மேலும் அறிய

கரூர் அருகே 2 பெண் குழந்தைகளை கிணற்றில் வீசி தாய் தற்கொலை!

மனநலம் பாதிக்கப்பட்ட சரண்யா 100 அடி ஆழம் உள்ள கிணற்றில் மகளை வீசிவிட்டு வீட்டுக்கு வந்தார். பின்னர் மற்றொரு மகளையும் தூக்கிக்கொண்டு கிணற்றில் போட்டு விட்டு தானும் குதித்து தற்கொலை செய்தார்.

கரூர் மாவட்டம், கடவூர் தாலுகா பூசாரி பட்டியைச் சேர்ந்தவர் சக்தி வயது 35 இவர் கரூரில் உள்ள டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி சரண்யா வயது (30) இவர்களது மகள்கள் கனிஷ்கா வயது (6), பூவிஷா வயது (3) இவர்களுடன் சக்தியின் தந்தை கருப்புசாமி, தாய் நாச்சம் வசித்து வருகின்றனர்.

சரண்யா மனநலம் பாதிக்கப்பட்டதால் கடந்த இரண்டு ஆண்டுகளாக இதற்கான சிகிச்சை பெற்று வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு சரண்யா,சக்தி தனது இரண்டு குழந்தைகளுடன் ஒரு அறையிலும் கருப்பஸ்வாமி, நாச்சம் மற்றொரு அறையில் தூங்கினார் இந்த நிலையில் அதிகாலை 2 மணியளவில் தூங்கிக்கொண்டிருந்த சரண்யா திடீரென கண் விழித்து ஒரு மகனைத் தூக்கிக் கொண்டு வெளியே வந்தார்.


கரூர் அருகே 2 பெண் குழந்தைகளை கிணற்றில் வீசி தாய் தற்கொலை!

அவரது வீட்டு அருகே உள்ள 100 அடி ஆழம் உள்ள கிணற்றில் மகளை வீசிவிட்டு வீட்டுக்கு வந்தார். பின்னர் மற்றொரு மகளையும் தூக்கிக்கொண்டு கிணற்றில் போட்டு விட்டு தானும் குதித்து தற்கொலை செய்தார். பின்னர் காலை சக்தி வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த மனைவியை காணவில்லை என அக்கம் பக்கம் தேடி பார்த்த நிலையில் அருகில் இருந்த கிணற்றில் அவர் குதித்துள்ள தகவல் தெரிய வர உடனே அங்கு சென்று பார்த்தனர். அப்போது தாயும் இரண்டு மகள்களும் கிணற்றில் இறந்து கிடந்த உள்ளனர். உடனே பாலவிடுதி போலீசாருக்கு தகவல் அறிந்ததும் பின்னர் புதிய தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X

 


கரூர் அருகே 2 பெண் குழந்தைகளை கிணற்றில் வீசி தாய் தற்கொலை!


தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அருகிலிருந்த இளைஞர்களுடன் தீயணைப்பு படை வீரர்கள் சரண்யா மற்றும் அவரது மகள் பூவிஷா ஆகியோர் உடலை மீட்டனர். அதன் பின்னர் கிணற்றில் மோட்டாரை வைத்து தண்ணீரை வெளியேற்றிய பிறகு 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு இன்னொரு மகளான கனிஷ்கா வையும் மீட்டனர். இந்த தகவல் அறிந்து குளித்தலை போலீஸ் துணை சூப்பிரண்ட் ஸ்ரீதர், இன்ஸ்பெக்டர்கள் ராஜ்குமார் தோகமலை, பிரபாகரன் பாலவிடுதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து சம்பவம் குறித்து விசாரணையை மேற்கொண்டார்.


கரூர் அருகே 2 பெண் குழந்தைகளை கிணற்றில் வீசி தாய் தற்கொலை!

பின்னர் அவர்களது உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காந்திகிராம அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து பாலவிடுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். மனநலம் பாதிக்கப்பட்ட பெண் தனது இரண்டு குழந்தைகளுடன் கிணற்றில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

நெஞ்சை பதறவைத்த சம்பவம் : போக்சோ நீதிமன்றம் அதிரடி - ஆட்டோ ஓட்டுநருக்கு ஆயுள் தண்டனை
நெஞ்சை பதறவைத்த சம்பவம் : போக்சோ நீதிமன்றம் அதிரடி - ஆட்டோ ஓட்டுநருக்கு ஆயுள் தண்டனை
Crime: அடங்காத காதல்.. கணவனை கொன்ற மனைவி.. உதவிய முன்னாள், இந்நாள் காதலன்!
Crime: அடங்காத காதல்.. கணவனை கொன்ற மனைவி.. உதவிய முன்னாள், இந்நாள் காதலன்!
கள்ளக் காதல் விவகாரம் !! டிராக்டர் டிரைவர் அடித்துக் கொலை - 3 பேர் அதிரடி கைது
கள்ளக் காதல் விவகாரம் !! டிராக்டர் டிரைவர் அடித்துக் கொலை - 3 பேர் அதிரடி கைது
கோவை கொடூரம்; மீன் பிடிக்கச் சென்ற இடத்தில் தகராறு ! நண்பனை அடித்துக் கொன்று புதைத்த சிறுவர்கள்
கோவை கொடூரம்; மீன் பிடிக்கச் சென்ற இடத்தில் தகராறு ! நண்பனை அடித்துக் கொன்று புதைத்த சிறுவர்கள்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Elephant Attack | கையில் குழந்தையுடன் போராடிய கணவன்..யானை மிதித்து தாய் பலி!வைரல் வீடியோ
PTR Palanivel Thiagarajan | ”தோத்துருவேனு நினைக்கல! விஜய்க்கு இவ்ளோ ஓட்டா” PTR எமோஷனல் பதிவு
TVK vs Congress | மனக்கசப்பில் ராகுல்காந்தி? தவெக - காங்கிரஸ் உரசல்! விஜய் கேரளா போகாதது ஏன்?
திருமணம் செய்ய மறுத்த மாணவி இளைஞரின் கொலைவெறிச் செயல் திருச்சியில் கொடூரம்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt Vs GCC: ஜார்ஜ் கோட்டையை உரசும் ரிப்பன் பில்டிங்..! CM-ஐ இதுவரை சந்திக்காத மேயர் - கவுன்சிலர்கள் ஆப்சென்ட்
ஜார்ஜ் கோட்டையை உரசும் ரிப்பன் பில்டிங்..! CM-ஐ இதுவரை சந்திக்காத மேயர் - கவுன்சிலர்கள் ஆப்சென்ட்
CM Vijay: சிஎம் விஜய் பிடியில் செந்தில் பாலாஜி குடுமி.. ED கோரிக்கையை தவெக அரசு ஏற்குமா? திமுக மூவ் என்ன?
சிஎம் விஜய் பிடியில் செந்தில் பாலாஜி குடுமி.. ED கோரிக்கையை தவெக அரசு ஏற்குமா? திமுக மூவ் என்ன?
Pereol Diesel Price: போச்சு..! மீண்டும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி அறிவிப்பு - லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
போச்சு..! மீண்டும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி அறிவிப்பு - லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
Seeman: CM விஜய்க்கு சவால் விட்டு புலம்பிய சீமான் “திணறிட்டேன், எப்படி கொடுக்குறீங்கனு நானும் பார்க்கிறேன்”
CM விஜய்க்கு சவால் விட்டு புலம்பிய சீமான் - “திணறிட்டேன், எப்படி கொடுக்குறீங்கனு நானும் பார்க்கிறேன்”
ஆபாசமாக பேசிய அனிதா ராதாகிருஷ்ணன்.. திமுக தலைமையை வெளுத்துவாங்கிய மாணிக்கம் தாகூர்!
ஆபாசமாக பேசிய அனிதா ராதாகிருஷ்ணன்.. திமுக தலைமையை வெளுத்துவாங்கிய மாணிக்கம் தாகூர்!
Vanni Arasu: துணை முதல்வர் பதவி கேளுங்க.. திருமாவை வற்புறுத்திய வன்னி அரசு.. அடுத்த திருப்பம்!
Vanni Arasu: துணை முதல்வர் பதவி கேளுங்க.. திருமாவை வற்புறுத்திய வன்னி அரசு.. அடுத்த திருப்பம்!
இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!
இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!
EPS: சமரசத்துக்கு கூப்பிட்ட இபிஎஸ்... இறங்கி வருவார்களா சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி?
EPS: சமரசத்துக்கு கூப்பிட்ட இபிஎஸ்... இறங்கி வருவார்களா சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி?
Embed widget