மேலும் அறிய

மயிலாடுதுறையில் பேராசிரியர்கள் வீட்டில் 20 லட்சம் மதிப்புள்ள நகை கொள்ளை! லாக்கரை தூக்கிச் சென்ற அதிர்ச்சி சம்பவம்..!

மயிலாடுதுறையில், கல்லூரிப் பேராசிரியர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த கொள்ளையர்கள், வீட்டிலிருந்த 150 கிலோ எடை கொண்ட இரும்பு லாக்கரை அப்படியே தூக்கிச் சென்ற துணிகரச் சம்பவம் அரங்கேறியுள்ளது.

மயிலாடுதுறையில், கல்லூரிப் பேராசிரியர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த கொள்ளையர்கள், வீட்டிலிருந்த 150 கிலோ எடை கொண்ட இரும்பு லாக்கரை அப்படியே தூக்கிச் சென்ற துணிகரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. அந்த லாக்கரில் இருந்த ரூ.20 லட்சம் மதிப்புள்ள 22 சவரன் தங்க நகைகள் மற்றும் ஒரு கிலோ வெள்ளிப் பொருட்கள் திருடுபோனதோடு, வீட்டின் வாசலில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தையும் கொள்ளையர்கள் ஓட்டிச் சென்றது மயிலாடுதுறை மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

ஆளில்லா வீட்டை குறிவைத்த கொள்ளையர்கள்

மயிலாடுறை டவுன்ஸ்டேஷன் சாலை, சாரதா நகர் 2-வது தெருவில் வசித்துவரும் மணிகண்டன் மற்றும் விஜயா தம்பதியினர் இருவரும் கல்லூரிப் பேராசிரியர்களாகப் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் நேற்று முன்தினம் (சனிக்கிழமை) குடும்பப் பணியாக திருச்சியில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தனர். வீட்டில் யாரும் இல்லாததை உறுதிசெய்துகொண்ட கொள்ளையர்கள், நள்ளிரவில் வீட்டின் முன்பக்கக் கதவை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். 

இன்று காலை, மணிகண்டனின் தந்தை ஹரிஹரன், அருகாமையில் வசிப்பவர் என்பதால், மகனின் வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு திடுக்கிட்டார். உடனடியாக அவர் மயிலாடுதுறை நகரக் காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்தார்.

லாக்கருடன் மாயமான நகை மற்றும் வாகனம்

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், வீட்டில் நடந்த கொள்ளை குறித்து விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையில், திருச்சியில் இருந்து திரும்பிய மணிகண்டன்-விஜயா தம்பதியினர், வீட்டு கொள்ளை போனதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து அவர் வீட்டில் உள்ளே சென்று பார்த்தபோது, சுமார் 150 கிலோ எடை கொண்ட இரும்பு லாக்கரே காணாமல் போயிருந்தது தெரியவந்தது. அந்த லாக்கருக்குள், சுமார் 22 சவரன் அளவிலான தங்க நகைகள் (மதிப்பு சுமார் ரூ. 20 லட்சம்) மற்றும் ஒரு கிலோவுக்கு மேலான வெள்ளிப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன.

கொள்ளையர்களின் துணிகரம் இதோடு நிற்கவில்லை. அவர்கள், வீட்டின் வாசலில் நிறுத்தியிருந்த ஆக்டிவா இருசக்கர வாகனத்தையும் எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். லாக்கரை எடுத்துச் செல்ல வாகனத்தைப் பயன்படுத்தியிருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

விசாரணை விபரம்: சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்ட தடயவியல் நிபுணர்கள், கைரேகைகள் மற்றும் இதர தடயங்களைச் சேகரித்தனர். மேலும், வீட்டிலிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளின் அடிப்படையில் கொள்ளையர்கள் குறித்து மயிலாடுதுறை காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். லாக்கரைத் தூக்கிச் சென்றதைக் கருத்தில் கொண்டு, இந்த கொள்ளை சம்பவத்தில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டிருக்கலாம் என காவல்துறையினர் யூகித்துள்ளனர். 

தொடரும்  கொள்ளை

பேராசிரியர் வீட்டில் நடந்த துணிகரக் கொள்ளை குறித்து விசாரணை நடந்து கொண்டிருக்கும்போதே, மயிலாடுதுறையில் அதற்கு முந்தைய இரவில் நடந்த மற்றொரு கொள்ளைச் சம்பவம் குறித்து பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) இரவு, மயிலாடுதுறை இலுப்பைத்தோப்பு சின்ன மாரியம்மன் கோவிலின் இரண்டு கதவுகளின் பூட்டுகளையும் உடைத்து உள்ளே நுழைந்த கொள்ளையர்கள், அம்மன் கழுத்தில் அணிவிக்கப்பட்டிருந்த சுமார் 5 கிராம் தங்க நகையை திருடிச் சென்றுள்ளனர்.

அடுத்தடுத்து இரு தினங்களில், வீட்டின் லாக்கரைத் தூக்கிச் சென்றது மற்றும் கோவிலில் நகையைத் திருடியது என தொடரும் திருட்டுச் சம்பவங்களால் மயிலாடுதுறை மக்கள் பாதுகாப்பற்ற சூழலை உணர்கின்றனர்.

