மேலும் அறிய

நிலமே இல்லாத கூலித் தொழிலாளர்களுக்கு விவசாயக் கடன்; வட்டியோடு கட்டச்சொன்ன வங்கி!

நிலமே இல்லாத கூலி தொழிலாளர்களுக்கு பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளதாகவும் அதனை வட்டியுடன் திரும்ப செலுத்த கூறி எஸ்.பி.ஐ. வங்கியில் இருந்து கடிதம் அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கடைசியாக 38ஆவதாகப் பிரிக்கப்பட்ட மாவட்டம் மயிலாடுதுறை. இங்கு விவசாயம் மற்றும் மீன்பிடித் தொழில் பிரதானமாக இருந்து வருகிறது. முப்போகம் விளைவித்த இப்பகுதியில் தற்போது காவேரி நீர் உரிய நேரத்தில் கிடைக்காததால் பெரும்பாலும் நிலைத்தடி நீரைக் கொண்டு இப்பகுதி விவசாயிகள் விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக இப்பகுதியில் பெரும்பாலான விவசாயிகள் கூலி தொழிலாளர்களாகவே இருக்கின்றனர்.


நிலமே இல்லாத கூலித் தொழிலாளர்களுக்கு விவசாயக் கடன்; வட்டியோடு கட்டச்சொன்ன வங்கி!


இந்நிலையில் விவசாயிகளுக்கு அரசு சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வங்கிகள் மூலம் விவசாய கடன்களும் வழங்கப்பட்டு, அழிந்து வரும் விவசாயத்தை காக்க முயற்சித்து வருகின்றனர்.

இந்த சூழலில் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுக்கா, கொண்டத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பெருமாள், சுப்பிரமணியன். இவர்கள் இருவரும் விவசாய கூலித் தொழிலாளர்கள். அதுமட்டுமின்றி அடுத்த வேளை உணவுக்கே, கூலி வேலையை நம்பிதான் இருவரும்  உள்ளனர்.

Vachathi: வாச்சாத்தி வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 18 பெண்களுக்கும் அரசு வேலை; தலா ரூ.10 லட்சம் நிவாரணம்: உயர் நீதிமன்றம் உத்தரவு


நிலமே இல்லாத கூலித் தொழிலாளர்களுக்கு விவசாயக் கடன்; வட்டியோடு கட்டச்சொன்ன வங்கி!

இப்படிப்பட்ட இருவருக்கும்  மயிலாடுதுறை பாரத ஸ்டேட் வங்கி அதிர்ச்சி ஒன்றை ஏற்படுத்தியுள்ளது.  கடந்த ஜூன் மாதம் 12 -ஆம் தேதி கடிதம் ஒன்றை மயிலாடுதுறை பாரத ஸ்டேட் வங்கி இவர்களுக்கு அனுப்பி  உள்ளது. அந்த கடிதத்தில் அவர்கள்  இருவரும் எஸ்.பி.ஐ. வங்கியில் இருந்து தலா 1 லட்சத்து 51 ஆயிரம் ரூபாய் பயிர்க் கடன் பெற்றுள்ளதாகவும், தற்போது வட்டியுடன் சேர்த்து நிலுவைத் தொகையாக 1,86,831.56 ரூபாய் உள்ளது என்றும், ஜூன் 13 -ஆம் தேதியிலிருந்து பின்தேதியிட்டு செலுத்த வேண்டும் என்றும் அதில் அறிவிக்கப்பட்டிருந்தது. 

https://tamil.abplive.com/news/tamil-nadu/vachathi-violence-18-women-victims-also-get-government-jobs-rs-10-lakh-relief-high-court-order-142672


நிலமே இல்லாத கூலித் தொழிலாளர்களுக்கு விவசாயக் கடன்; வட்டியோடு கட்டச்சொன்ன வங்கி!

இதனால் பேரதிர்ச்சிக்கு உள்ளான பெருமாள் மற்றும் சுப்பிரமணியன் ஆகிய இருவரும் தங்கள் குடும்பத்தினருடன் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்தனர். விவசாய நிலமே இல்லாத தங்களுக்கு பயிர்க் கடன் கொடுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வந்ததால் மன உளைச்சலுக்கு உள்ளாகி உள்ளதாகவும், எனவே, தங்கள் பெயரில் வங்கியில் மோசடியாக பணத்தைப் பெற்றுக் கொண்ட நபர்களின் மீதும், எந்த ஒரு ஆவணமும் இல்லாமல் மோசடியாக பயிர் கடன் கொடுத்த வங்கியின் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் புகார் மனு அளித்துள்ளனர். மேலும், இதேபோல் தங்கள் பகுதியில் பலரும் இதுபோன்று பாதிப்புக்கு உள்ளாகி உள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

Annamalai Delhi Visit: கூட்டணி முறிவு, பாஜக நிர்வாகிகள் கூட்டம்.. டெல்லிக்கு செல்லும் அண்ணாமலை..?

