Watch Video: மெரினா பீச்சில் இப்படியா? பட்டாக்கத்தியுடன் சிறுவர்கள்! ஒருவருக்கு அரிவாள் வெட்டு! ஷாக் வீடியோ!
சென்னை மெரினாவில் நடந்த கோர சம்பவம். துரத்தி துரத்தி வெட்டிய ரவுடி கும்பலின் வீடியோ வெளியாகியுள்ளது.
சென்னை மெரினாவில் நடந்த கோர சம்பவம். துரத்தி துரத்தி வெட்டிய ரவுடி கும்பலின் வீடியோ வெளியாகியுள்ளது.
சென்னை மெரினா கடற்கரையில் எப்போதும் போல ஒரு இயல்பான ஞாயிற்றுக் கிழமை காலைப் பொழுது தான் இருக்கும் என அனைவரும் நினைத்திருக்கக் கூடும். ஆனால் இன்று நடந்த மிகவும் பயங்கரமான சம்பவம் மக்களுக்கு பொது வெளியில் நடமாடவே அச்சத்தினை தூண்டும் அளவிற்கு பயத்தினை ஏற்படுத்தியுள்ளது எனலாம். எப்போதும் போல நடைபயிற்சி மேற்கொள்வேர் நடைபயிற்சியும், விடுமுறை தின காலை என்பதால் கடற்கரையில் விளையாட தன் நண்பர்கள் மற்றும் உறாவினர்களுடன் ஏராளமானோர் வந்து கொண்டிருந்த நேரம். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் மெரினாவை நோக்கி வந்து கொண்டிருந்த போது தான் ஒரு கோர சம்பவம் நடந்தேறியது.
இன்று மெரினா கடற்கரை யில் நடந்தா வீச்சரிவாள் வெட்டு குத்து சம்பவம் pic.twitter.com/2nWLjyVuoq
— மில்லத்☀ தமுமுக🚩 (@chelapamuna6786) July 3, 2022
வியாசர்பாடி இளமாறன் என்பவரை ஐந்து பேர் கொண்ட கும்பல் பட்டா கத்தி போன்ற பயங்கரமான ஆயுதங்க்களைக் கொண்டு துரத்தி துரத்தி வெட்டியுள்ளனர். இதில் படுகாயமடைந்த இளமாறனை கடற்கரையில் பாதுகாப்பு பணியில் ஈடுபாடுக் கொண்டிருந்த காவலர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் திருமண புகைப்படம் எடுக்க வந்தவரின் மொபைல் போனைக் கேட்டு மிரட்டியுள்ளதும், தர மறுத்ததிற்காக வெட்டப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களில் இதுவரை மூன்று சிறுவர்கள் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறுவர்கள் இச்சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது பெரும் அதிர்ச்சியினை அங்கு வந்திருந்த பொது மக்களிடத்தில் ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்