பொதுமக்கள் கோரிக்கை

இரண்டு நாட்களில் நடந்த இந்தத் தொடர் கொள்ளை சம்பவங்கள், நகரில் சட்டம்-ஒழுங்கு பலவீனமாக உள்ளதையே காட்டுவதாக சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

"ஆட்கள் இல்லாத வீடுகளை நோட்டமிட்டு, இவ்வளவு பெரிய லாக்கரைத் தூக்கிச் செல்லும் அளவுக்குக் கொள்ளையர்கள் துணிச்சலாகச் செயல்படுகிறார்கள். இரவு நேரங்களில் காவல்துறையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட வேண்டும். திருட்டுச் சம்பவங்களைத் தடுக்கவும், மக்களை அச்சத்திலிருந்து மீட்கவும் காவல்துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று பொதுமக்கள் காவல்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

காவல்துறையினர், கொள்ளையர்களை விரைவில் பிடித்து, திருடுபோன பொருட்களை மீட்க வேண்டும் என பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

தூத்துக்குடி: 12ம் வகுப்பு மாணவி கொடூர கொலை! குற்றவாளிகளை கைது செய்ய போராட்டம், பதற்றம்!
தூத்துக்குடி: 12ம் வகுப்பு மாணவி கொடூர கொலை! குற்றவாளிகளை கைது செய்ய போராட்டம், பதற்றம்!
தூத்துக்குடி மாணவி கொலை; திமுக எம்எல்ஏ சமாதானம் பேசியது ஏன்.? ஏதையோ மறைக்க பார்க்கிறதா அரசு.? சீறும் இபிஎஸ்
தூத்துக்குடி மாணவி கொலை; திமுக எம்எல்ஏ சமாதானம் பேசியது ஏன்.? ஏதையோ மறைக்க பார்க்கிறதா அரசு.? சீறும் இபிஎஸ்
பெண்கள், குழந்தைகள் வாழத்தகுதியற்ற மாநிலமாக தமிழ்நாடு மாறிவிட்டது! - மதுராந்தகம் சிறுமி பாலியல் வன்கொடுமை குறித்து அன்புமணி ஆவேசம்!
பெண்கள், குழந்தைகள் வாழத்தகுதியற்ற மாநிலமாக தமிழ்நாடு மாறிவிட்டது! - மதுராந்தகம் சிறுமி பாலியல் வன்கொடுமை குறித்து அன்புமணி ஆவேசம்!
மானாமதுரை இளைஞர் மரணம் ; போராட்டம் மேலும் தீவிரமடையும் சூழ்நிலை உருவாகியுள்ளது !
மானாமதுரை இளைஞர் மரணம் ; போராட்டம் மேலும் தீவிரமடையும் சூழ்நிலை உருவாகியுள்ளது !
ABP Premium

வீடியோ

Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Petrol Diesel Stock : வாகன ஓட்டிகளுக்கு குஷியான நியூஸ்.! 90 நாட்களுக்கு தேவையான பெட்ரோல், டீசல் இருக்கு- மத்திய அரசு அறிவிப்பு
வாகன ஓட்டிகளுக்கு குஷியான நியூஸ்.! 90 நாட்களுக்கு தேவையான பெட்ரோல், டீசல் இருக்கு- மத்திய அரசு அறிவிப்பு
தூத்துக்குடி மாணவி கொலை; திமுக எம்எல்ஏ சமாதானம் பேசியது ஏன்.? ஏதையோ மறைக்க பார்க்கிறதா அரசு.? சீறும் இபிஎஸ்
தூத்துக்குடி மாணவி கொலை; திமுக எம்எல்ஏ சமாதானம் பேசியது ஏன்.? ஏதையோ மறைக்க பார்க்கிறதா அரசு.? சீறும் இபிஎஸ்
Gas Shortage: நல்ல சேதி வந்தாச்சு..! 2 இந்திய கப்பல்களுக்கு அனுமதி கொடுத்த ஈரான் - கச்சா எண்ணெய் பிரச்னை ஓவர்?
Gas Shortage: நல்ல சேதி வந்தாச்சு..! 2 இந்திய கப்பல்களுக்கு அனுமதி கொடுத்த ஈரான் - கச்சா எண்ணெய் பிரச்னை ஓவர்?
TN Roundup: வீழ்ந்த தங்கம், ”அமைதி காக்கும் ஸ்டாலின்” விஜய் ஆவேசம், எடப்பாடி காட்டம் -தமிழகத்தில் இதுவரை
TN Roundup: வீழ்ந்த தங்கம், ”அமைதி காக்கும் ஸ்டாலின்” விஜய் ஆவேசம், எடப்பாடி காட்டம் -தமிழகத்தில் இதுவரை
Data Tax: மோடியின் அடுத்த சர்ப்ரைஸ் ரெடி..! மொபைல் டேட்டாவிற்கு வரி போட திட்டம் - வல்லுநர்கள் வார்னிங்
Data Tax: மோடியின் அடுத்த சர்ப்ரைஸ் ரெடி..! மொபைல் டேட்டாவிற்கு வரி போட திட்டம் - வல்லுநர்கள் வார்னிங்
Fuel Shortage: தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடா? - நள்ளிரவில் பங்குகளில் குவிந்த மக்கள்
Fuel Shortage: தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடா? - நள்ளிரவில் பங்குகளில் குவிந்த மக்கள்
Trump Modi: ”ட்ரம்ப்புக்கு ஆமாம் சாமி போடும் மோடி” சொல்லவே கூசுது - பிரதமர் மீது கடும் விமர்சனம்
Trump Modi: ”ட்ரம்ப்புக்கு ஆமாம் சாமி போடும் மோடி” சொல்லவே கூசுது - பிரதமர் மீது கடும் விமர்சனம்
முன்னாள் முதலமைச்சர் தலையில் துப்பாக்கி.. நொடியில் தப்பிய உயிர், திருமண வீட்டில் பரபரப்பு - வீடியோ
முன்னாள் முதலமைச்சர் தலையில் துப்பாக்கி.. நொடியில் தப்பிய உயிர், திருமண வீட்டில் பரபரப்பு - வீடியோ
Embed widget