மேலும் அறிய

டிபன் பாக்சில் 1.2 கிலோ தங்கப் பசை; சென்னை விமான நிலையத்தில் சிக்கிய ஒப்பந்த ஊழியர்

துபாயிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 62 லட்சம் மதிப்புடைய, தங்கப் பசையை பறிமுதல் செய்த சுங்க அதிகாரிகள்.

சென்னை விமான நிலையத்தில், பணி முடிந்து வெளியில் வந்த ஒப்பந்த ஊழியர் டிபன் பாக்சில், ரூ.62 லட்சம் மதிப்புடைய 1.2 கிலோ தங்கப் பசை இருந்ததை பாதுகாப்பு அதிகாரிகள் கண்டுபிடித்தனர். துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட தங்கப் பசையை, ஒப்பந்த ஊழியரிடம் கொடுத்துவிட்டு, கடத்தல் ஆசாமி இலங்கைக்கு தப்பி ஓட்டம்.
 
புதிய ஒருங்கிணைந்த சர்வதேச விமான நிலையம்
 
சென்னை ( Chennai News ) : சென்னை புதிய ஒருங்கிணைந்த சர்வதேச விமான நிலையத்தில், ஹவுஸ் கீப்பிங் பிரிவில் தனியார் ஒப்பந்த ஊழியராக பணியாற்றும் ஊழியர்கள், பணி முடிந்து நேற்று  வெளியில் சென்று கொண்டிருந்தனர். கேட்டில் நின்ற பாதுகாப்பு வீரர்கள், அந்த ஊழியர்களை வழக்கம் போல்  பரிசோதித்தனர். அப்போது ஒப்பந்த ஊழியர் ஒருவருடைய டிபன் பாக்ஸ்க்குள், தங்கப் பசை இருந்ததை கண்டுபிடித்தனர்.
 
" சர்வதேச மதிப்பு 62 லட்சம் "
 
இதை அடுத்து அந்த ஒப்பந்த ஊழியரை வெளியில் விடாமல் நிறுத்தி வைத்தனர். அதோடு சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து, ஒப்பந்த ஊழியர் டிபன் பாக்ஸில் இருந்த தங்கப் பசையை ஆய்வு செய்தபோது, அதில் 1.2 கிலோ தங்க பசை இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு ரூ. 62 லட்சம். இதை அடுத்து சுங்க அதிகாரிகள், அந்த ஒப்பந்த ஊழியரை, தங்களுடைய அலுவலகத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.
 
" மற்றொரு கடத்தல் ஆசாமி "
 
அப்போது அதிகாலையில் துபாயில் இருந்து சென்னை வந்த ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில், இலங்கையைச் சேர்ந்த ஒரு பயணி, துபாயிலிருந்து சென்னை வழியாக இலங்கை செல்வதற்கு ட்ரான்சிட் பயணியாக வந்தார். அவர்  இந்த தங்கப் பசையை கடத்தி வந்துள்ளார். கடத்தி வந்த தங்கப் பசை பார்சலை, இந்த ஒப்பந்த ஊழியரிடம் கொடுத்து, விமான நிலையத்தை விட்டு வெளியில் எடுத்துச் செல்லும்படி கூறியுள்ளார். அவ்வாறு வெளியில் கொண்டு வந்த பின்பு, அங்கு மற்றொரு கடத்தல் ஆசாமி, ஒப்பந்த ஊழியரிடம் உள்ள தங்கப்பசை பார்சலை வாங்கிக்கொண்டு, அவருக்கு அன்பளிப்பாக பணம் கொடுக்க இருந்ததாகவும் தெரியவந்தது.
 
" சென்னையில் இருந்து இலங்கை "
 
இதை அடுத்து சுங்க அதிகாரிகள், விமான நிலைய ஒப்பந்த ஊழியரை கைது செய்தனர். அவரிடம் இருந்த ரூ.62 லட்சம் மதிப்புடைய 1.2 கிலோ தங்கப்பசையையும் பறிமுதல் செய்தனர். இதற்கு இடையே துபாயிலிருந்து தங்க பசையை கடத்தி வந்த இலங்கை சேர்ந்த கடத்தல் ஆசாமி, ட்ரான்சிட் பயணி என்பதால், அவர் விமான நிலையத்தை விட்டு வெளியில் வராமலேயே, சென்னையில் இருந்து இலங்கைக்கு மற்றொரு விமானத்தில் தப்பி சென்று விட்டார். இதை அடுத்து சுங்க அதிகாரிகள் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து, தப்பிச்சென்ற இலங்கை கடத்தல் ஆசாமியை தீவிரமாக தேடி வருகின்றனர்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
ABP Premium

வீடியோ

Police Helps Pregnant Women|'’மனைவிக்கு பிரசவ வலி’’DRUNK & DRIVEல் வந்த கணவன் போலீஸ் நெகிழ்ச்சிசெயல்
Tambaram Boys Atrocity | பட்டாக்கத்தி உடன் REELSதாம்பரம் சிறுவர்கள் அராஜகம்தட்டித்தூக்கிய போலீஸ்
Jananayagan Bhagavanth Kesari | பகவந்த் கேசரி ரீமேக்கா? ஜனநாயகன் பட சீக்ரெட்! இயக்குநர் OPENS UP
Manickam Tagore | ”வைகோ, திருமா தலையிடாதீங்க” மாணிக்கம் தாகூர் பரபர POST! நடந்தது என்ன?
DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
Jothimani MP: “அழிவின் பாதையில் செல்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்“; எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு
“அழிவின் பாதையில் செல்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்“; எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு
SETC Volvo Bus: பறக்கும் Volvo! திருச்சி டூ சென்னை கிளாம்பாக்கம்! 5 மணி நேரத்தில் மின்னல் பயண அனுபவம்..
SETC Volvo Bus: பறக்கும் Volvo! திருச்சி டூ சென்னை கிளாம்பாக்கம்! 5 மணி நேரத்தில் மின்னல் பயண அனுபவம்..
Chennai Metro Train: சென்னை மெட்ரோ ரயிலில் 9 ஆண்டுகளில் பயணித்தவர்கள் இத்தனை கோடியா? - ஆச்சர்ய தகவல்!
Chennai Metro Train: சென்னை மெட்ரோ ரயிலில் 9 ஆண்டுகளில் பயணித்தவர்கள் இத்தனை கோடியா? - ஆச்சர்ய தகவல்!
Old pension scheme: பழைய ஓய்வூதிய திட்டம்.! முதலமைச்சர் நாளை முக்கிய அறிவிப்பு- அரசு ஊழியர்கள் குஷி
பழைய ஓய்வூதிய திட்டம்.! முதலமைச்சர் நாளை முக்கிய அறிவிப்பு- அரசு ஊழியர்கள் குஷி
Embed widget