மேலும் அறிய

மேற்கு தொடர்ச்சி மலையில் சரமாரியாக வெட்டப்படும் கனிமவளம் - குமரியில் நிலச்சரிவு அபாயம்

குமரி மாவட்டத்தின் இயற்கை வளங்களை பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் அத்துமீறி அழிக்கப்படும் மலைக் குன்றுகளால் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாக அப்பகுதி மக்கள் அச்சம்.


மேற்கு தொடர்ச்சி மலையில் சரமாரியாக வெட்டப்படும் கனிமவளம் - குமரியில் நிலச்சரிவு அபாயம்

கன்னியாகுமரி மாவட்டம் மலைகளும் குன்றுகளும் அடங்கிய ஏற்றத்தாழ்வு பகுதியான மிகவும் செழுமை வாய்ந்த பகுதிகளாகும். மேற்கு தொடர்ச்சி மலை பகுதி தொடங்கும் குமரி மாவட்டத்தில் இருந்து கனிம வளக் கொள்ளை ஜோராக நடந்து வருகிறது. பாதுகாக்கப்பட்ட மலைப்பகுதிகள் என்று தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட பகுதிகளில் மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து கனிமவள கொள்ளைக்கு அனுமதி அளித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.இதனால் இன்னும் 20 ஆண்டுகளுக்குள் குமரி மாவட்டமும் வறட்சியின் பிடியில் சிக்கும் அபாயம் உள்ளது.


மேற்கு தொடர்ச்சி மலையில் சரமாரியாக வெட்டப்படும் கனிமவளம் - குமரியில் நிலச்சரிவு அபாயம்

                                                                             சிதையும் குமரி மாவட்ட இயற்கை வளங்கள்

யுனஸ்கோவால் பாதுகாக்கப்பட்ட மலைப்பகுதிகள் என்று அறிவிக்கப்பட்ட பகுதிகளில் பாறைகள், மற்றும் கனிமவளங்களை பெயர்த்து எடுப்பதற்கு கனிமவளத்துறை அனுமதி அளித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. கனிமவள கொள்ளைக்கு துணபோனதாக சமீபத்தில் குமரி மாவட்ட நிர்வாகம் மற்றும் கனிமவள அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் கடும் கண்டனத்தை தெரிவித்ததுடன் ரூ.10 லட்ச அபராதமும் விதித்தது.வரலாற்றுச் சிறப்பு மிக்க மேற்கண்ட உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு கனிமவள கொள்ளையர்களுக்கும் கனிம வள கொள்ளைக்கு துணை போன மற்றும் போகும் அரசு அதிகாரிகளுக்கும் ஒரு எச்சரிக்கை மணியாகவே ஒலித்தது.


மேற்கு தொடர்ச்சி மலையில் சரமாரியாக வெட்டப்படும் கனிமவளம் - குமரியில் நிலச்சரிவு அபாயம்

                                                                                          நான்குவழிச்சாலை

இந்நிலையில் குமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் நான்கு வழி சாலை பணிகளுக்கு குமரியில் இருந்து மண் கிடைக்கவில்லை என்ற காரணத்தை கூறி பணிகள் கடந்த காலங்களில் கிடப்பில் போடப்பட்டது. அதன் பின்னர் நான்கு வழி சாலை பணிகளுக்கு நெல்லை மாவட்டத்தில் இருந்து மண் கொண்டு வருவதற்காக மீண்டும் புதிதாக டெண்டர் விடப்பட்டு சமீபத்தில் பணிகள் தொடங்கியது. ஆனால் அதன் பின்னர் நான்கு வழி சாலை பணிகளுக்கு எனக்கூறி மீண்டும் குமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக அரசு அதிகாரிகளின் துணையோடு சட்டவிரோத அனுமதி பெற்று மலைகளையும் மலை குன்றுகளையும் அழிக்கும் பணிகள் தொடர்ந்து வருகிறது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.


மேற்கு தொடர்ச்சி மலையில் சரமாரியாக வெட்டப்படும் கனிமவளம் - குமரியில் நிலச்சரிவு அபாயம்

                                                                                                 கல்குவாரி

குறிப்பாக திருவட்டார் அருகே கல்லு பாலம் பகுதியில் மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியில் உள்ள மலை குன்றை  உடைத்து பாறைகள் மற்றும் மண் என அனைத்தையும் எடுத்துச் செல்ல முயற்சித்து உள்ளனர். நான்கு வழி சாலை பணிக்கு என கனிமவளத்தை கூறு போட வந்த கும்பல்கள் கூறியதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். அந்த மலைக்குன்றை அழித்துவிட்டால் அப்பகுதியில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் ஏற்படும் என்றும் மக்கள் வசிக்க இயலா பகுதியாக மாறிவிடும் என்றும் பொதுமக்கள் மனம் வருந்தினர். நான்கு வழி சாலை பணிக்கு நெல்லை மாவட்டத்தில் இருந்து மண் கொண்டு வருவதற்கு ஒப்பந்ததாரர்கள் அனுமதி பெற்று விட்டு தற்போது குமரி மாவட்டத்தில் அதிகாரிகளின் துணையோடு கனிம வள கொள்ளையில் ஈடுபட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.