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
5364
Active
4724
Recovered
55
Deaths
Last Updated: Fri 6 June, 2025 at 11:10 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட சோனியா காந்தி: இமாச்சலில் பரபரப்பு! காரணம் என்ன?
திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட சோனியா காந்தி: இமாச்சலில் பரபரப்பு! காரணம் என்ன?
”ஓயாத கிளாம்பாக்கம் பரிதாபங்கள்
”ஓயாத கிளாம்பாக்கம் பரிதாபங்கள்" நிர்வாகத் திறனற்ற ஆட்சி.. திமுகவை கேள்விகளால் வறுத்தெடுத்த எடப்பாடி பழனிச்சாமி
ஆற்றல் அசோக்குமார் மீது அடுத்தடுத்து புகார்கள்.. அம்பலமானது எப்படி? யார் இந்த முன்னாள் எம்பி-யின் மகன்?
ஆற்றல் அசோக்குமார் மீது அடுத்தடுத்து புகார்கள்.. அம்பலமானது எப்படி? யார் இந்த முன்னாள் எம்பி-யின் மகன்?
L Murugan: ”முதல்வர் பூச்சாண்டி காட்ட வேணாம்... பொய் பிரச்சாரம் அம்பலம்! தொகுதி மறுவரையறை குறித்து எல். முருகன் குற்றச்சாட்டு
L Murugan: ”முதல்வர் பூச்சாண்டி காட்ட வேணாம்... பொய் பிரச்சாரம் அம்பலம்! தொகுதி மறுவரையறை குறித்து எல். முருகன் குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay Alliance | பாமக - தேமுதிக  - தவெக! உருவாகும் மெகா கூட்டணி? விஸ்வரூபம் எடுக்கும் விஜய்தங்கத்தின் மதிப்பில் 85% கடன் அள்ளிக் கொடுக்க RBI அனுமதி  பிரச்னை ஓவர்..! RBI Gold Loan Rules”வைரமுத்து சமரசம் பேசுனாரு என்கிட்ட ஆதாரம் இருக்கு” சீறிய சின்மயி Chinmayi on VairamuthuTVK Vijay Alliance | தவெக யாருடன் கூட்டணி? விஜய் போட்ட ஸ்கெட்ச்! அறிவிப்பு எப்போது?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட சோனியா காந்தி: இமாச்சலில் பரபரப்பு! காரணம் என்ன?
திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட சோனியா காந்தி: இமாச்சலில் பரபரப்பு! காரணம் என்ன?
”ஓயாத கிளாம்பாக்கம் பரிதாபங்கள்
”ஓயாத கிளாம்பாக்கம் பரிதாபங்கள்" நிர்வாகத் திறனற்ற ஆட்சி.. திமுகவை கேள்விகளால் வறுத்தெடுத்த எடப்பாடி பழனிச்சாமி
ஆற்றல் அசோக்குமார் மீது அடுத்தடுத்து புகார்கள்.. அம்பலமானது எப்படி? யார் இந்த முன்னாள் எம்பி-யின் மகன்?
ஆற்றல் அசோக்குமார் மீது அடுத்தடுத்து புகார்கள்.. அம்பலமானது எப்படி? யார் இந்த முன்னாள் எம்பி-யின் மகன்?
L Murugan: ”முதல்வர் பூச்சாண்டி காட்ட வேணாம்... பொய் பிரச்சாரம் அம்பலம்! தொகுதி மறுவரையறை குறித்து எல். முருகன் குற்றச்சாட்டு
L Murugan: ”முதல்வர் பூச்சாண்டி காட்ட வேணாம்... பொய் பிரச்சாரம் அம்பலம்! தொகுதி மறுவரையறை குறித்து எல். முருகன் குற்றச்சாட்டு
நீங்கள் நினைத்த கூட்டணியில் பாமக... ஹின்ட் கொடுத்த ராமதாஸ்.. பாமக தலைவர் யார்?
நீங்கள் நினைத்த கூட்டணியில் பாமக... ஹின்ட் கொடுத்த ராமதாஸ்.. பாமக தலைவர் யார்?
அயோத்தியில் அநியாயம்.. ராமர் கோயில் பிரசாதத்திலே பல கோடி மோசடி - பக்தர்களுக்கே விபூதி..
அயோத்தியில் அநியாயம்.. ராமர் கோயில் பிரசாதத்திலே பல கோடி மோசடி - பக்தர்களுக்கே விபூதி..
இதைவிட வேறென்ன வேண்டும்? ரசிகர்கள் செயலால்... நெகிழ்ந்து போன நடிகர் கார்த்தி!
இதைவிட வேறென்ன வேண்டும்? ரசிகர்கள் செயலால்... நெகிழ்ந்து போன நடிகர் கார்த்தி!
Thanjavur Toll Gate: தமிழ்நாட்டில் இருக்குறதே தாங்கலை..! இப்ப புதுசா ஒரு டோல்கேட்டா, ட்ரிப்புக்கு ரூ.105 கட்டணமாம்..
Thanjavur Toll Gate: தமிழ்நாட்டில் இருக்குறதே தாங்கலை..! இப்ப புதுசா ஒரு டோல்கேட்டா, ட்ரிப்புக்கு ரூ.105 கட்டணமாம்..
Embed widget