மேலும் அறிய

மயிலாடுதுறையில் வீட்டில் கஞ்சா விற்பனை செய்த இளைஞர் கைது...!

குத்தாலம் அருகே வீட்டில் வைத்து கஞ்சா  விற்பனை செய்த இளைஞரை தனிப்பட்ட காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் காவல் சரகம் ஆலங்குடி பகுதியில் கஞ்சா விற்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு சுகுணா சிங்கிற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதனை அடுத்து கஞ்சா விற்பனையை தடுத்து குற்றவாளிகளை கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து மயிலாடுதுறை துணை காவல் கண்காணிப்பாளர்  வசந்தராஜ் மேற்பார்வையில் செயல்பட்டு வரும் தனிப்படை காவல்துறையினர் காவல் உதவி ஆய்வாளர் இளையராஜா தலைமையில் குத்தாலம் மற்றும் ஆலங்குடி பகுதியில் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டனர். 


மயிலாடுதுறையில் வீட்டில் கஞ்சா விற்பனை செய்த இளைஞர் கைது...!

அப்போது ஆலங்குடி தெற்கு தெருவை சேர்ந்த குருசாமி மகன் மணிகண்டன் வயது 27 என்பவர் வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து தனிப்படை போலீசார் வீட்டைச் சுற்றி வளைத்து சோதனையிட்டனர். சோதனையில் வீட்டின் உள்ளே 7 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து கஞ்சாவை கைப்பற்றிய  தனிப்படை போலீசார் கஞ்சா வியாபாரி மணிகண்டனை பிடித்து குத்தாலம் குத்தாலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனை அடுத்து குத்தாலம் போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்ததுடன்  வழக்கு பதிவு செய்து மணிகண்டனை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


மயிலாடுதுறையில் வீட்டில் கஞ்சா விற்பனை செய்த இளைஞர் கைது...!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமடைந்து நாளுக்கு நாள் மக்களுக்கு பல இன்னல்களை கொடுத்து வரும் சூழலில், தமிழ்நாடு அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு கட்டுப்படுத்தி வருகிறது. இந்நிலையில் கொரோனாவை எல்லாம் பொருட்படுத்தாத பலர் பல குற்ற சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மயிலாடுதுறை மாவட்டத்தில் போதை வஸ்துகளுக்கு அடிமையானவர்கள்  தங்களின்  போதைக்காக வெவ்வேறு வழிகளை தேடி வருகின்றன. 

Follow @GoogleNews: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X

இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட சமூக விரோதிகள் சட்டவிரோதமாக வெளிமாநில மது பாட்டில்களை விற்பனை செய்வதும், கள்ளச்சாராயம் காய்ச்சுவது, கஞ்சா, அபின் உள்ளிட்ட போதை வஸ்துக்களை மறைமுகமாக விற்பனை செய்வது மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிகரித்துள்ளது. இதனை தடுக்க மயிலாடுதுறை மாவட்ட காவல்துறையினர் தனிப்பட்ட அமைத்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு தினந்தோறும் இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து வருகிறது. இருப்பினும் மாவட்டத்தில் இந்தக் குற்றச்செயல்கள் குறைந்தபாடில்லை என்றும், மேலும் காவல்துறையினர் தீவிரமாக செயல்பட்டு, தனிப்பட்ட காவலர்கள் மற்றும் இன்றி காவல் நிலையங்களில் உள்ள அனைத்து காவலர்களும் இது தொடர்பாக முழுமையாக ஆய்வு செய்து இதனை முழுமையாக தடை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

சென்னையில் அதிர்ச்சி !! பெற்ற மகளையே கள்ளக் காதலனுக்கு விருந்தாக்கிய தாய்
சென்னையில் அதிர்ச்சி !! பெற்ற மகளையே கள்ளக் காதலனுக்கு விருந்தாக்கிய தாய்
" காதலனுடன் தான் வாழ்வேன் " திருமணமான பெண் பிடிவாதம் !! இறுதியில் நடந்த சம்பவம் !!
Chennai: உங்க வீட்டுல தீய சக்தி இருக்கு.. தோழியை ஏமாற்றி 70 பவுன் நகைகளை பறித்த இளைஞர்!
Chennai: உங்க வீட்டுல தீய சக்தி இருக்கு.. தோழியை ஏமாற்றி 70 பவுன் நகைகளை பறித்த இளைஞர்!
காதலியான ஊழியர், கோடிகளை சுருட்டி உல்லாசம் - மகளின் திருமணத்திற்கு சிக்கல்? தொழிலதிபர் விபரீதம்
காதலியான ஊழியர், கோடிகளை சுருட்டி உல்லாசம் - மகளின் திருமணத்திற்கு சிக்கல்? தொழிலதிபர் விபரீதம்
ABP Premium