மேற்கு தொடர்ச்சி மலையில் சரமாரியாக வெட்டப்படும் கனிமவளம் - குமரியில் நிலச்சரிவு அபாயம்

                                                                                        மலைக்குன்று 

நட்டாலம் பகுதியில் செயல்பட்டு வந்த கல்குவாரிக்கு சட்டவிரோதமாக அனுமதி கொடுத்ததாக கூறி அனுமதி அளித்த அதிகாரிகளுக்கு சமீபத்தில் உயர் நீதிமன்றத்தால் 10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்திய அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டு பிரகடனப்படுத்தப்பட்ட கஸ்தூரி ரங்கன் அறிக்கை படி மேற்கு தொடர்ச்சி மலைகளை பாதுகாக்க தமிழக அரசால் கொண்டுவரப்பட்ட நகர்ப்புற வளர்ச்சி துறை அரசாணை எண் 49/2003 ன்படி பாதுகாக்கப்பட்ட மலைப்பகுதிகள் என்று அறிவிக்கப்பட்ட இடங்களில் சட்டவிரோதமாக கொடுக்கப்பட்ட கனிமவள கொள்ளைக்கான அனுமதியை ரத்து செய்து நடவடிக்கை எடுப்பதோடு திருவட்டார் அருகே கல்லுப்பாலம் மற்றும் பள்ளியாடி அருகே முருங்கை விளை உட்பட பல இடங்களில் நிலச்சரிவு அபாயத்தை ஏற்படுத்தும் முயற்சியாக கொடுக்கப்பட்டுள்ள மலைக் குன்றுகளை அழிக்கும்  சட்டவிரோதமான அனுமதிகளை மாவட்ட நிர்வாகம் ரத்து செய்ய வேண்டும்,குமரி மாவட்டத்தின் இயற்கை வளங்களை பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேற்கு தொடர்ச்சி மலையில் சரமாரியாக வெட்டப்படும் கனிமவளம் - குமரியில் நிலச்சரிவு அபாயம்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

OPS Delhi Visit: ஓபிஎஸ் திடீர் டெல்லி பயணம்; பாஜக உடன் மீண்டும் கூட்டா.? தனிக் கட்சியா.? யாருக்கு ஆபத்து.?
ஓபிஎஸ் திடீர் டெல்லி பயணம்; பாஜக உடன் மீண்டும் கூட்டா.? தனிக் கட்சியா.? யாருக்கு ஆபத்து.?
Chennai School Holiday: தொடர் கனமழை; சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த ஆட்சியர்
தொடர் கனமழை; சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த ஆட்சியர்
TN School Leave: தொடர் கனமழை; திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
தொடர் கனமழை; திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
TN Heavy Rain Alert: சென்னைக்கு அருகே டென்ட் அடித்த ‘டிட்வா‘; நாளை 3 மாவட்டங்களில் மிக கனமழை; ஆரஞ்சு அலெர்ட்
சென்னைக்கு அருகே டென்ட் அடித்த ‘டிட்வா‘; நாளை 3 மாவட்டங்களில் மிக கனமழை; ஆரஞ்சு அலெர்ட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

AKS Vijayan House Theft | திமுக பிரமுகர் வீட்டில்300 சவரன் கொள்ளை?தஞ்சையில் பரபரப்பு | Tanjore
சென்னையை வேட்டையாடும் மழை எங்கு கரையை கடக்க போகிறது? இடத்தை தேர்வு செய்த டிட்வா | Chennai Ditwah Cyclone
TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
OPS Delhi Visit: ஓபிஎஸ் திடீர் டெல்லி பயணம்; பாஜக உடன் மீண்டும் கூட்டா.? தனிக் கட்சியா.? யாருக்கு ஆபத்து.?
ஓபிஎஸ் திடீர் டெல்லி பயணம்; பாஜக உடன் மீண்டும் கூட்டா.? தனிக் கட்சியா.? யாருக்கு ஆபத்து.?
Chennai School Holiday: தொடர் கனமழை; சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த ஆட்சியர்
தொடர் கனமழை; சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த ஆட்சியர்
TN School Leave: தொடர் கனமழை; திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
தொடர் கனமழை; திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
TN Heavy Rain Alert: சென்னைக்கு அருகே டென்ட் அடித்த ‘டிட்வா‘; நாளை 3 மாவட்டங்களில் மிக கனமழை; ஆரஞ்சு அலெர்ட்
சென்னைக்கு அருகே டென்ட் அடித்த ‘டிட்வா‘; நாளை 3 மாவட்டங்களில் மிக கனமழை; ஆரஞ்சு அலெர்ட்
Ramadoss Vs ECI: டெல்லி வரை சென்ற பாமக பதவி விவகாரம்; தேர்தல் ஆணைய முடிவை எதிர்த்து ராமதாஸ் தரப்பு வழக்கு
டெல்லி வரை சென்ற பாமக பதவி விவகாரம்; தேர்தல் ஆணைய முடிவை எதிர்த்து ராமதாஸ் தரப்பு வழக்கு
TN Congress : ’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
Pakistan Exposed: யோவ், இது உங்களுக்கே அநியாயமா இல்ல.? இலங்கைக்கு காலாவதியான உணவுப் பொருட்களை அனுப்பிய பாகிஸ்தான்
யோவ், இது உங்களுக்கே அநியாயமா இல்ல.? இலங்கைக்கு காலாவதியான உணவுப் பொருட்களை அனுப்பிய பாகிஸ்தான்
TVK Vijay Roadshow: புதுச்சேரியும் போச்சா.! விஜய் ரோடு ஷோ; அனுமதி மறுத்த காவல்துறை; சபாநாயகர் கொடுத்த ஐடியா
புதுச்சேரியும் போச்சா.! விஜய் ரோடு ஷோ; அனுமதி மறுத்த காவல்துறை; சபாநாயகர் கொடுத்த ஐடியா
Embed widget