மேலும் அறிய

காட்டுப்பகுதிக்குள் புகுந்து ‘திபுதிபு’ என வந்த கும்பல்.. நண்பர்கள் கண்முன்னே ரவுடி சிவகுரு வெட்டிக்கொலை...

கோட்டக்குப்பம் அருகே, கடந்த மாசிமகத் திருவிழா தகராறின் எதிரொலியாக, பிரபல ரவுடி ஒருவரை ஒரு கும்பல் காட்டுப்பகுதியில் வைத்து சரமாரியாக வெட்டிக் கொலை!

விழுப்புரம் :  கோட்டக்குப்பம் அருகே, கடந்த மாசிமகத் திருவிழா தகராறின் எதிரொலியாக, பிரபல ரவுடி ஒருவரை ஒரு கும்பல் காட்டுப்பகுதியில் வைத்து சரமாரியாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் தாலுக்கா, கூனிமேடுக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தன். இவருடைய மகன் சிவகுரு (வயது 37). மீனவரான சிவகுரு, காவல்துறை பதிவேடுகளின்படி ஒரு பிரபல ரவுடியாவார். இவர் மீது கொலை முயற்சி, வெடிகுண்டு வைத்திருத்தல் மற்றும் அடிதடி வழக்குகள் உட்பட 5-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

சமீபத்தில் கூனிமேடு கடற்கரையில் நடைபெற்ற மாசிமகத் திருவிழா சாமி ஊர்வலத்தின் போது, சிவகுரு தரப்பினருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு தரப்பைச் சேர்ந்த இளைஞர்களுக்கும் இடையே கடுமையான தகராறு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக மரக்காணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். எனினும், இரு தரப்பினருக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் வெடித்த வண்ணம் இருந்ததால், இரு தரப்பையும் அழைத்து போலீசார் எச்சரித்தும் வந்துள்ளனர்.

மது அருந்தியபோது நடந்த கொடூரத் தாக்குதல்

இந்நிலையில், நேற்று இரவு கோட்டக்குப்பம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழ்புத்துப்பட்டு அடுத்த கங்கை நகர் பகுதியில் உள்ள ஒரு அடர்ந்த காட்டுப்பகுதிக்கு சிவகுரு சென்றுள்ளார். அங்கு, இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த மாதேஸ்வரன் மற்றும் புதுக்குப்பத்தைச் சேர்ந்த சரவணன் ஆகிய இரு நண்பர்களுடன் சேர்ந்து சிவகுரு மது அருந்திக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

அப்போது, முன்கூட்டியே திட்டமிட்டு ஆயுதங்களுடன் வந்த ஒரு கும்பல் திடீரென காட்டுப்பகுதிக்குள் நுழைந்தது. கண் இமைக்கும் நேரத்தில், அந்த கும்பல் சிவகுருவைச் சூழ்ந்துகொண்டு கத்தி மற்றும் அரிவாள்களால் சரமாரியாக வெட்டத் தொடங்கியது.

இத்தாக்குதலைக் கண்டு அதிர்ச்சியடைந்த சிவகுருவின் நண்பர்கள் மாதேஸ்வரன் மற்றும் சரவணன் ஆகிய இருவரும் அங்கிருந்து தப்பியோடி உயிர் பிழைத்தனர். கும்பலின் கொடூரத் தாக்குதலில் உடல் முழுவதும் பலத்த வெட்டுக் காயமடைந்த சிவகுரு, ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

காவல்துறை விசாரணை மற்றும் தற்போதைய நிலை

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு கோட்டக்குப்பம் காவல் ஆய்வாளர் விஸ்வநாதன் மற்றும் சார்பு ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்தனர். சிவகுருவின் உடலைக் கைப்பற்றிய போலீசார், உடற்கூறாய்விற்காக கணபதி செட்டிகுளம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், கோட்டக்குப்பம் துணை போலீஸ் சூப்பிரண்டு (DSP) ரூபன்குமார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று முதற்கட்ட விசாரணையைத் தொடங்கினார்.

முதற்கட்ட விசாரணையின் விவரங்கள்:

மாசிமகத் தீர்த்தவாரியின் போது ஏற்பட்ட முந்தைய பகையே இந்தக் கொலைக்கு முதன்மைக் காரணம் எனத் தெரியவந்துள்ளது. சிவகுருவை எதிர்த்தரப்பைச் சேர்ந்த கும்பல் பின்தொடர்ந்து வந்து, திட்டமிட்டு இந்த கொலையைச் செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பியோடிய சிவகுருவின் நண்பர்களிடமும் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

பதற்றம் - பலத்த போலீஸ் பாதுகாப்பு

கொலை செய்யப்பட்ட சிவகுருவிற்கு மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். மீனவ சமூகத்தைச் சேர்ந்த சிவகுரு வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், கூனிமேடுக்குப்பம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுப்பதற்காகவும், சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவதற்காகவும் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கொலையாளிகளைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

