ட்ரைவருடன் தீராக் காதல், ரூ.20 லட்சம் இன்சூரன்ஸ், பாம்பை கொண்டு கணவருக்கு ஸ்கெட்ச் - மனைவி பலே ப்ளான்
Uttarpradesh Affair Crime: கணவனை கொலை செய்துவிட்டு ரூ.20 லட்சம் இன்சூரன்ஸ் பணத்தோடு, காதலனுடன் தப்பிக்க முயன்ற மனைவி ஜோடியாக உத்தரபிரதேச போலீசாரிடம் சிக்கியுள்ளார்.

Uttarpradesh Affair Crime: கணவனை பாம்பை விட்டு கடிக்கச் செய்து கொலை செய்த மனைவி சிக்கியது எப்படி என கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
பணத்திற்கான கணவனை கொன்ற மனைவி
காதலன் என கூறப்படும் நபருடன் சேர்ந்து கணவனை கொன்ற பெண்ணை, உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த கொலை இயற்கையானதாக தெரிவதற்காக அந்த ஜோடி பாம்பை பயன்படுத்தியது விசாரணையில் தெரிய வந்துள்ளது. தங்களது உறவை எந்தவித பிரச்னையும் இன்றி தொடரவும், இன்சூரன்ஸ் மூலம் கிடைக்கும் 20 லட்சம் ரூபாய் பணத்தை அனுபவிக்கவும் இந்த கொலை நிகழ்த்தப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹஸ்தினாபூரில் தனது மனைவி டாமினியுடன் சேர்ந்து மழலைகளுக்கான பள்ளியை நடத்தி வந்த அதுல் பன்வார் என்பவர் தார் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த ஜோடிக்கு கடந்த 2019ம் ஆண்டு திருமணம் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.
திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட படுகொலை
காவல்துறை விசாரணையில் வெளியான தகவலின்படி, பள்ளியில் ஓட்டுனராக பணியாற்றி வந்த துஷார் எனப்படும் நிக்கி உடன் டாமினி திருமணத்தை மீறிய உறவை கொண்டிருந்துள்ளார். ஆரம்பத்தில் சாலை விபத்தை போன்று சித்தரித்து அதுலை கொலை செய்ய இருவரும் திட்டமிட்டுள்ளனர். அது கைகூடாததை தொடர்ந்து மற்றொரு திட்டத்தை கையிலெடுத்துள்ளனர். இதற்காக தனது காதலன் மட்டுமின்றி மேலும் இருவரின் உதவியையும் டாமினி நாடியுள்ளார். அதன்படி, மிகவும் கொடிய விஷம் கொண்ட பாம்பை கணவர் படுத்து இருந்த படுக்கையில் திறந்துவிடுவதற்கு முன்னதாகவே, அவர் தப்பித்துவிடக்கூடாது என்பதற்காக உறங்குவதற்கு முன்பாக அதுல் குடித்த பாலில் டாமினி தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்துள்ளார். இதன் பிறகு பாம்பு கடிக்க, கடந்த வெள்ளிக்கிழமை அன்று காலை அருகிலிருந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
குற்றவாளிகள் சிக்கியது எப்படி?
ஆரம்பத்தில் மரணம் பாம்புக்கடியால் ஏற்பட்டதாகத் தோன்றினாலும், கவால்துறையினர் வீட்டில் நிலவும் சூழலில் சந்தேகம் கொண்டு தீவிரமான விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். அதன்படி செல்போன் அழைப்புப் பதிவுகள் மற்றும் பிற ஆதாரங்களை ஆய்வு செய்ததில், டாமினி மற்றும் துஷார் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் சதித்திட்டம் அம்பலமானதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர், மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே, துஷாருக்கும் ஏற்கனவே திருமணமாகியுள்ளது. திட்டமிட்டபடி அதுல் கொலையை நிகழ்த்தி, அதன் மூலம் பணப் கிடைப்பது உறுதியானால், தனது மனைவியை விவாகரத்து செய்ய அவர் திட்டமிட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
கொலைக்கான காரணம் என்ன?
தனது திருமணத்தை மீறிய உறவை பிரச்னையின்றி தொடரலாம், கணவன் உயிரிழந்தால் கிடைக்கும் 20 லட்சம் ரூபாய் இன்சூரன்ஸ் பணத்தை முழுமையாக அனுபவிக்கலாம் என்ற இரண்டு காரணங்களை மனதில் கொண்டே இந்தச் சதித்திட்டம் தீட்டப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. சந்தேகம் வராமல் இருப்பதற்காக, இந்த மரணத்தை இயற்கையான பாம்புக்கடி சம்பவமாகக் காட்ட குற்றவாளிகள் சதித்திட்டத்தைத் தீட்டியதாகக் கூறப்படுகிறது.
ட்ரெண்டிங் செய்திகள்