வீடியோ

Mexico El Mencho Killed | PABLO ESCOBAR 2.0 உலக மாஃபியாவின் Kingpin சுட்டுக்கொலை யார் இந்த El Mencho
Kerala Bus Fire Accident|ஊசலாடிய 35 உயிர்கள்!நடுரோட்டில் தீப்பற்றிய பேருந்துகேரள மக்கள் மாஸ் சம்பவம்
PTR Palanivel Thiagarajan |”ஸ்டாலின் வாய்ப்பளித்தால்” விருப்ப மனு கொடுத்த PTR! தேர்தலில் போட்டி ஏன்?
Chinmayi | கேரள சர்ச்சை வீடியோ ஆண்களுக்கு SUPPORT செய்த GOSU கொதித்தெழுந்த சின்மயி | Kerala Issue
DMK Madurai maanadu | ஹாட்பாக்ஸில் மட்டன் பிரியாணி! சிக்கன் 65, தால்சா! மதுரை திமுக அசத்தல்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi: மு.க.ஸ்டாலினிடம் 40 சீட் கேட்ட உதயநிதி..! ஓகே சொல்வாரா அப்பா?
Udhayanidhi: மு.க.ஸ்டாலினிடம் 40 சீட் கேட்ட உதயநிதி..! ஓகே சொல்வாரா அப்பா?
DMDK: எந்த தொகுதியில நிக்கலாம்? பட்டியலை பட்டைத் தீட்டும் தேமுதிக - உத்தரவு போட்ட பிரேமலதா!
DMDK: எந்த தொகுதியில நிக்கலாம்? பட்டியலை பட்டைத் தீட்டும் தேமுதிக - உத்தரவு போட்ட பிரேமலதா!
விஜய்க்கு ஆதரவு: பண்ருட்டி ராமச்சந்திரன் கட்சி அதிரடி முடிவு! தேர்தல் களம் பரபரப்பு!
விஜய்க்கு ஆதரவு: பண்ருட்டி ராமச்சந்திரன் கட்சி அதிரடி முடிவு! தேர்தல் களம் பரபரப்பு!
TN Voter List: போன் நம்பர் போதும்.. இறுதி வாக்காளர் பட்டியலில் உங்க பெயர் இருக்கா? 3 வழியில் உடனே சரிபார்க்கலாம்!
TN Voter List: போன் நம்பர் போதும்.. இறுதி வாக்காளர் பட்டியலில் உங்க பெயர் இருக்கா? 3 வழியில் உடனே சரிபார்க்கலாம்!
மாணவர்களிடையே வளர்ந்து நிற்கும் சாதி வெறிக்கு யார் பொறுப்பு? சாத்தான்குளம் சம்பவத்தில் ஈபிஎஸ் கேள்வி!
மாணவர்களிடையே வளர்ந்து நிற்கும் சாதி வெறிக்கு யார் பொறுப்பு? சாத்தான்குளம் சம்பவத்தில் ஈபிஎஸ் கேள்வி!
ஏடிஎம் கார்டு இல்லாமல் பணம் எடுப்பது எப்படி? பணம் எடுக்கும் எளிய வழிமுறைகள்!
ஏடிஎம் கார்டு இல்லாமல் பணம் எடுப்பது எப்படி? பணம் எடுக்கும் எளிய வழிமுறைகள்!
Isha: பழங்குடியின, கிராமப்புற மாணவர்களுக்கு ஈஷா கல்வி உதவித்தொகை!
Isha: பழங்குடியின, கிராமப்புற மாணவர்களுக்கு ஈஷா கல்வி உதவித்தொகை!
UPSC: யுபிஎஸ்சி CAPF -ல் 349 பணியிடங்கள்! உடனே விண்ணப்பிங்க- தகுதி, வழிமுறை.. முழு விவரம் இதோ!
UPSC: யுபிஎஸ்சி CAPF -ல் 349 பணியிடங்கள்! உடனே விண்ணப்பிங்க- தகுதி, வழிமுறை.. முழு விவரம் இதோ!
Embed widget