மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Crime : நண்பன் திரைப்பட பாணியில் வீடியோ கால் மூலம் பிரசவம்.. இறந்து பிறந்த குழந்தை.. குற்றம்சாட்டும் உறவினர்..
செங்கல்பட்டு மாவட்டம் சூனாம்பேடு பகுதியில் வீடியோ கால் மூலம் பிரசவம் பார்த்ததால் குழந்தை இறந்த பிறந்தது என உறவினர்கள் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர்.
![Crime : நண்பன் திரைப்பட பாணியில் வீடியோ கால் மூலம் பிரசவம்.. இறந்து பிறந்த குழந்தை.. குற்றம்சாட்டும் உறவினர்.. Relatives have alleged that the child was stillborn after watching the delivery through video call in Soonambedu area of Chengalpattu district Crime : நண்பன் திரைப்பட பாணியில் வீடியோ கால் மூலம் பிரசவம்.. இறந்து பிறந்த குழந்தை.. குற்றம்சாட்டும் உறவினர்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/20/5a1f9dfe14301a4d0a3508ae35afb6cf1663647839597109_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
காவல்துறை விசாரணை
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள சூனாம்பேடு ஆண்டார்குப்பம் பகுதியை சேர்ந்தவர் முரளி (36) . இவர் அப்பகுதியில் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி புஷ்பா வயது (33) இவர் இரண்டாவதாக கருத்தரித்து இருந்த நிலையில், மருத்துவரால் பிரசவ தேதி இன்று அறிவித்து இருந்த நிலையில், இன்று காலை சூனாம்பேடு - இல்லிடு பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
![Crime : நண்பன் திரைப்பட பாணியில் வீடியோ கால் மூலம் பிரசவம்.. இறந்து பிறந்த குழந்தை.. குற்றம்சாட்டும் உறவினர்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/20/9560a0609caa22070644d4c78653e8651663647707539109_original.jpg)
வலி எடுத்தால் வந்து மருத்துவமனையில் சேர்ந்து கொள்ளும்படி மருத்துவர்கள் தெரிவித்த நிலையில், நேற்று மதியம் 2:30 மணி அளவில் புஷ்பாவிற்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது சூனாம்பேடு, இல்லிடு பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு புஷ்பா சென்றுள்ளார். அங்கு மருத்துவர்கள் யாரும் இல்லாத நிலையில் செவிலியர்கள் மட்டுமே 2 பேர் இருந்துள்ளனர். இதில் புஷ்பா தற்போது செய்த ஸ்கேன் ரிப்போர்ட்டில், பிரசவத்தில் பிரச்சனை உள்ளது என குறிப்பிட்டு இருந்துள்ளது.
இதனை அடுத்து இங்கேயே பிரசவம் பார்த்து விடலாம் என செவிலியர்கள் தெரிவித்ததின் பேரில், மாலை 5 மணிக்கு குழந்தை தலைகீழாக கால்கள் மட்டுமே வந்துள்ளது.செய்வது அறியாது தவித்த செவிலியர்கள் , இடைக்கவே நாடு அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவர் ஒருவருக்கு போன் செய்து தகவலை தெரிவித்தனர். திரைப்பட பாணியில் வீடியோ கால் மூலம் பிரசவத்தை செய்யும்படி மருத்துவர் கூறியுள்ளார். மருத்துவர் சொன்ன ஆலோசனைப்படி, செவிலியர்கள் செய்துள்ளனர் எவ்வளவு முயன்றும் குழந்தையின் தலை மட்டும் வெளியே வரவில்லை.
![Crime : நண்பன் திரைப்பட பாணியில் வீடியோ கால் மூலம் பிரசவம்.. இறந்து பிறந்த குழந்தை.. குற்றம்சாட்டும் உறவினர்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/20/c9a31390a73c209d373603e20418f5e31663647727926109_original.jpg)
இதனை அடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் குழந்தை வரும் வழியிலேயே இறந்து பிறந்துள்ளது . இதனை அடுத்து மருத்துவமனை செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் அலட்சியப் போக்கால் குழந்தை இறந்து பிறந்ததாக, குழந்தையின் உடலை பெற்றோர் மற்றும் உறவினர் வாங்க மறுத்து விட்டார். இதனால் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து உறவினர்கள் , சூனாம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
![Crime : நண்பன் திரைப்பட பாணியில் வீடியோ கால் மூலம் பிரசவம்.. இறந்து பிறந்த குழந்தை.. குற்றம்சாட்டும் உறவினர்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/20/d8cb07d506f4b32e3417c3c6a831a8701663647773288109_original.jpg)
2 செவிலியர்கள் மட்டுமே இருந்தனர்
இதுகுறித்து உறவினர் ராஜேஷ் குமார் என்பவர் நம்மிடம் கூறுகையில், பிரசவ வலி என மதியம் 3 மணியளவில் நாங்கள் மருத்துவமனையில் கொண்டு சென்று சேர்த்தோம். அப்பொழுது மருத்துவமனையில் டாக்டர் இல்லை, இரண்டு செவிலியர்கள் மட்டுமே இருந்தனர். அரை மணி நேரம் இந்த பிரசவத்தில் ஏதோ பிரச்சனை இருக்கிறது என பேசிக் கொண்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து ஒன்றரை மணி நேரம் பிரசவம் பார்த்த பிறகு தான், குழந்தை தலைவலி வரவில்லை கால் வெளியே வந்திருக்கிறது என கூறினர். இதனை அடுத்து மருத்துவர் ஒருவரிடம் வீடியோ காலில் பேசினார்கள். இதனை அடுத்து தான் குழந்தை பிறப்பது கடினம் என மதுராந்தக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சரியான நேரத்தில் எங்களை அனுப்பி இருந்தால் இச்சம்பவம் நடைபெற்று இருக்காது என தெரிவித்தார்.
வருவாய்த் துறையினர், மருத்துவ அதிகாரிகள் விசாரணை
இதுகுறித்து சம்பவ இடத்திற்கு விரைந்த வட்டாட்சியர் மற்றும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதுகுறித்த, மாவட்ட சுகாதார துணை இயக்குநர் பரணிதரன் நம்மிடம் கூறுகையில், கடந்த " வெள்ளிக்கிழமையே குழந்தை தலை திரும்பாமல் இருக்கிறது" என ஸ்கேன் செய்வதில் தெரியவந்துள்ளது. "BREECH Position" என்ற பிரச்சனை இருந்தது. ஆனால் அவர்கள் திங்கட்கிழமை மதியம், முழு பிரசவ வலி வந்தபொழுதுதான் மருத்துவமனைக்கு வந்துள்ளனர். ஆரம்ப கட்டத்திலேயே வந்திருந்தால் வேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கலாம், அவர்கள் கடைசி கட்டத்தில் வந்ததால் இவ்வாறு பிரசவம் பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தாய் மற்றும் செய் ஆகிய இருவரை காப்பாற்ற வேண்டும் என்றுதான் முயற்சி செய்து உள்ளார்கள். இது குறித்து உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர், நேற்று இரவே சென்று முதற்கட்ட விசாரணை நடத்தியுள்ளோம், இது குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
தமிழ்நாடு
இந்தியா
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion