மேலும் அறிய

தர்மபுரி : ”புகாரளித்தும் நடவடிக்கை இல்லைங்க..” பள்ளி குழந்தைகளுடன் தீக்குளிக்க முயற்சி..

தர்மபுரியில், பொதுப் பாதையை ஆக்கிரமித்து கொலை மிரட்டல் விடுப்பவர்கள்  மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென குழந்தைகள் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு.

பொதுப் பாதையை ஆக்கிரமித்து கொலை மிரட்டல் விடுப்பவர்கள்  மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென குழந்தைகள் உள்பட 10-க்கும்  மேற்பட்டோர் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


தர்மபுரி : ”புகாரளித்தும் நடவடிக்கை இல்லைங்க..” பள்ளி குழந்தைகளுடன் தீக்குளிக்க முயற்சி..

தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த வேப்பம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பூதிநத்தம் கிராமத்தைச் சேர்ந்த திலகவதி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், தங்களது விவசாய நிலத்தில் வசித்து வருகின்றனர்.  கிராமத்தில் இருந்து விவசாய நிலங்களுக்கு செல்வதற்காக 12 அடி சாலையை காலங்காலமாக  பயன்படுத்தி வந்துள்ளனர்.  இந்தப் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற வேடியப்பன் கோயிலுக்கு தலைமுறை தலைமுறையாக மக்கள் அடிக்கடி சென்று வருகின்றனர்.  இந்நிலையில் அந்தப் பகுதியில் கண்ணன் என்பவரும், அவரது குடும்பத்தினரும் விவசாய நிலம் வாங்கியதோடு,  பொதுமக்கள் செல்லும் 12 அடி பாதையை அவர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறப்படுகிறது.  சாலையை ஆக்கிரமித்துள்ள அவர்கள் பொதுமக்கள் அவ்வழியாகச் செல்வதற்கு இடையூறு கொடுத்து வருவதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக அந்த பத்து குடும்பத்தினரும் வருவாய்த்துறை, காவல் துறை என மாவட்ட ஆட்சியர் வரை மனு அளித்துள்ளனர். ஆனாலும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், பொதுமக்கள் செல்லும் வழியில் கண்ணன் குடும்பத்தைச் சார்ந்த சங்கர் என்பவர் பாதையை ஆக்கிரமித்து  கடந்த சில நாட்களாக வாகனங்களை நிறுத்தி வைத்துள்ளார். இதை அந்த பகுதியில் உள்ள மக்கள் கேட்டபோது இந்த பாதை எங்களுக்கு சொந்தமானது. இதில் யாரும் வரக்கூடாது. மீறி வந்தால், டிராக்டரை மேலே ஏற்றி கொலை செய்து விடுவேன் என்றும், நீங்கள் எங்கு சென்று புகார் கொடுத்தாலும் எதுவும் செய்ய முடியாது எனவும் மிரட்டிள்ளார். மேலும் கண்ணன் குடும்பத்தை சேர்ந்த ரவி என்பவர், அரூர் வருவாய் கோட்டாட்சியரின் ஓட்டுநராக இருப்பதால், எங்கு சென்று புகார் கொடுத்தாலும், எதுவும் செய்ய முடியாது என கூறி மிரட்டுவதாக கூறப்படுகிறது.


தர்மபுரி : ”புகாரளித்தும் நடவடிக்கை இல்லைங்க..” பள்ளி குழந்தைகளுடன் தீக்குளிக்க முயற்சி..

மேலும், எங்கு புகார் கொடுத்தாலும் வருவாய் கோட்டாட்சியர் ஓட்டுநர் ரவியின் தூண்டுதலின் பேரில் நடவடிக்கை எடுப்பதில்லை என்றும், பொதுப் பாதையை ஆக்கிரமித்துள்ள கண்ணன் குடும்பத்தினர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,  புகார் கொடுத்து எந்த நடவடிக்கையும் எடுக்காத காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, திலகவதி மற்றும் சிறுமிகள் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர். அப்பொழுது பாதுகாப்பு பணியில் இருந்த தீயணைப்பு வீரர் சந்திரன் துரிதமாக அவர்களை காப்பாற்றினார். அப்பொழுது தீப்பொறி பட்டதில் சந்திரனுக்கு லேசான காயம் ஏற்பட்டது. 


தர்மபுரி : ”புகாரளித்தும் நடவடிக்கை இல்லைங்க..” பள்ளி குழந்தைகளுடன் தீக்குளிக்க முயற்சி..

இதனைத் தொடர்ந்து அனைவரையும் பாதுகாப்பாக மீட்ட தீயணைப்பு துறையினர், அவர்கள் மீது தண்ணீர் ஊற்றி அழைத்துச் சென்றனர். இதனைத் தொடர்ந்து அனைவரையும் தருமபுரி நகர காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப் பாதையை ஆக்கிரமிப்பு செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பள்ளிக் குழந்தைகள் உட்பட 10க்கும் மேற்பட்டோர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தலைப்பு செய்திகள்

திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
வீட்டில் தனியாக இருந்த 12 - ம் வகுப்பு மாணவி 7 மாத கர்ப்பம் !! பள்ளி மாணவர் மீது போக்சோ
வீட்டில் தனியாக இருந்த 12 - ம் வகுப்பு மாணவி 7 மாத கர்ப்பம் !! பள்ளி மாணவர் மீது போக்சோ

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Oppo A7 Pro Max: 10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
Trump Vs Pakistan: சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
BYD Festive Offers India: ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
Embed widget