மேலும் அறிய

உணவு இல்லை என சொன்ன தாயை, அரிவாள்மனையால் வெட்டி கொலை செய்த மகன். குடிபோதையில் கொடூரம்

உணவு இல்லை என்று கூறிய தாயை குடிபோதையில் அரிவாள்மனையால் வெட்டி கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டுள்ளார்

சென்னை அடுத்துள்ள வேளச்சேரி நேரு நகர், திரு.வி.க தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம்.  இவரது மனைவி லட்சுமி வயது 50. தம்பதிக்கு செல்வி என்ற மகளும், மூர்த்தி  என்ற மகனும் உள்ளனர். பிளம்பர் வேலை செய்யும் மூர்த்தி மது அருந்திவிட்டு அடிக்கடி மனைவியுடன் தகராறில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் கடந்த 3 வருடத்திற்கு முன் மூர்த்தியின் மனைவி மூர்த்தியை பிரிந்து சென்றார்.

உணவு இல்லை என சொன்ன தாயை, அரிவாள்மனையால் வெட்டி கொலை செய்த மகன். குடிபோதையில் கொடூரம்
இதனையடுத்து தொடர்ந்து பொறுப்பில்லாமல் ஊர் சுற்றுவதை வேலையாக மூர்த்தி செய்து வந்துள்ளார். இவர் கடந்த பல மாதங்களாக வேலைக்கு செல்லாமல் கையில் கிடைக்கும் பணத்தில் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து, தாயிடம் வாய்த்தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, குடிபோதையில் வீட்டிற்கு வந்த மூர்த்தி உணவு சாப்பிட்டுள்ளார். பின், மீண்டும் குடித்துவிட்டு தனக்கு பசிப்பதாக கூறினார். சாப்பாடு தீர்ந்துவிட்டதாக அவரின் தாய் கூறினார்.
 
இதனால் ஆத்திரம் அடைந்த மூர்த்தி, சமையல் அறையில் இருந்த அரிவாள்மனையை எடுத்துவந்து, தாய் லட்சுமியின் வயிறு உள்பட பல்வேறு இடங்களில் சரமாரியாக வெட்டியுள்ளார். அவர் ரத்தவெள்ளத்தில் மயங்கி விழுந்ததும் மூர்த்தி தப்பி ஓடிவிட்டார். இதன்பிறகு அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்தபோது லட்சுமி சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டது தெரிந்தது.


உணவு இல்லை என சொன்ன தாயை, அரிவாள்மனையால் வெட்டி கொலை செய்த மகன். குடிபோதையில் கொடூரம்
இதுபற்றி அறிந்ததும் வேளச்சேரி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று லட்சுமியின் சடலத்தை கைப்பற்றி, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து நண்பரின் வீட்டில் பதுங்கியிருந்த மூர்த்தியை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். பின்னர் இந்தக் கொலை வழக்கு தொடர்பாக லட்சுமியின் மகன் மூர்த்தியிடம் போலீஸார் விசாரணை நடத்தி அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
உணவு இல்லை என சொன்ன தாயை, அரிவாள்மனையால் வெட்டி கொலை செய்த மகன். குடிபோதையில் கொடூரம்
 
இதுகுறித்து வேளச்சேரி காவல்துறையினர் தெரிவிக்கையில் , மூர்த்திக்கு திருமணமாகிவிட்டது. ஆனால் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்  கணவன் மனைவிக்கு இடையே நடந்த தகராறு காரணமாக மூர்த்தியை அவரின் மனைவி பிரிந்து சென்றுவிட்டார். மதுப்பழக்கத்துக்கு அடிமையான மூர்த்தி சரிவர வேலைக்குச் செல்வதில்லை. சம்பவம் நடைபெற்ற அன்று இதேபோல தாய் மற்றும் மகனுக்கு சண்டை ஏற்பட்டு உள்ளது அதில் தாயை மூர்த்தி கொலை செய்ததாக" தெரிவித்தனர்.
 
