மேலும் அறிய

சென்னை, மயிலாடுதுறை உள்ளிட்ட 8 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை!

சென்னை, மயிலாடுதுறை உள்ளிட்ட 8 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய நபர்கள் தமிழ்நாட்டில் பல இடங்களில் இருப்பதாக தேசிய புலனாய்வு முகமை அவ்வப்போது விசாரணை நடத்தி பலரை கைது செய்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை, மயிலாடுதுறை உள்ளிட்ட 8 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சென்னையில் மண்ணடி, குரோம்பேட்டை, அண்ணாசாலையில் சோதனை நடைபெற்று வருகிறது. 

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஐந்து இடங்களில் இன்று என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். நீடூர்,எலந்தங்குடி, கிளியனூர்,உதிரங்குடி, உத்தங்குடி உள்ளிட ஐந்து இடங்களில்  சென்னையில் இருந்து வந்துள்ள என்ஐஏ எஸ்பி ஸ்ரீஜீத் தலைமையில் ஐந்து ஆய்வாளர் கொண்ட  அதிகாரிகள் ஐந்து குழுக்களாக பிரிந்து சோதனை மேற்கொண்டுள்ளனர்.


சென்னை, மயிலாடுதுறை உள்ளிட்ட 8 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை!

மயிலாடுதுறையில் சட்டத்துக்கு புறம்பாக மர்ம கும்பல் ஒன்று செயல்பட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதில் ஒருவர் கார் தப்பிச் செல்வதை அறிந்த போலீசார், அந்த காரை பிப்ரவரி 21 ம் தேதி மயிலாடுதுறை ரயில் நிலையம் அருகே காவல்துறையினர் மடக்கிப் பிடித்தனர். அப்போது, அந்த காரில் நீடூரை சேர்ந்த சாதிக் பாஷா, ஜஹபர்அலி, கோவை முகமது ஆசிக்,  காரைக்கால் முகமது இர்ஃபான், சென்னை அயனாவரம் ரஹ்மத்  இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர்களை  காவல்துறையினர் விசாரணைத்தபோது போலீசாரை சாதிக் பாஷா தூப்பாகியை காட்டி மிரட்டியுள்ளர். இதனை அடுத்து அவர்கள் ஐந்து பேரையும் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இவர் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு நிதி மற்றும் ஆட்களை திரட்டும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதுகுறித்து தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


சென்னை, மயிலாடுதுறை உள்ளிட்ட 8 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை!

சாதிக் பாஷா மற்றும் அவரது கூட்டாளிகள் கலிபா பார்ட்டி ஆப் இந்தியா, கலிபா  பிரண்ட் ஆஃப் இந்தியா உள்ளிட்ட அமைப்புகளை நடத்தி வந்துள்ளன. இவர்கள் தமிழகத்தில் மிகப்பெரிய தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தாகவும், இதன் பின்னணியில் தமிழகத்தில் செயல்படும் பயங்கரவாத அமைப்பு ஒன்று எடுப்பதை என்ஐஏ அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.


சென்னை, மயிலாடுதுறை உள்ளிட்ட 8 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை!

அதனை தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் விசாரணை நடத்திவரும் என்ஐஏ அதிகாரிகள் இந்த அமைப்பு மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து சமீபத்தில் டெல்லி சென்ற தமிழக கவர்னர் ரவி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த போது தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் இந்த அமைப்புக்கு பணம் எங்கிருந்து வருகிறது. அதன் பின்னணியில் உள்ள ஒட்டுமொத்த கும்பல் எது? என்பது குறித்து அதிகாரிகள் தகவல் திரட்டிய நிலையில், இன்று என்ஐஏ அதிகாரிகள் மயிலாடுதுறையில் சாதிக் பாஷாவுக்கு சொந்தமான ஐந்து இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். சோதனை தொடர்பாக அதிகாரிகள் தகவல் தெரிவிக்க மறுத்த நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் என்ஐஏ சோதனையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

