மேலும் அறிய

Crime: எதிர்த்து பேசிய கர்ப்பிணி மனைவி.. கத்தியால் கண்மூடித்தனமாக குத்திக் கொன்ற கணவன்!

வைஷ்ணவி 4 மாத கர்ப்பமாக இருந்துள்ளார். அதேசமயம் யூட்யூப் சேனல் ஒன்றையும் நடத்தி வந்துள்ளார். அவரது கணவரான ஹரி பாபு அங்கிருக்கும் அரசு மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகிறார். 

தெலங்கானாவில் குடும்ப தகராறில் 19 வயது கர்ப்பிணி பெண்ணை கணவர் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

தெலங்கானா மாநிலம் ஜக்தியால் மாவட்டத்திலிருக்கும் கோருட்லா மண்டலத்தில் உள்ள மதாபூர் கிராமத்தில் ஹரிபாபு என்பவர் தனது 19 வயது மனைவி வைஷ்ணவியுடன் வசித்து வந்தார். வைஷ்ணவி 4 மாத கர்ப்பமாக இருந்துள்ளார். அதேசமயம் யூட்யூப் சேனல் ஒன்றையும் நடத்தி வந்துள்ளார். அவரது கணவரான ஹரி பாபு அங்கிருக்கும் அரசு மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகிறார். 

இந்த தம்பதியினர் காதலித்து வந்த நிலையில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துக் கொண்டனர். அப்போது மதாபூரில் வசித்து வந்த அவர்கள் இருவருக்குமிடையே கடந்த சில நாட்களாக   அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்பட்டுள்ளது. இதில் கருத்து வேறுபாடு உண்டாக வைஷ்ணவி மீது ஹரி பாபு கடும் கோபத்துடன் இருந்துள்ளார். இப்படியான நிலையில் நேற்று அதிகாலை வைஷ்ணவியை திடீரென ஹரி பாபு கத்தியால் குத்தியுள்ளார். நல்ல ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த வைஷ்ணவி இதனை சற்றும் எதிர்பார்க்கவில்லை. கத்திக்குத்தில் படுகாயமடைந்த அந்த பெண் இரத்த வெள்ளத்தில் அங்கேயே உயிரிழந்தார். 

இதனிடையே ஹரி பாபு அங்கிருந்து தப்பியோடி விட்டார். இதற்கிடையில் பொழுது விடிந்ததும் வைஷ்ணவி வீட்டு கதவு திறந்து கிடப்பதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு அவர் இறந்து கிடந்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வைஷ்ணவி உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக அவரது உடலை மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து இருவரின் குடும்பத்தினரிடமும் விசாரணை நடத்தினர். தற்போது தலைமறைவாக உள்ள கணவன் ஹரி பாபுவை தேடும் பணி நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹரி பாபுவும், வைஷ்ணவியும் இரு வீட்டார் சம்மதத்துடன் மிக பிரமாண்டமாக திருமணம் செய்துக் கொண்டனர். திருமணத்திற்கு பின் அவர்களின் குடும்ப வாழ்க்கை சுமூகமாக சென்று கொண்டிருப்பதாக இருவரின் குடும்பத்தினரும் நினைத்தனர். ஆனால் அவர்களுக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது தெரியாது என போலீசில் ஹரிபாபு, வைஷ்ணவி குடும்பத்தினர் கூறியதாக சொல்லப்படுகிறது. திங்கட்கிழமை இரவு கணவன், மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அதன் சத்தம் அக்கம் பக்கத்தில் கேட்டதாகவும் குடியிருப்புவாசிகள் கூறியுள்ளனர். 

தற்போது வைஷ்ணவி மற்றும் அவரது வயிற்றில் இருந்த கரு என இரண்டு உயிர்கள் அநியாயமாக இறந்தது அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தலைப்பு செய்திகள்

" உதவுவது போல் நடித்து கல்லூரி மாணவியிடம் பாலியல் அத்துமீறல் " காவல் ஆய்வாளரின் ஓட்டுநர் கைது
" கள்ளக் காதலனுடன் தனிக் குடித்தனம் " 3 வயது குழந்தையை அலற அலற அடித்தே கொன்ற கொடூரம்
" மனைவியுடன் தவறான உறவு " எச்சரித்தும் கேட்காததால் நடந்த அதிர்ச்சி சம்பவம்
காஞ்சிபுரத்தில் பரபரப்பு! ‘ஆப்பரேஷன் சைபர் விஜில்’: சிக்கிய 18 போ்! வெளியான அதிர்ச்சி பின்னணி!
காஞ்சிபுரத்தில் பரபரப்பு! ‘ஆப்பரேஷன் சைபர் விஜில்’: சிக்கிய 18 போ்! வெளியான அதிர்ச்சி பின்னணி!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
'தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் POWER' சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கர்ஜனை
'தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் POWER' சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கர்ஜனை
இது தான் மாற்றமா.? லஞ்சம் வாங்கிய கணவனை நீக்கிட்டு மனைவிக்கு பொறுப்பு.! TVK- வை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
இது தான் மாற்றமா.? லஞ்சம் வாங்கிய கணவனை நீக்கிட்டு மனைவிக்கு பொறுப்பு.! TVK- வை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
FCRA Bill: உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
ARR AMEEN CAR ACCIDENT : விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் மகன் ஓட்டிய கார்.! சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன.?
விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் மகன் ஓட்டிய கார்.! சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன.?
CM Vijay: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
RB Udhaykumar: ”CM விஜய்க்கு தெரிந்தது எல்லாமே த்ரிஷா மட்டும் தான்” - ADMK ஆர்.பி. உதயகுமார் அநாகரீக பேச்சு
”CM விஜய்க்கு தெரிந்தது எல்லாமே த்ரிஷா மட்டும் தான்” - ADMK ஆர்.பி. உதயகுமார் அநாகரீக பேச்சு
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Embed widget