொருள் எதுவும் கடத்த வந்தார்களா?  என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ஒரு நிமிடத்தில் லேப்டாப் மாயம்... குளிக்கச் சென்ற நேரத்தில் கைவரிசை
ஒரு நிமிடத்தில் லேப்டாப் மாயம்... குளிக்கச் சென்ற நேரத்தில் கைவரிசை
சினிமா ஸ்டைல் செல்போன் திருட்டு... வெளியே பைக்குடன் காத்திருந்த கூட்டாளி...
சினிமா ஸ்டைல் செல்போன் திருட்டு... வெளியே பைக்குடன் காத்திருந்த கூட்டாளி...
Crime: எதிர்த்து பேசிய கர்ப்பிணி மனைவி.. கத்தியால் கண்மூடித்தனமாக குத்திக் கொன்ற கணவன்!
Crime: எதிர்த்து பேசிய கர்ப்பிணி மனைவி.. கத்தியால் கண்மூடித்தனமாக குத்திக் கொன்ற கணவன்!
திண்டிவனத்தில் நள்ளிரவு கோரம்: தூக்க கலக்கத்தில் எமனாக வந்த லாரி - பேருந்து கவிழ்ந்து வங்கி ஊழியர் பலி!
திண்டிவனத்தில் நள்ளிரவு கோரம்: தூக்க கலக்கத்தில் எமனாக வந்த லாரி - பேருந்து கவிழ்ந்து வங்கி ஊழியர் பலி!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | MONDAY

ABP Premium

வீடியோ

Trichy Goverment Hospital | ”குழந்தை உயிர் போயிருச்சே” கதறி அழும் பெற்றோர்! அரசு மருத்துவமனை அவலம்
Parthiban Apology | ”நான் சாதி பார்க்குறவனா? வாய் தவறி பேசிட்டேன்” பார்த்திபன் அந்தர்பல்டி
Chennai Acid Attack | விவாகரத்து கேட்ட மனைவி ஆசிட் வீசிய கணவர் பதறவைக்கும் CCTV காட்சி
Annamalai Walking In Bridge | ’’கார் வேண்டாம்’’ நடுரோட்டில் இறங்கிய அ.மலை நடந்து செல்லும் காட்சிகள்
CV Shanmugam on Nayanthara | ”எனக்கு நயன்தாரா வேணும்! கனவை நிறைவேத்துவாரா” எல்லை மீறிய சிவி சண்முகம்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழ்நாட்டில் மழை எச்சரிக்கை! 24ஆம் தேதி வரை வானிலை எப்படி இருக்கும்?
தமிழ்நாட்டில் மழை எச்சரிக்கை! 24ஆம் தேதி வரை வானிலை எப்படி இருக்கும்?
West Bengal Election 2026: மம்தாவுடன் மீண்டும் மல்லுகட்டும் சுவேந்து அதிகாரி..! இந்த முறையாவது வெற்றி பெறுவாரா பானர்ஜி?
West Bengal Election 2026: மம்தாவுடன் மீண்டும் மல்லுகட்டும் சுவேந்து அதிகாரி..! இந்த முறையாவது வெற்றி பெறுவாரா பானர்ஜி?
விமானப் பயணிகளுக்கு குட் நியூஸ்! இருக்கை கட்டணங்களில் அதிரடி மாற்றம்: இனி குடும்பத்துடன் அருகருகே அமரலாம்!
விமானப் பயணிகளுக்கு குட் நியூஸ்! இருக்கை கட்டணங்களில் அதிரடி மாற்றம்: இனி குடும்பத்துடன் அருகருகே அமரலாம்!
Ghatak Drone: இப்ப வாங்கடா.! 1000 கிமீ சென்று தாக்கும் ட்ரோன் ரெடி; பாக்., சீனாவை அலறவிடும் இந்திய தொழில்நுட்பம்
இப்ப வாங்கடா.! 1000 கிமீ சென்று தாக்கும் ட்ரோன் ரெடி; பாக்., சீனாவை அலறவிடும் இந்திய தொழில்நுட்பம்
Tata Upcoming EV Cars: Avinya X EV முதல் Sierra EV வரை வரை.. டாடா களமிறக்கப்போகும் புதிய மின்சார கார்கள் இதான்!
Tata Upcoming EV Cars: Avinya X EV முதல் Sierra EV வரை வரை.. டாடா களமிறக்கப்போகும் புதிய மின்சார கார்கள் இதான்!
TVK Vijay: ‘விஜய்க்கு புதிய சிக்கல்’ தேர்தலில் போட்டியிட முடியாத நிலை..? அதிர்ச்சியில் தொண்டர்கள்!
‘விஜய்க்கு புதிய சிக்கல்’ தேர்தலில் போட்டியிட முடியாத நிலை..? அதிர்ச்சியில் தொண்டர்கள்!
இந்தியாவிலேயே சட்ட ஒழுங்கு சிறப்பாக உள்ளது தமிழ்நாட்டில்தான்; அப்பாவு பேச்சு- அடித்துவெளுக்கும் நெட்டிசன்கள்!
இந்தியாவிலேயே சட்ட ஒழுங்கு சிறப்பாக உள்ளது தமிழ்நாட்டில்தான்; அப்பாவு பேச்சு- அடித்துவெளுக்கும் நெட்டிசன்கள்!
Gold Jewellery Pawning Regulation : நகைகளை அடகு வைக்கவோ, மீட்கவோ செக்.! புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு- என்ன தெரியுமா.?
நகைகளை அடகு வைக்கவோ, மீட்கவோ செக்.! புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு- என்ன தெரியுமா.?
Embed widget