மேலும் அறிய

தர்மபுரி : ”புகாரளித்தும் நடவடிக்கை இல்லைங்க..” பள்ளி குழந்தைகளுடன் தீக்குளிக்க முயற்சி..

தர்மபுரியில், பொதுப் பாதையை ஆக்கிரமித்து கொலை மிரட்டல் விடுப்பவர்கள்  மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென குழந்தைகள் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு.

பொதுப் பாதையை ஆக்கிரமித்து கொலை மிரட்டல் விடுப்பவர்கள்  மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென குழந்தைகள் உள்பட 10-க்கும்  மேற்பட்டோர் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


தர்மபுரி : ”புகாரளித்தும் நடவடிக்கை இல்லைங்க..” பள்ளி குழந்தைகளுடன் தீக்குளிக்க முயற்சி..

தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த வேப்பம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பூதிநத்தம் கிராமத்தைச் சேர்ந்த திலகவதி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், தங்களது விவசாய நிலத்தில் வசித்து வருகின்றனர்.  கிராமத்தில் இருந்து விவசாய நிலங்களுக்கு செல்வதற்காக 12 அடி சாலையை காலங்காலமாக  பயன்படுத்தி வந்துள்ளனர்.  இந்தப் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற வேடியப்பன் கோயிலுக்கு தலைமுறை தலைமுறையாக மக்கள் அடிக்கடி சென்று வருகின்றனர்.  இந்நிலையில் அந்தப் பகுதியில் கண்ணன் என்பவரும், அவரது குடும்பத்தினரும் விவசாய நிலம் வாங்கியதோடு,  பொதுமக்கள் செல்லும் 12 அடி பாதையை அவர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறப்படுகிறது.  சாலையை ஆக்கிரமித்துள்ள அவர்கள் பொதுமக்கள் அவ்வழியாகச் செல்வதற்கு இடையூறு கொடுத்து வருவதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக அந்த பத்து குடும்பத்தினரும் வருவாய்த்துறை, காவல் துறை என மாவட்ட ஆட்சியர் வரை மனு அளித்துள்ளனர். ஆனாலும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், பொதுமக்கள் செல்லும் வழியில் கண்ணன் குடும்பத்தைச் சார்ந்த சங்கர் என்பவர் பாதையை ஆக்கிரமித்து  கடந்த சில நாட்களாக வாகனங்களை நிறுத்தி வைத்துள்ளார். இதை அந்த பகுதியில் உள்ள மக்கள் கேட்டபோது இந்த பாதை எங்களுக்கு சொந்தமானது. இதில் யாரும் வரக்கூடாது. மீறி வந்தால், டிராக்டரை மேலே ஏற்றி கொலை செய்து விடுவேன் என்றும், நீங்கள் எங்கு சென்று புகார் கொடுத்தாலும் எதுவும் செய்ய முடியாது எனவும் மிரட்டிள்ளார். மேலும் கண்ணன் குடும்பத்தை சேர்ந்த ரவி என்பவர், அரூர் வருவாய் கோட்டாட்சியரின் ஓட்டுநராக இருப்பதால், எங்கு சென்று புகார் கொடுத்தாலும், எதுவும் செய்ய முடியாது என கூறி மிரட்டுவதாக கூறப்படுகிறது.


தர்மபுரி : ”புகாரளித்தும் நடவடிக்கை இல்லைங்க..” பள்ளி குழந்தைகளுடன் தீக்குளிக்க முயற்சி..

மேலும், எங்கு புகார் கொடுத்தாலும் வருவாய் கோட்டாட்சியர் ஓட்டுநர் ரவியின் தூண்டுதலின் பேரில் நடவடிக்கை எடுப்பதில்லை என்றும், பொதுப் பாதையை ஆக்கிரமித்துள்ள கண்ணன் குடும்பத்தினர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,  புகார் கொடுத்து எந்த நடவடிக்கையும் எடுக்காத காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, திலகவதி மற்றும் சிறுமிகள் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர். அப்பொழுது பாதுகாப்பு பணியில் இருந்த தீயணைப்பு வீரர் சந்திரன் துரிதமாக அவர்களை காப்பாற்றினார். அப்பொழுது தீப்பொறி பட்டதில் சந்திரனுக்கு லேசான காயம் ஏற்பட்டது. 