காட்டுப்பகுதிக்குள் புகுந்து ‘திபுதிபு’ என வந்த கும்பல்.. நண்பர்கள் கண்முன்னே ரவுடி சிவகுரு வெட்டிக்கொலை...
காட்டுப்பகுதிக்குள் புகுந்து ‘திபுதிபு’ என வந்த கும்பல்.. நண்பர்கள் கண்முன்னே ரவுடி சிவகுரு வெட்டிக்கொலை...
23 வயது கர்ப்பிணி..! மிருகத்தனமான தாக்குதல், பிறப்புறுப்பில் இரும்பு கம்பி - கொலைகார கணவனின் நாடகம்
23 வயது, 5வது கரு..! மிருகத்தனமான தாக்குதல், பிறப்புறுப்பில் இரும்பு கம்பி - கொலைகார கணவனின் நாடகம்
Neet Leak: ரூ.10 லட்சம் கொடுத்து வினாத்தாள் வாங்கியும், 720-க்கு 107 மார்க் தான் - பெற்றோரின் மருத்துவ பேராசை
Neet Leak: ரூ.10 லட்சம் கொடுத்து வினாத்தாள் வாங்கியும், 720-க்கு 107 மார்க் தான் - பெற்றோரின் மருத்துவ பேராசை
ஆம்புலன்ஸுக்கும் இடையூறு... நள்ளிரவில் கோவை இளைஞர்கள் அட்டூழியம்...
ஆம்புலன்ஸுக்கும் இடையூறு... நள்ளிரவில் கோவை இளைஞர்கள் அட்டூழியம்...
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

Leema Rose vs EPS | ”என் மேல நடவடிக்கையா? அப்போ பணத்தை கொடுங்க” EPS-ஐ நெருக்கும் லீமா ரோஸ்
4 Year Old boy Rescued |30 அடி போர்வெல் குழி!9 மணி நேர போராட்டம்..உயிருடன் சிறுவன் மீட்பு
பிறந்தநாள் அன்று மரணம்! மதுபோதையால் வந்த வினை! பதறவைக்கும் தஞ்சாவூர் விபத்து
தமிழர்களின் பொக்கிஷம்! ஆனைமங்கலம் செப்பேடு சோழ வரலாறு திரும்புகிறது!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thangam Thenarasu Vs Keerathana: அமைச்சர் கீர்த்தனாவின் பொய்க் கதைகளுக்கு கடிவாளம் போடுவது யார்.? கொந்தளித்த தங்கம் தென்னரசு
அமைச்சர் கீர்த்தனாவின் பொய்க் கதைகளுக்கு கடிவாளம் போடுவது யார்.? கொந்தளித்த தங்கம் தென்னரசு
US Iran War: ஈரான் மீது மிகப்பெரிய தாக்குதலா.? ‘புயலுக்கு முந்தைய அமைதி‘ என பதிவிட்டு பரபரப்பை கிளப்பிய ட்ரம்ப்
ஈரான் மீது மிகப்பெரிய தாக்குதலா.? ‘புயலுக்கு முந்தைய அமைதி‘ என பதிவிட்டு பரபரப்பை கிளப்பிய ட்ரம்ப்
கேடு கெட்ட கொளத்தூர்வாசிகள்... மக்களை கேவலமாக பேசிய முன்னாள் அமைச்சர் - இதெல்லாம் நியாயமா?
கேடு கெட்ட கொளத்தூர்வாசிகள்... மக்களை கேவலமாக பேசிய முன்னாள் அமைச்சர் - இதெல்லாம் நியாயமா?
CM Vijay: சென்னையை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்? மழையில் தத்தளிப்பதில் தப்புமா தலைநகர்?
CM Vijay: சென்னையை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்? மழையில் தத்தளிப்பதில் தப்புமா தலைநகர்?
Leema Rose vs EPS : என் மேல நடவடிக்கையா.!? அப்போ வாங்குனதை திருப்பி கொடுங்க- இபிஎஸ்யை கதற விடும் லீமா ரோஸ்
என் மேல நடவடிக்கையா.!? அப்போ வாங்குனதை திருப்பி கொடுங்க- இபிஎஸ்யை கதற விடும் லீமா ரோஸ்
Vishal: ராஜ்மோகனை அமைச்சர் ஆக்கியது வருத்தம் அளிக்கிறது.. நடிகர் விஷால் ஏன் இப்படி கூறுகிறார்?
Vishal: ராஜ்மோகனை அமைச்சர் ஆக்கியது வருத்தம் அளிக்கிறது.. நடிகர் விஷால் ஏன் இப்படி கூறுகிறார்?
Rajinikanth: ”CM விஜயை இரண்டு வருடங்கள் தொந்தரவு செய்யாமல் வேலை செய்ய விடுங்கள்” - ரஜினி கோரிக்கை
Rajinikanth: ”CM விஜயை இரண்டு வருடங்கள் தொந்தரவு செய்யாமல் வேலை செய்ய விடுங்கள்” - ரஜினி கோரிக்கை
SIP Scheme: வருமானம் குறைஞ்சிடுச்சா..! SIP திட்டத்தின் தவணை தொகையை குறைப்பது எப்படி? - முழு விவரம் இதோ
வருமானம் குறைஞ்சிடுச்சா..! SIP திட்டத்தின் தவணை தொகையை குறைப்பது எப்படி? - முழு விவரம் இதோ
Embed widget