மேலும் அறிய

தாய் வீட்டுக்குச் செல்ல மறுத்த கணவர்: 7 மாத குழந்தையை கொன்று தாய் தற்கொலை!

தன்னுடைய மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், வரதட்சணை கொடுமையால் தன்னுடைய மகள் தற்கொலை செய்திருக்கலாம் என்றும் அவரது தந்தை புகார் அளித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அடுத்த நாட்றம்பாளையம் அருகே உள்ள மேட்டுக்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் வயது (30). இவர் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி தீபா வயது (23). இவர்களுக்கு திருமணம் ஆகி 5 ஆண்டுகள் ஆகிறது. இந்த தம்பதியருக்கு வர்ணிதா வயது (3) மற்றும் 7 மாதத்தில் தனுஸ்ரீ என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளது. இவர்கள்  மேட்டுக்கொட்டாய் கிராமத்தில் வசித்து வருகின்றனர். மேலும்  கணவன் மற்றும் மனைவியிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று  உரிகம் கிராமத்தில் உள்ள தாய் வீட்டிற்கு அழைத்து செல்லும்படி வெங்கடேசிடம், தீபா கூறியுள்ளார். அப்போது வெள்ளிக்கிழமை அழைத்து செல்வதாக வெங்கடேஷ் கூறி விட்டு வெளியே சென்றதாக தெரிகிறது.

 


தாய் வீட்டுக்குச் செல்ல மறுத்த கணவர்: 7 மாத குழந்தையை கொன்று தாய் தற்கொலை!


இந்த நிலையில் வர்ணிதாவை வீட்டில் தூங்க வைத்து விட்டு குழந்தை தனுஸ்ரீயுடன் தீபா திடீரென மாயமானார். தீபாவின்  மாமியார் தங்கம்மா மற்றும் உறவினர்கள் அனைவரும் பல இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து அஞ்செட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். காவல்துறையினர் மற்றும் ஊர் பொதுமக்கள் ஒருபுறமும் தேடினர். ஆனால் இருவரும் எங்கு சென்றனர் என்ற விவரம் கிடைக்கவில்லை . இதற்கிடையே அவர்கள் வீட்டின் அருகே உள்ள கிணற்றில் ஒரு பெண்ணும், குழந்தையும் பிணமாக மிதப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.

காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். கிணற்றில் பிணமாக கிடந்த 2 உடல்களையும் மீட்டு விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் மாயமான தீபா, அவருடைய குழந்தை தனுஸ்ரீ இருவரும்தான் என்பது தெரியவந்தது. மேலும் குடும்ப தகராறில் மனம் உடைந்த தீபா, தன்னுடைய குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்து விட்டு தானும் கிணற்றுக்குள் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். பின்னர் இருவரது உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 


தாய் வீட்டுக்குச் செல்ல மறுத்த கணவர்: 7 மாத குழந்தையை கொன்று தாய் தற்கொலை!

 

அதனைத்தொடர்ந்து தீபாவின் தந்தை கிருஷ்ணன் அஞ்செட்டி காவல்நிலையத்தில் புகார் செய்தார். அதில், தன்னுடைய மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், வரதட்சணை கொடுமையால் தன்னுடைய மகள் தற்கொலை செய்திருக்கலாம் என்றும் கூறியுள்ளார். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள் திருமணம் ஆகி 5 ஆண்டுகளுக்குள் இளம்பெண் குழந்தையை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்துள்ளதால் ஓசூர் உதவி மாவட்ட ஆட்சியர் நிசாந்த் கிருஷ்ணா விசாரணை நடத்தி வருகிறார். தேன்கனிக்கோட்டை அருகே குழந்தையை கொன்று இளம்பெண் தற்கொலை செய்த சம்பவம் அஞ்செட்டி அருகே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்
Helplines Sneha Suicide Prevention helpline – 044 -2464000 (24 hours) State suicide prevention helpline – 104 (24 hours),iCall Pychosocial helpline – 022-25521111 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Happy New Year 2026: புத்தாண்டை வரவேற்ற வானிலை.. சென்னையில் கொட்டிய கனமழை.. தமிழக நிலவரம்
Happy New Year 2026: புத்தாண்டை வரவேற்ற வானிலை.. சென்னையில் கொட்டிய கனமழை.. தமிழக நிலவரம்
New Year 2026 Celebrations: புத்தாண்டு கொண்டாட்டம், உள்ளூர் தொடங்கி உலகம் வரை.. ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் வீடியோ
New Year 2026 Celebrations: புத்தாண்டு கொண்டாட்டம், உள்ளூர் தொடங்கி உலகம் வரை.. ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் வீடியோ
PONGAL GIFT TOKEN: வீட்டிற்கே வருது பொங்கல் பரிசு டோக்கன்.! எப்போது? யாருக்கெல்லாம் கிடைக்கும்? வெளியான சூப்பர் அப்டேட்
வீட்டிற்கே வருது பொங்கல் பரிசு டோக்கன்.! எப்போது? யாருக்கெல்லாம் கிடைக்கும்? வெளியான சூப்பர் அப்டேட்
New Year 2026: புத்தாண்டு பிறந்த முதல் நாடு; நமக்கு முன்பே புத்தாண்டு கொண்டாடும் நாடுகள் எவை.?
புத்தாண்டு பிறந்த முதல் நாடு; நமக்கு முன்பே புத்தாண்டு கொண்டாடும் நாடுகள் எவை.?
ABP Premium

