மேலும் அறிய
ஆன்லைன் கேமில் இருந்து வெளியே வர முடியாத சிறுவன் எடுத்த முடிவு? - சோகத்தில் பெற்றோர்
மதுரையில் அடுத்தடுத்து சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்ளக்கூடிய சம்பவம் அதிகரித்து வருவது மக்களிடையே ஒருவித பதட்டத்தை உருவாக்கிவருகிறது.

ஆன்லைன் விளையாட்டால் ஆபத்து
Source : whats app
மதுரையில் ஆன்லைன் கேமிற்கு அடிமையான 17 வயது சிறுவன் செல்போனை உடைத்துவிட்டு வீட்டு மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆன்லைன் கேம்களுக்கு முழுமையாக அடிமையாகியுள்ளார்
மதுரை மாநகர் காமராஜபுரம் வடக்குத்தெரு பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருடைய மகனான ஹரிஹரசுதன் என்ற 17 வயது சிறுவன் 11-ஆம் வகுப்பு வரை படித்து முடித்த நிலையில் தொடர்ந்து பள்ளிக்கு செல்லாமல் கடந்த ஒரு வருடமாக வீட்டிலயே இருந்து வந்துள்ளார். இந்நிலையில் தொடர்ச்சியாக வீட்டில் இருந்தபடி, பப்ஜி, ப்ரீ பயர் போன்ற ஆன்லைன் கேம்கள் விளையாடிபடியே இருந்துள்ளார். தொடர்ச்சியாக விளையாடிக்கொண்டே இருந்த நிலையில் பெற்றோர் விளையாட வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர். ஆனாலும் ஆன்லைன் கேம்களுக்கு முழுமையாக அடிமையாகியுள்ளார்.
மாடியில் இருந்து குதித்துள்ளார்
இதன் காரணமாக தொடர்ந்து மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இதையடுத்து நேற்று முன்தினம் சிறுவனின் பெற்றோர் வீட்டில் இருந்தபோது திடீரென மாடியில் இருந்து அலறல் சத்தம் கேட்டவுடன் மாடிக்கு சென்று பார்த்தபோது சிறுவன் திடீரென வீட்டு மாடியில் இருந்து தனது செல்போனை உடைத்து நொறுக்கிவிட்டு அருகில் உள்ள மாடியில் நின்று கொண்டிருந்த சிறுவர் ஒருவரை பார்த்து எனது அப்பா, அம்மாவை பார்த்துக் கொள் என கூறிவிட்டு மாடியில் இருந்து குதித்துள்ளார். இதனையடுத்து படுகாயங்களுடன் அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் உயிரிழந்ததாக கூறியுள்ளனர்.
இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்ளக்கூடிய சம்பவம் அதிகரித்து வருகிறது
இதனையடுத்து சிறுவனின் உடலானது மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உடற்கூறாய்விற்காக வைக்கப்பட்டது. சிறுவன் தொடர்ந்து செல்போனில் ஆன்லைனில் பப்ஜி, ப்ரீ பயர் விளையாடி கொண்டே இருந்ததால் மன உளைச்சலில் தற்கொலை செய்தாரா? வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்தும் கீரைத்துறை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரையில் அடுத்தடுத்து சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்ளக்கூடிய சம்பவம் அதிகரித்து வருவது மக்களிடையே ஒருவித பதட்டத்தை உருவாக்கிவருகிறது.
மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம். சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம், எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம், சென்னை - 600 028. தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - விருதுநகர் மக்களே.. போக்குவரத்தில் மாற்றம்.. இனி வந்த வழியா தான் போக வேண்டும் !
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Sellur Raju : மும்மூர்த்தி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது.. அமைச்சரை வம்புக்கு இழுத்த செல்லூர் ராஜூ !
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















