திருமணம் ஆன 6 நாளில் சிறை சென்ற புதுப்பெண்.. 4 ஆண்களை திருமணம் செய்து மோசடி - சிக்கியது எப்படி?
சீர்காழியில் பல்வேறு ஆண்களை ஏமாற்றி அடுத்தடுத்த திருமணம் செய்த இளம் பெண்னை நான்காவது கணவர் அளித்த புகாரில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சீர்காழியில் பல்வேறு ஆண்களை ஏமாற்றி அடுத்தடுத்த திருமணம் செய்த இளம் பெண்னை நான்காவது கணவர் அளித்த புகாரில் காவல்துறையினர் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டு குழந்தைகளுக்கு தாய்
மயிலாடுதுறை மாவட்டம் கொடியம்பாளையம் மீனவர் கிராமத்தைச் சேர்ந்தவர் 29 வயதான லட்சுமி. இவர் பழையார் மீனவர் கிராமத்தை சேர்ந்த சிலம்பரசன் என்பவரை திருமணம் செய்துள்ளார். அவர்களுக்கு தர்ஷன் என்ற மகனும் ரேணு என்ற மகளுடன் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு சிலம்பரசன் உயிரிழந்துள்ளார்.
மருத்துவராக அறிமுகம்
அதனைத் தொடர்ந்து சிலம்பரசனின் அண்ணன் ஜெயக்குமாரின் பராமரிப்பில் தனது மகன் தர்ஷனையும், மகள் ரேணுவை கொடியம்பாளத்தில் உள்ள அவரது அம்மா வீட்டிலும் பராமரிப்பில் விட்டு விட்டு, லட்சுமி கடந்த 2017 ஆம் ஆண்டு புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த நெப்போலியன் என்பவரிடம் தன்னை செவிலியர் மீரா என அறிமுகம் செய்து கொண்டு காதலித்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டு, சிதம்பரம், கடலூர், சென்னை என பல்வேறு ஊர்களில் 4 ஆண்டுகள் வாழ்ந்துள்ளார். பின்னர் அவரை விட்டு பிரிந்து சென்று சிதம்பரத்தை சேர்ந்த ராஜா என்பவரிடம் தனது பெயர் நிஷாந்தினி, தான் MBBS MS படித்துவிட்டு சிதம்பரம் மெடிக்கல் கல்லூரியில் மருத்துவராக பணியாற்றிவருவதாக கூறி அவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டு அவருடன் சிறிது காலம் வாழ்ந்து விட்டு, பணி நிமித்தமாக தான் கோயம்புத்தூர் செல்வதாக கூறி விட்டு சென்றுள்ளார்.
TRUST Exam: மாணவர்களே.. மீண்டும் தேர்வு ஒத்திவைப்பு; அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
நான்காவது திருமணம்
அதனை தொடர்ந்து சீர்காழி திட்டை பகுதியை சேர்ந்த சிவசந்திரன் சிதம்பரம் மெடிக்கல் காலேஜில் தனது தாயாரின் சிகிச்சைக்காக சென்ற போது அவரிடம் தான் இந்த மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் நிஷாந்தினி எனவும், தனக்கு அம்மா, அப்பா யாரும் இல்லை என கூறி அவருடன் வாட்சப்பில் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலம் பழகி வந்துள்ளார். அதனை தொடர்ந்து சிவசந்திரனிடம் தன்னை திருமணம் செய்து கொள்ள கூறி வற்புறுத்தியுள்ளார். அதனை ஏற்ற சிவசந்திரனை நான்காவது திருமணமாக கடந்த ஜனவரி 20 -ம் தேதி நிஷாந்தினி என்கிற லட்சுமி செய்துள்ளார்.
சிக்க வைத்த வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்
இந்நிலையில் சிவசந்திரன் தனது திருமண புகைப்படங்களை வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்ததை அவரது நண்பர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். லட்சுமி ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பதை அறிந்த அவரது நண்பர்கள் இது குறித்து நண்பன் சிவசந்திரனிடம் கூறியதுடன், லட்சம் திருமணம் செய்த இரண்டாவது கணவரையும் அழைத்து வந்தனர். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிவசந்திரன் இதுகுறித்து சீர்காழி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் குற்றவாளி புதுபெண் லட்சுமி கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த திருமண எண்ணிக்கை நான்கு பேருடன் முடிவடைகிறதா? அல்லது மேலும் இது அதிகாரிக்குமா என்பது காவல்துறையினரின் அடுத்து அடுத்த விசாரணையில் தெரிய வரும்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

