மேலும் அறிய

Mayiladuthurai: மீண்டும் மீண்டும் அரங்கேறும் சிறுவர்களுக்கு மது குடிக்க வைக்கும் நிகழ்வு - மயிலாடுதுறையில் அதிர்ச்சி

மயிலாடுதுறை அருகே 9 வயது சிறுவனுக்கு மது ஊற்றி கொடுத்து குடிக்க வைத்ததாக காவல் நிலையத்தில் மயக்க நிலையில் உள்ள சிறுவனை தூக்கி கொண்டு வந்து பெற்றோர் புகார் அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் மதுவுக்கு எதிராக பிரச்சாரங்களும் எதிர்ப்புகளும் ஒருபுறம் நடைபெற்று வந்தாலும், கள்ள சாராயம் மட்டுமின்றி, தமிழ்நாடு அரசே டாஸ்மாக் என்ற பெயரில் மது விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. மதுவிற்கு பலரும் அடிமையாகி பல இன்னல்களை சந்தித்து வந்தாலும், அந்த மதுப்பழக்கத்திலிருந்து மீள்வது என்பது மது பிரியர்களுக்கு முடியாத காரியமாக இருந்து வருகிறது. மேலும் பள்ளி, கல்லூரி என பாகுபாடு இன்றி இளம் வயதினரும் அதிக அளவில் தற்போது மதுவிற்கு அடிமையாகி வருகின்றனர். அதுமட்டுமின்றி மது அருந்தி பல இடங்களில் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. இதுபோன்று பல பிரச்சனைகள் இருந்தாலும் பூரண மதுவிலக்கு என்பது ஒரு சாத்தியமில்லாத விஷயமாகவே தமிழகத்தில் தொடர்கிறது.


Mayiladuthurai: மீண்டும் மீண்டும் அரங்கேறும் சிறுவர்களுக்கு மது குடிக்க வைக்கும் நிகழ்வு - மயிலாடுதுறையில் அதிர்ச்சி

மேலும் மது பிரியர்கள் மது அருந்துவதும், மது போதையில் தான் என்ன செய்கிறோம் என்று அறியாமல் குழந்தைகளுக்கும் மதுவினை குடிக்க கொடுக்கும் நிகழ்வுகளும் பல்வேறு இடங்களில் நடந்தேறி வருகிறது. இதுபோன்ற ஒரு சம்பவம் மீண்டும் தற்போது மயிலாடுதுறை மாவட்டத்தில் நடந்தேறி உள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள சித்தர்காடு கிராமத்தில் 9 வயது சிறுவனுக்கு இளைஞர் ஒருவர் மது ஊற்றிக் கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. இளைஞர் ஒருவரால் கொடுக்கப்பட்ட மதுவினை அருந்திய சிறுவன் மயக்க நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை சிறுவனை தூக்கிக்கொண்டு மயிலாடுதுறை காவல் நிலையம் வந்து புகார்  அளித்துள்ளார்.

TNPSC Coaching Class: டி.என்.பி.எஸ்.சி. சிவில் நீதிபதி பணிக்கான தேர்வு - இலவச பயிற்சி வகுப்புகள்; முழு விவரம்!

மேலும் அந்த புகாரில், அதே பகுதியைச் சேர்ந்த 32 வயதான அறிவழகன் என்பவர் தன் மகன் மற்றும் மற்றொரு சிறுவனுக்கு மதுவை ஊற்றி குடிக்க வைத்து உள்ளதாகவும், இதனால் மது போதையில் சிறுவன் மயக்க நிலைக்கு சென்றுள்ளதாகவும், சிறுவனை தூக்கிக்கொண்டு நேரடியாக காவல் நிலையத்துக்கு வந்து பெற்றோர் புகார் அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் புகாரை பெற்றுக்கொண்ட மயிலாடுதுறை காவல்துறையினர் உடனடியாக சிறுவனை மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்துனர். சிறுவனுக்கு மது ஊற்றிக் கொடுத்து தலைமறைவாக இருந்த இளைஞரை தேடி வந்த நிலையில், அவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Por Thozhil Box Office:: 10 கோடிகளைக் கடந்த வசூல்... பாராட்டுக்களுடன் வசூலையும் அள்ளும் ‘போர் தொழில்’!


Mayiladuthurai: மீண்டும் மீண்டும் அரங்கேறும் சிறுவர்களுக்கு மது குடிக்க வைக்கும் நிகழ்வு - மயிலாடுதுறையில் அதிர்ச்சி

மது குடித்ததால் மயக்கம் ஏற்பட்ட சிறுவனுக்கு மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் தற்போது அவர் உடல்நலன் தேறி உள்ளார். சிறுவர்களை பெற்றோர்கள் தங்கள் கண்காணிப்பில் வைக்க தவறினால் இது போன்ற விபரீத சம்பவங்கள் அரங்கேறும் என்பதற்கு இச்சம்பவம் ஒரு சான்றாக மாறி உள்ளது. மேலும் இது போன்ற மனநிலை உள்ள இளைஞர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

TNPSC Coaching Class: டி.என்.பி.எஸ்.சி. சிவில் நீதிபதி பணிக்கான தேர்வு - இலவச பயிற்சி வகுப்புகள்; முழு விவரம்!

