மேலும் அறிய

Lottery Tickets: சேலத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை; 31 பேர் கைது - போலீஸ் அதிரடி

லாட்டரி சீட்டுகளின் எண்களை பேப்பரில் எழுதி விற்றலோ அல்லது நம்பர் லாட்டரி விற்றாலோ, விற்பவர்கள் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் அடைக்கப்படுவர்.

தமிழகம் முழுவதும் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் சேலம் மாநகரில் உள்ள தாதகாப்பட்டி, அன்னதானப்பட்டி, களரம்பட்டி ஆகிய பகுதிகளில் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளின் எண்களை துண்டு பேப்பரில் எழுதி, விற்பனை செய்து வந்தது குறித்து சேலம் மாநகர ஆணையாளருக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து சேலம் உதவி ஆணையர் அசோகன் தலைமையில் தனிப்படை அமைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

Lottery Tickets: சேலத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை; 31 பேர் கைது - போலீஸ் அதிரடி

இந்த விசாரணையில் சேலம் சீலநாயக்கன்பட்டியைச் சேர்ந்த பெரியசாமி, கைலாஷ், சித்தேஸ்வரன், கருப்பண்ணன், ராமு கார்த்திக் உள்ளிட்ட 8 பேர் தடை செய்யப்பட்ட கேரளா போன்ற வெளி மாநில லாட்டரி சீட்டுகளின் எண்களை பேப்பர்களில் எழுதி விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து லாட்டரி சீட்டுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து கைதான 8 பேரும் சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர் .

Lottery Tickets: சேலத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை; 31 பேர் கைது - போலீஸ் அதிரடி

இந்த நிலையில்,  இரண்டு நாட்களாக சேலம் மாநகர பகுதியில் காவல்துறையினர் அதிரடி சோதனையில் இறங்கினர். இந்த சோதனையில் சேலம் மாநகர் முழுவதும் இருந்து சுமார் 31 பேர் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே லாட்டரி சிறப்பு தனிப்படை காவல்துறையினர் மாநகர் முழுவதும் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சேலம் மாநகராட்சியில் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகளின் எண்களை பேப்பரில் எழுதி விற்றலோ அல்லது நம்பர் லாட்டரி விற்றாலோ, விற்பவர்கள் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் அடைக்கப்படுவர் என்று சேலம் மாநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், வெளி மாநில லாட்டரி சீட்டுகள் சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் புழக்கத்தில் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், சேலம் மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து காவல் நிலையத்திற்கும் லாட்டரி சீட்டு விற்பனை குறித்து சோதனை நடத்த காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர். தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்பவர்களிடம் இருந்து வாங்கினாலும் அது குற்றமாகும் எனவே பொதுமக்கள் விழிப்புணர்வோடு எச்சரிக்கையாக செயல்பட வேண்டும் எனவும் காவல் துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
Iran Erfan Soltani: ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
Part-time teachers salary: அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
TRB அலட்சியம் காட்டக்கூடாது! ஆசிரியர் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்
TRB அலட்சியம் காட்டக்கூடாது! ஆசிரியர் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்
ABP Premium

வீடியோ

’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா
Thackeray Vs Tamils | ”லுங்கியை கழட்டி ஓடவிடுவேன்” தமிழர்களுக்கு எதிரான தீ.. பற்றவைத்த பால் தாக்ரே!
H.ராஜா ARREST! போலீசாருடன் வாக்குவாதம்! ”உங்க வண்டில ஏன் ஏறணும்”

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
Iran Erfan Soltani: ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
Part-time teachers salary: அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
TRB அலட்சியம் காட்டக்கூடாது! ஆசிரியர் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்
TRB அலட்சியம் காட்டக்கூடாது! ஆசிரியர் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்
iPhone 17 Price Drop: மக்களே முந்துங்க.!! அதிரடி சலுகை பெறும் ஐபோன் 17; இவ்ளோ விலை குறைவா.? எப்போ, எங்க தெரியுமா.?
மக்களே முந்துங்க.!! அதிரடி சலுகை பெறும் ஐபோன் 17; இவ்ளோ விலை குறைவா.? எப்போ, எங்க தெரியுமா.?
Iran Crisis: ஹார்முஸ் ஜலசந்தி..! ஈரான் கைவைத்தால் என்ன நடக்கும்? உலகின் எண்ணெய் குழாய்க்கு ஆபத்து?
Iran Crisis: ஹார்முஸ் ஜலசந்தி..! ஈரான் கைவைத்தால் என்ன நடக்கும்? உலகின் எண்ணெய் குழாய்க்கு ஆபத்து?
தண்டவாளம் மீது விழுந்த கிரேன்.. தூக்கி வீசப்பட்ட ரயில்.. 22 பேர் சம்பவ இடத்திலேயே பலி
தண்டவாளம் மீது விழுந்த கிரேன்.. தூக்கி வீசப்பட்ட ரயில்.. 22 பேர் சம்பவ இடத்திலேயே பலி
Chennai AQI: அடங்காத சென்னையன்ஸ்.. பனியுடன் சேர்ந்து சுத்துப்போட்ட போகி புகை.. மூச்சடைக்கும் தலைநகர்
Chennai AQI: அடங்காத சென்னையன்ஸ்.. பனியுடன் சேர்ந்து சுத்துப்போட்ட போகி புகை.. மூச்சடைக்கும் தலைநகர்
Embed widget