வீடியோ

Jananayagan Bhagavanth Kesari | பகவந்த் கேசரி ரீமேக்கா? ஜனநாயகன் பட சீக்ரெட்! இயக்குநர் OPENS UP
Manickam Tagore | ”வைகோ, திருமா தலையிடாதீங்க” மாணிக்கம் தாகூர் பரபர POST! நடந்தது என்ன?
DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்
Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Happy New Year 2026: புத்தாண்டை வரவேற்ற வானிலை.. சென்னையில் கொட்டிய கனமழை.. தமிழக நிலவரம்
Happy New Year 2026: புத்தாண்டை வரவேற்ற வானிலை.. சென்னையில் கொட்டிய கனமழை.. தமிழக நிலவரம்
New Year 2026 Celebrations: புத்தாண்டு கொண்டாட்டம், உள்ளூர் தொடங்கி உலகம் வரை.. ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் வீடியோ
New Year 2026 Celebrations: புத்தாண்டு கொண்டாட்டம், உள்ளூர் தொடங்கி உலகம் வரை.. ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் வீடியோ
PONGAL GIFT TOKEN: வீட்டிற்கே வருது பொங்கல் பரிசு டோக்கன்.! எப்போது? யாருக்கெல்லாம் கிடைக்கும்? வெளியான சூப்பர் அப்டேட்
வீட்டிற்கே வருது பொங்கல் பரிசு டோக்கன்.! எப்போது? யாருக்கெல்லாம் கிடைக்கும்? வெளியான சூப்பர் அப்டேட்
New Year 2026: புத்தாண்டு பிறந்த முதல் நாடு; நமக்கு முன்பே புத்தாண்டு கொண்டாடும் நாடுகள் எவை.?
புத்தாண்டு பிறந்த முதல் நாடு; நமக்கு முன்பே புத்தாண்டு கொண்டாடும் நாடுகள் எவை.?
Edappadi Palanisamy: “உயிர் பயத்திலேயே தமிழக மக்கள் வாழ வேண்டுமா.?“ - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி
“உயிர் பயத்திலேயே தமிழக மக்கள் வாழ வேண்டுமா.?“ - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி
Sara Tendulkar Video: அந்த அன்பு தெய்வத்தின் மகளா இவள்.! கோவாவில் கையில் பீர் பாட்டிலுடன் வலம் வந்த சாரா டெண்டுல்கர்
அந்த அன்பு தெய்வத்தின் மகளா இவள்.! கோவாவில் கையில் பீர் பாட்டிலுடன் வலம் வந்த சாரா டெண்டுல்கர்
Russia Putin Ukraine War: “உக்ரைன் போரில் வெற்றி பெறுவோம்“; ஆண்டின் கடைசி உரையில் கூறிய புதின்; அப்போ ட்ரம்ப்போட முயற்சி.?!
“உக்ரைன் போரில் வெற்றி பெறுவோம்“; ஆண்டின் கடைசி உரையில் கூறிய புதின்; அப்போ ட்ரம்ப்போட முயற்சி.?!
Gold Rate Dec.31st: புத்தாண்டில் இன்ப அதிர்ச்சி; ஒரு லட்சம் ரூபாய்க்கு கீழ் விலை குறைந்த தங்கம்; தற்போதைய விலை என்ன.?
புத்தாண்டில் இன்ப அதிர்ச்சி; ஒரு லட்சம் ரூபாய்க்கு கீழ் விலை குறைந்த தங்கம்; தற்போதைய விலை என்ன.?
Embed widget