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
612
Active
28518
Recovered
157
Deaths
Last Updated: Sun 13 July, 2025 at 12:57 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

பரிதாப நிலையில் ஓபிஎஸ்! பழைய பன்னீர்செல்வமா வருவாரா? எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆகிட்டாரு..
பரிதாப நிலையில் ஓபிஎஸ்! பழைய பன்னீர்செல்வமா வருவாரா? எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆகிட்டாரு..
வகுப்புகளில் ப வடிவ இருக்கை முறை; இத்தனை பிரச்சினைகள் ஏற்படுமா? எழும் எதிர்ப்புகள்!
வகுப்புகளில் ப வடிவ இருக்கை முறை; இத்தனை பிரச்சினைகள் ஏற்படுமா? எழும் எதிர்ப்புகள்!
Watch Video: இன்ஸ்பெக்டர் அராஜகம்.. ஆண், பெண் வித்தியாசம் பார்க்காமல் அடி, திட்டு - நீங்களே பாருங்க
Watch Video: இன்ஸ்பெக்டர் அராஜகம்.. ஆண், பெண் வித்தியாசம் பார்க்காமல் அடி, திட்டு - நீங்களே பாருங்க
Abhimanyu Easwaran: கருண் நாயரை விடுங்க.. அபிமன்யு ஈஸ்வரனையும் யோசிங்க! இந்திய அணியில் வஞ்சிக்கப்படும் தமிழன் - ஒரு சான்ஸ் ப்ளீஸ்
Abhimanyu Easwaran: கருண் நாயரை விடுங்க.. அபிமன்யு ஈஸ்வரனையும் யோசிங்க! இந்திய அணியில் வஞ்சிக்கப்படும் தமிழன் - ஒரு சான்ஸ் ப்ளீஸ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Anbumani Vs Ramadoss | பாஜக கூட்டணியில் அன்புமணி.. ரூட்டை மாற்றும் ராமதாஸ் பக்கா ஸ்கெட்ச்!
Nainar Nagendran | ”சோறு கூட போடுறோம் ஓட்டு போட மாட்டோம்” அதிர்ச்சியில் உறைந்த  நயினார் நாகேந்திரன்
மயிலாடுதுறை சுற்றுலா மாளிகை அவசரகதியில் திறந்த அமைச்சர்! பொதுமக்கள் ஆத்திரம்
தவெக உடன் கூட்டணி.. காங்கிரஸ் பக்கா ஸ்கெட்ச்! ஓகே சொல்வாரா ராகுல்?
800 கோடி.. BOAT CLUB-ல் 1 ஏக்கர்! மாறன் BROTHERS டீல்! ஸ்டாலின்,வீரமணி சம்பவம்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பரிதாப நிலையில் ஓபிஎஸ்! பழைய பன்னீர்செல்வமா வருவாரா? எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆகிட்டாரு..
பரிதாப நிலையில் ஓபிஎஸ்! பழைய பன்னீர்செல்வமா வருவாரா? எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆகிட்டாரு..
வகுப்புகளில் ப வடிவ இருக்கை முறை; இத்தனை பிரச்சினைகள் ஏற்படுமா? எழும் எதிர்ப்புகள்!
வகுப்புகளில் ப வடிவ இருக்கை முறை; இத்தனை பிரச்சினைகள் ஏற்படுமா? எழும் எதிர்ப்புகள்!
Watch Video: இன்ஸ்பெக்டர் அராஜகம்.. ஆண், பெண் வித்தியாசம் பார்க்காமல் அடி, திட்டு - நீங்களே பாருங்க
Watch Video: இன்ஸ்பெக்டர் அராஜகம்.. ஆண், பெண் வித்தியாசம் பார்க்காமல் அடி, திட்டு - நீங்களே பாருங்க
Abhimanyu Easwaran: கருண் நாயரை விடுங்க.. அபிமன்யு ஈஸ்வரனையும் யோசிங்க! இந்திய அணியில் வஞ்சிக்கப்படும் தமிழன் - ஒரு சான்ஸ் ப்ளீஸ்
Abhimanyu Easwaran: கருண் நாயரை விடுங்க.. அபிமன்யு ஈஸ்வரனையும் யோசிங்க! இந்திய அணியில் வஞ்சிக்கப்படும் தமிழன் - ஒரு சான்ஸ் ப்ளீஸ்
Low Budget SUV: 10 லட்சம்தான் பட்ஜெட்.. சொகுசான SUV கார் இதுதான்! மஹிந்திரா முதல் டாடா வரை!
Low Budget SUV: 10 லட்சம்தான் பட்ஜெட்.. சொகுசான SUV கார் இதுதான்! மஹிந்திரா முதல் டாடா வரை!
Chennai Power Cut(16.07.25): சென்னைல நாளைக்கு எங்கெங்க பவர் கட் தெரியுமா.? இதோ விவரம், படிச்சுட்டு பிளான் பண்ணுங்க
சென்னைல நாளைக்கு எங்கெங்க பவர் கட் தெரியுமா.? இதோ விவரம், படிச்சுட்டு பிளான் பண்ணுங்க
என்னுடைய உயிருக்கு ஆபத்து! ஆதவ் அர்ஜுனா போலீசில் புகார்! பின்னணி என்ன?
என்னுடைய உயிருக்கு ஆபத்து! ஆதவ் அர்ஜுனா போலீசில் புகார்! பின்னணி என்ன?
ரூ.35 ஆயிரம் ஊதியம்.. கிராம உதவியாளர் பணி- 134 இடங்களுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
ரூ.35 ஆயிரம் ஊதியம்.. கிராம உதவியாளர் பணி- 134 இடங்களுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
Embed widget