மதுக்கரையில் செயின் பறிப்பு வழக்கு: தனிப்படை விசாரணையில் சிக்கிய குற்றவாளி
மதுக்கரையில் செயின் பறிப்பு வழக்கு: தனிப்படை விசாரணையில் சிக்கிய குற்றவாளி
5 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு... பெண்ணை வன்புணர்ச்சி செய்த நபருக்கு 10 ஆண்டு ஜெயில்...
5 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு... பெண்ணை வன்புணர்ச்சி செய்த நபருக்கு 10 ஆண்டு ஜெயில்...
வீட்டு வாசலில் போதை ஆசாமி உறக்கம்... உயிர் பயத்தில் தவித்த தவித்த தாய், மகள்கள்...
வீட்டு வாசலில் போதை ஆசாமி உறக்கம்... உயிர் பயத்தில் தவித்த தவித்த தாய், மகள்கள்...
" மனைவியை வேறு ஒருவருடன் அந்த கோலத்தில் பார்த்த கணவர் " திருமணம் மீறிய உறவு !! நடந்தது என்ன ?

வீடியோ

Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ
சிறுமிக்கு தாலி கட்டிய இளைஞர் சிங்கப்பெண் படையை கண்டு ஓட்டம்! POCSO-வில் கைது
சி.விஜயபாஸ்கர் ராஜினாமா அடுத்து திமுக-வா? தவெக-வா? எடப்பாடி பழனிசாமி ஷாக்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
C Mahendran CPI: தவெகவில் இணைந்தது ஏன்.? இ.கம்யூனிஸ்ட் சி.மகேந்திரன் சொன்ன முக்கிய காரணம்
தவெகவில் இணைந்தது ஏன்.? இ.கம்யூனிஸ்ட் சி.மகேந்திரன் சொன்ன முக்கிய காரணம்
C Mahendran Joins TVK: தவெகவில் இணைந்தார் சி.மகேந்திரன்.! கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஷாக் கொடுத்த விஜய்
தவெகவில் இணைந்தார் சி.மகேந்திரன்.! கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஷாக் கொடுத்த விஜய்
TAMILNADU RAIN ALERT : அடுத்த 2 மணி நேரம்.! சூறைக்காற்று, இடி, மின்னலோடு வெளுக்கப்போகுது மழை- எந்த எந்த மாவட்டங்கள்.? வெதர்மேன் அலர்ட்
அடுத்த 2 மணி நேரம் .! சூறைக்காற்று, இடி, மின்னலோடு வெளுக்கப்போகுது மழை- எந்த எந்த மாவட்டங்கள்.?
மாலையில் நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்.! பல்டி அடித்த தங்கம் விலை- ஒரு கிராமுக்கே இவ்வளவா.!!
மாலையில் நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்.! பல்டி அடித்த தங்கம் விலை- ஒரு கிராமுக்கே இவ்வளவா.!!
EPS: யாருங்க சொன்னா..! ”எனது மகன் மிதுன் அரசியலுக்கு வரமாட்டார்” - எடப்பாடி பழனிசாமி உறுதி
யாருங்க சொன்னா..! ”எனது மகன் மிதுன் அரசியலுக்கு வரமாட்டார்” - எடப்பாடி பழனிசாமி உறுதி
Kovai Neet Student : நீட் தேர்வு பயம்.! கோவை மாணவி தற்கொலை... தந்தை மொபைலுக்கு வந்த அந்த 'கடைசி மெசேஜ்' என்ன?
நீட் தேர்வு பயம்.! கோவை மாணவி தற்கொலை... தந்தை மொபைலுக்கு வந்த அந்த 'கடைசி மெசேஜ்' என்ன?"
எம்ஜிஆர், கலைஞர், ஜெ., ஈபிஎஸ், ஸ்டாலின் யாராலும் சாத்தியம் ஆகாதது விஜயால் சாத்தியம்; அன்புமணி உருக்கம்
எம்ஜிஆர், கலைஞர், ஜெ., ஈபிஎஸ், ஸ்டாலின் யாராலும் சாத்தியம் ஆகாதது விஜயால் சாத்தியம்; அன்புமணி உருக்கம்
CA Final Result: சிஏ இறுதித் தேர்வு முடிவுகள் வெளியீடு: காண்பது எப்படி? தேர்ச்சி விகிதம், டாப்பர் லிஸ்ட் இதோ!
CA Final Result: சிஏ இறுதித் தேர்வு முடிவுகள் வெளியீடு: காண்பது எப்படி? தேர்ச்சி விகிதம், டாப்பர் லிஸ்ட் இதோ!
Embed widget