மேலும் அறிய

தொடரும் மாணவர்கள் தற்கொலை.. நெல்லை அருகே ரயில் முன் பாய்ந்த பள்ளி மாணவன் : அதிர்ச்சி காரணம்..

சதீஷின் தாயை அழைத்து நடந்த சம்பவத்தை பள்ளி நிர்வாகம் கூறியதால் அவரிடம் இருந்து செல்போனை  தாய் பறித்ததாக சொல்லப்படுகிறது.

திருநெல்வேலியில் ரயில் முன் பாய்ந்து மாணவன் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பள்ளி மாணவர்கள் தற்கொலை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி, திருவள்ளூர் மாணவி சரளா ஆகியோர் தற்கொலை சம்பவங்கள் தமிழகத்தையே அதிர வைத்தன. தொடர்ந்து மாமல்லப்புரம், விக்கிரவாண்டி, மேட்டூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பள்ளி மாணவர்கள் தற்கொலைக்கு முயற்சிகளும் பலருக்கும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியது. 

இதனிடையே திருநெல்வேலியில் ரயில் முன் பாய்ந்து மாணவன் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் நடைபெற்றுள்ளது. அங்குள்ள மேலப்பாளையம் அருகேயுள்ள முன்னீர்பள்ளம் பகுதியைச் சேர்ந்த சதீஷ் என்ற மாணவன் பாளையங்கோட்டையிலுள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வந்தார். இவரது தந்தை ஜெகதீஷ் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இதற்கிடையில் சதீஷ் அடிக்கடி செல்போன் உபயோகித்து வந்ததாக கூறப்படுகிறது. 

இதனால் பாடங்களில் கவனம் இல்லாமல் மதிப்பெண் குறைவாக எடுத்ததாகவும், பள்ளி நேரத்தில் அவரிடம் செல்போன் இருந்ததைப் பார்த்த ஆசிரியர்கள் கண்டித்துள்ளனர். மேலும் சதீஷின் தாயை அழைத்து நடந்த சம்பவத்தை பள்ளி நிர்வாகம் கூறியதால் அவரிடம் இருந்து செல்போனை  தாய் பறித்ததாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக கடும் மன உளைச்சலில் இருந்த அவர் நேற்று வழக்கம் போல பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார். 

இதற்கிடையில் மருதம்நகர் ரயில்வே கேட் அருகே சிறுவனின் உடல் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் விசாரணை நடந்தியதில் மாணவர் சதீஷ் பள்ளிக்குச் செல்லாமல் அந்த வழியாக வந்த ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துக் கொண்டது தெரிய வந்தது. அவரது உடலை கைப்பற்றிய போலீசார் தற்கொலைக்கான காரணம் செல்போன் கொடுக்காதது காரணமா அல்லது வேறு ஏதுவுமா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம். சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,சென்னை - 600 028.தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

மயிலாடுதுறையில் ஆணவக் கொலை புகார்: பெண் வீட்டார் வீடுகளை அடித்து உதத்த கும்பல் - 5 பேர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது!
மயிலாடுதுறையில் ஆணவக் கொலை புகார்: பெண் வீட்டார் வீடுகளை அடித்து உதத்த கும்பல் - 5 பேர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது!
" நிர்வாண வீடியோ எடுத்து ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டல் " இளம் பெண் உள்பட 3 பேர் அதிரடி கைது
நொறுங்கிய அரசு பேருந்துகள்! கதறிய பயணிகள்! மயிலாடுதுறையில் அதிகாலை நேர்ந்த கொடூர விபத்து!
நொறுங்கிய அரசு பேருந்துகள்! கதறிய பயணிகள்! மயிலாடுதுறையில் அதிகாலை நேர்ந்த கொடூர விபத்து!
பிறந்தநாள் கொண்டாட்டத்தில் விபரீதம்: செஞ்சியில் காலாவதி சாக்லேட் சாப்பிட்டு 18 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி!
பிறந்தநாள் கொண்டாட்டத்தில் விபரீதம்: செஞ்சியில் காலாவதி சாக்லேட் சாப்பிட்டு 18 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி!

வீடியோ

Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?
DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anitha Radhakrishnan : ‘முதல்வர் அலுவலகத்தில் இருந்து பறந்த போன்’ அனிதா ராதாகிருஷ்ணன் கைதின் பரபரப்பு பின்னணி..!
‘முதல்வர் அலுவலகத்தில் இருந்து பறந்த போன்’ அனிதா கைதின் பரபரப்பு பின்னணி..!
'Anitha Radhakrishnan Arrested : அனிதா ராதாகிருஷ்ணன் கைது’ தவெக அரசு அதிரடி நடவடிக்கை..!
'Anitha Radhakrishnan Arrested : அனிதா ராதாகிருஷ்ணன் கைது’ தவெக அரசு அதிரடி நடவடிக்கை..!
Vaigai Selvan quits AIADMK : அதிமுகவில் இருந்து விலகிய வைகை செல்வன்.! காரணம் என்ன.? இபிஎஸ்க்கு பரபரப்பு கடிதம்
அதிமுகவில் இருந்து விலகிய வைகை செல்வன்.! காரணம் என்ன.? இபிஎஸ்க்கு பரபரப்பு கடிதம்
Anitha Radhakrishnan: அனிதா ராதாகிருஷ்ணன் கைது; முதலமைச்சர் விஜய் பற்றி அப்படி என்ன பேசினார்?
Anitha Radhakrishnan: அனிதா ராதாகிருஷ்ணன் கைது; முதலமைச்சர் விஜய் பற்றி அப்படி என்ன பேசினார்?
Anitha Radhakrishnan : ஆணவம் அழிவிற்கு வழி.! அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு சிஎம் விஜய் மீது கொதித்தெழுந்த மு.க. ஸ்டாலின்
ஆணவம் அழிவிற்கு வழி.! அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு சிஎம் விஜய் மீது கொதித்தெழுந்த மு.க. ஸ்டாலின்
Chennai Power Cut: சென்னையில ஜூலை 4-ம் தேதி(04.07.2026) எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? லிஸ்ட்ட பாருங்க
சென்னையில ஜூலை 4-ம் தேதி(04.07.2026) எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? லிஸ்ட்ட பாருங்க
DMK E.V. Velu : சம்மன் அனுப்பிய போலீஸ்.! சிங்கப்பூருக்கு பறந்த எ.வ.வேலு- தலைமறைவா.?
சம்மன் அனுப்பிய போலீஸ்.! சிங்கப்பூருக்கு பறந்த எ.வ.வேலு- தலைமறைவா.?
Maruti S Presso: நாட்டின் மலிவான CNG கார், 32KM மைலேஜ், சிட்டிக்கான குட்டி காருக்கு ரூ.4,800 போதும் - முழு விவரம்
நாட்டின் மலிவான CNG கார், 32KM மைலேஜ், சிட்டிக்கான குட்டி காருக்கு ரூ.4,800 போதும் - முழு விவரம்
Embed widget