தர்மபுரி : ”புகாரளித்தும் நடவடிக்கை இல்லைங்க..” பள்ளி குழந்தைகளுடன் தீக்குளிக்க முயற்சி..

இதனைத் தொடர்ந்து அனைவரையும் பாதுகாப்பாக மீட்ட தீயணைப்பு துறையினர், அவர்கள் மீது தண்ணீர் ஊற்றி அழைத்துச் சென்றனர். இதனைத் தொடர்ந்து அனைவரையும் தருமபுரி நகர காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப் பாதையை ஆக்கிரமிப்பு செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பள்ளிக் குழந்தைகள் உட்பட 10க்கும் மேற்பட்டோர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தலைப்பு செய்திகள்

"எங்களுக்குப் புற்றுநோய் வந்துடும்!" - மயிலாடுதுறையில் அஞ்சும் பொதுமக்கள்: வீதிக்கு வந்து போராட்டம்!
நச்சுப் புகையால் திணறும் ஆன்மீக நவகிரக ஸ்தலம்;  திருவெண்காட்டில் தொடரும் சுகாதாரச் சீர்கேடு!
நச்சுப் புகையால் திணறும் ஆன்மீக நவகிரக ஸ்தலம்;  திருவெண்காட்டில் தொடரும் சுகாதாரச் சீர்கேடு!
நண்பனைக் காப்பாற்றச் சென்று உயிரை விட்ட சோகம்... விஷவாயு தாக்கி ஒருவர் பலி; ஆபத்தான நிலையில் 3 பேர்..
நண்பனைக் காப்பாற்றச் சென்று உயிரை விட்ட சோகம்... விஷவாயு தாக்கி ஒருவர் பலி; ஆபத்தான நிலையில் 3 பேர்..
முதலிரவு முதல் பிரச்சனை !! மனைவியை 6 இடங்களில் வெட்டி சாய்த்த கணவன்
முதலிரவு முதல் பிரச்சனை !! மனைவியை 6 இடங்களில் வெட்டி சாய்த்த கணவன்

வீடியோ

Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: திமுக சீரமைப்பை தள்ளிப்போட்ட மு.க.ஸ்டாலின்! என்ன காரணம் தெரியுமா?
MK Stalin: திமுக சீரமைப்பை தள்ளிப்போட்ட மு.க.ஸ்டாலின்! என்ன காரணம் தெரியுமா?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
CM Vijay: முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்.. நாளை ரிலீசாகிறது SPIDER-MAN: BRAND NEW DAY - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்.. நாளை ரிலீசாகிறது SPIDER-MAN: BRAND NEW DAY - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
மருத்துவ இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட தவெக அரசு; வாய்பொத்தி நின்ற அரசு வழக்கறிஞர்கள்- ஸ்டாலின் கடும் கண்டனம்
மருத்துவ இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட தவெக அரசு; வாய்பொத்தி நின்ற அரசு வழக்கறிஞர்கள்- ஸ்டாலின் கடும் கண்டனம்
வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்.! ரூ.5,099 கட்டணத்தில் கண்காணிப்பு கருவி- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்.! ரூ.5,099 கட்டணத்தில் கண்காணிப்பு கருவி- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
Scorpio N vs XUV 7XO: மாஸாக வெளியாகும் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ Updated ஃபேஸ்லிஃப்ட்: 7XO-க்கு போட்டியா?
Scorpio N vs XUV 7XO: மாஸாக வெளியாகும் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ Updated ஃபேஸ்லிஃப்ட்: 7XO-க்கு போட்டியா?
Upcoming Hyundai SUV: அலப்பறை கிளப்புறோம்.. வரப்போது ஹுண்டாயின் 3 புதிய எஸ்யூவி கார்கள் - என்னென்ன?
Upcoming Hyundai SUV: அலப்பறை கிளப்புறோம்.. வரப்போது ஹுண்டாயின் 3 புதிய எஸ்யூவி கார்கள் - என்னென்ன?
Embed widget