பெற்ற தாயை குடிபோதையில் மகன் கொலை செய்த சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
 
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இனி தி.மு.க. வழிதான்! சந்திரசேகர்ராவ் போட்ட புது ஸ்கெட்ச்!  சென்னைக்கு வந்த பி.ஆர்.எஸ். நிர்வாகிகள்!
இனி தி.மு.க. வழிதான்! சந்திரசேகர்ராவ் போட்ட புது ஸ்கெட்ச்! சென்னைக்கு வந்த பி.ஆர்.எஸ். நிர்வாகிகள்!
Breaking News LIVE, Sep 26: தமிழக ஆழ்கடலில் எண்ணெய் எரிவாயு எடுக்க ஒ.என்.ஜி.சி, வேதாந்த நிறுவனங்கள் போட்டி 
Breaking News LIVE, Sep 26: தமிழக ஆழ்கடலில் எண்ணெய் எரிவாயு எடுக்க ஒ.என்.ஜி.சி, வேதாந்த நிறுவனங்கள் போட்டி 
இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்கவுக்கு மயிலாடுதுறை எம்பி சுதா கடிதம்: என்ன விஷயம்?
இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்கவுக்கு மயிலாடுதுறை எம்பி சுதா கடிதம்: என்ன விஷயம்?
Tamilnadu RoundUp: மு.க.ஸ்டாலின் டெல்லி பயணம்! முதல்வருக்கு கமல் நன்றி! தற்போது வரை தமிழ்நாட்டில்!
Tamilnadu RoundUp: மு.க.ஸ்டாலின் டெல்லி பயணம்! முதல்வருக்கு கமல் நன்றி! தற்போது வரை தமிழ்நாட்டில்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Savukku Shankar : சவுக்கு சங்கர் குண்டாஸ் ரத்து! உடனே விடுதலை பண்ணுங்க.. ஆனாThanjavur Mayor Angry : ”வேலை நேரத்துல PHONE-ஆ”டென்ஷனாகி பிடுங்கிய மேயர் பதறிய பெண் அதிகாரிKenisha Reveals Jayam Ravi Relationship : ”DIVORCE நோட்டீஸ் அனுப்பிட்டு! ஜெயம் ரவி என்னிடம் வந்தார்”Jayam Ravi Aarthi Issue | வீட்டுக்குள் விடாத ஆர்த்தி?ஜெயம் ரவி பரபரப்பு புகார்!”காரை மீட்டு கொடுங்க”

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இனி தி.மு.க. வழிதான்! சந்திரசேகர்ராவ் போட்ட புது ஸ்கெட்ச்!  சென்னைக்கு வந்த பி.ஆர்.எஸ். நிர்வாகிகள்!
இனி தி.மு.க. வழிதான்! சந்திரசேகர்ராவ் போட்ட புது ஸ்கெட்ச்! சென்னைக்கு வந்த பி.ஆர்.எஸ். நிர்வாகிகள்!
Breaking News LIVE, Sep 26: தமிழக ஆழ்கடலில் எண்ணெய் எரிவாயு எடுக்க ஒ.என்.ஜி.சி, வேதாந்த நிறுவனங்கள் போட்டி 
Breaking News LIVE, Sep 26: தமிழக ஆழ்கடலில் எண்ணெய் எரிவாயு எடுக்க ஒ.என்.ஜி.சி, வேதாந்த நிறுவனங்கள் போட்டி 
இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்கவுக்கு மயிலாடுதுறை எம்பி சுதா கடிதம்: என்ன விஷயம்?
இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்கவுக்கு மயிலாடுதுறை எம்பி சுதா கடிதம்: என்ன விஷயம்?
Tamilnadu RoundUp: மு.க.ஸ்டாலின் டெல்லி பயணம்! முதல்வருக்கு கமல் நன்றி! தற்போது வரை தமிழ்நாட்டில்!
Tamilnadu RoundUp: மு.க.ஸ்டாலின் டெல்லி பயணம்! முதல்வருக்கு கமல் நன்றி! தற்போது வரை தமிழ்நாட்டில்!
சென்னை வானில் வட்டமடித்து தத்தளித்த விமானங்கள்.. பெங்களூருவில் தரை இறக்கம்.. காரணம் என்ன?
சென்னை வானில் வட்டமடித்து தத்தளித்த விமானங்கள்.. பெங்களூருவில் தரை இறக்கம்.. காரணம் என்ன?
Chennai Rains: இரவெல்லாம் வெளுத்த மழை! வெள்ளக்காடாய் மாறிய சாலைகள் - சென்னைவாசிகள் அவதி
Chennai Rains: இரவெல்லாம் வெளுத்த மழை! வெள்ளக்காடாய் மாறிய சாலைகள் - சென்னைவாசிகள் அவதி
Savukku sankar : “எப்போதும் வீரியம் குறையாது” - சலங்கை கட்டிய சவுக்கு சங்கர் !
Savukku sankar : “எப்போதும் வீரியம் குறையாது” - சலங்கை கட்டிய சவுக்கு சங்கர் !
Chennai Rains:
Chennai Rains: "ரேஸ் ரோட் vs ரெயின் ரோட்" சென்னை சாலைகளை கேலி செய்த கார்த்தி சிதம்பரம்!
Embed widget