மேலும் அறிய

மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிகரிக்கும் கள்ளச்சாராயம்... தொடரும் போலீசாரின் சாராய வேட்டை!

சீர்காழி அருகே தொடுவாய் கிராமத்தில் 200 லிட்டர் ஊறல் சாராயம் தரையில் கொட்டி அழிப்பு. தலைமறைவு குற்றவாளிக்கு மதுவிலக்கு அமலாக்கபிரிவு போலீசார் வலைவீச்சு.

கொரோனா வைரஸ் தொற்றின் பரவல் காரணமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி முழு ஊரடங்கு பிறப்பித்தது, மருந்தகங்கள், உணவகம், பால் கடைகள் தவிர்த்து வேறு எந்த ஒரு கடைகளும் திறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அரசு மதுபான கடையான டாஸ்மாக் கடை இயங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மது பிரியர்கள் கடந்த சில வாரங்களாக மது அருந்தாமல் செய்வதறியாது உள்ளனர்

மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிகரிக்கும் கள்ளச்சாராயம்... தொடரும் போலீசாரின் சாராய வேட்டை!

குறிப்பாக மது பானத்திற்கு அடிமையானவர்கள் பலர் எதாவது செய்து தங்களை மதுபோதையில் வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு மதுபான கடைகளின் சுவர்களில் ஓட்டை போட்டு மது பாட்டில்களை திருடுகின்றனர். சிலர் கள்ளச்சாராயத்தை தேடுகின்றனர். இதனை பயன்படுத்திக்கொண்ட கள்ளச்சாராய வியாபாரிகள் தற்போது பல இடங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதும், விற்பனையில் ஈடுபடுவதுமாய் உள்ளனர். 

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கடலோர கிராமமான தொடுவாய் கிராமத்தில் காட்டுப் பகுதியில் சாராய ஊறல் போட்டிருப்பதாக கிராமமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் மதுவிலக்கு அமலாக்கத்துறை பிரிவு போலீசார் காட்டுப் பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பக்கிங்காம் கால்வாய் அடுத்த காட்டுப்பகுதியில் 200 லிட்டர் ஊறல் சாராயம் புதைத்து வைக்கபட்டிருந்ததை கண்டுபிடித்தனர். இதனையடுத்து அதனை தோண்டி எடுத்து தரையில் கொட்டி அழித்தனர். இதனை தொடர்ந்து மதுவிலக்கு போலீசார் நடத்திய விசாரணையில் தொடுவாய் கிராமத்தை அடுத்த திருமுல்லைவாசல் கிராமத்தை சேர்ந்த விஜயகுமார் என்பவர் கள்ளச்சாராயம் காய்ச்சியது தெரியவந்தது. தலைமறைவான விஜயகுமாரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிகரிக்கும் கள்ளச்சாராயம்... தொடரும் போலீசாரின் சாராய வேட்டை!

மேலும் ஒருங்கிணைந்த மயிலாடுதுறை மாவட்டத்தில் 29 ஆயிரத்து 95 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு 23 ஆயிரத்து 296 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். மயிலாடுதுறை, செம்பனார்கோவில், குத்தாலம், தரங்கம்பாடி, சீர்காழி, புத்தூர் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களில் 5463 சிகிச்சை பெற்று வரும் நிலையில் 336 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.  

இது போன்று ஊரடங்கு காலத்தில் சட்டத்திற்கு புறம்பாக சாராய விற்பனையில் ஈடுபடும் நபர்களை தண்டித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

" தினமும் குடித்து விட்டு தகராறு " ஆத்திரத்தில் கணவனை கத்தியால் வெட்டிக் கொன்ற மனைவி
" துக்கம் துயரமானது - மயானத்தில் நடந்த பயங்கரம் " இறுதி ஊர்வல நடன தகராறில் இளைஞர் கொடூர கொலை
அண்ணன் மகளை ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்த சித்தப்பா !!
அண்ணன் மகளை ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்த சித்தப்பா !!
கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீர் நெஞ்சுவலி: மைதானத்திலேயே மயங்கி விழுந்த வாலிபர் உயிரிழப்பு
கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீர் நெஞ்சுவலி: மைதானத்திலேயே மயங்கி விழுந்த வாலிபர் உயிரிழப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சின்னப்பிள்ளை யார்? சட்டசபையில் கீர்த்தனா சொன்ன தகவலால் சர்ச்சை - ஆதாரத்துடன் நெட்டிசன்கள் கேள்வி!
சின்னப்பிள்ளை யார்? சட்டசபையில் அமைச்சர் கீர்த்தனா சொன்ன தகவலால் சர்ச்சை - ஆதாரத்துடன் நெட்டிசன்கள் கேள்வி!
India Vs Iran: இந்தியாவுக்கு ஷாக்.! கறுப்பு பட்டியலில் கப்பல்களை சேர்த்த ஈரான்; ஹார்முஸிலிருந்து எண்ணெய் வருமா.?
இந்தியாவுக்கு ஷாக்.! கறுப்பு பட்டியலில் கப்பல்களை சேர்த்த ஈரான்; ஹார்முஸிலிருந்து எண்ணெய் வருமா.?
Rajmohan:
Rajmohan: "மக்கு மாணவன் நான்.. அமைச்சர் ஆவேன்னு நினைக்கல.." மனம் திறந்த அமைச்சர் ராஜ்மோகன்!
Watch Video: வேலைக்காரன் மட்டுமில்லடா.. மூளைக்காரனும் நான்.. ஸ்கெட்ச் போட்டு இலங்கை வீரரை காலி செய்த மானவ் சுதர்! வீடியோ பாருங்க
Watch Video: வேலைக்காரன் மட்டுமில்லடா.. மூளைக்காரனும் நான்.. ஸ்கெட்ச் போட்டு இலங்கை வீரரை காலி செய்த மானவ் சுதர்! வீடியோ பாருங்க
Nepal Flood: பேரழிவை ஏற்படுத்திய நேபாள திடீர் வெள்ளம்; பரபரப்பு வீடியோ; சிக்கிய 57 தமிழர்களின் கதி என்ன.?
பேரழிவை ஏற்படுத்திய நேபாள திடீர் வெள்ளம்; பரபரப்பு வீடியோ; சிக்கிய 57 தமிழர்களின் கதி என்ன.?
3 Consecutive Days Holidays : செப்டம்பர் 4,5,6 தேதியில் தொடர்ந்து 3 நாள் விடுமுறை.! மாணவர்கள், அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்
செப்டம்பர் 4,5,6 தேதியில் தொடர்ந்து 3 நாள் விடுமுறை.! மாணவர்கள், அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் செல்போனுக்கு தடை! செப்டம்பர் 1 முதல் புதிய கட்டுப்பாடு...
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் செல்போனுக்கு தடை! செப்டம்பர் 1 முதல் புதிய கட்டுப்பாடு...
Holiday Special Bus : வார விடுமுறை, சுபமுகூர்த்தம், பௌர்ணமி கிரிவலம்! வெளியூர் செல்ல திட்டமா? சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு
வார விடுமுறை, சுபமுகூர்த்தம், பௌர்ணமி கிரிவலம்! வெளியூர் செல்ல திட்டமா? சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு
Embed widget