மேலும் அறிய

Maharashtra: வீடு கட்டுவதில் தகராறு.. 25 வயது பெண்ணை கொலை செய்த பக்கத்து வீட்டுக்காரர்..!

Maharashtra : மகாராஷ்டிராவில் நில தகராறு காரணமாக பெண்ணை கொலை செய்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பெண்கள் மீது நடத்தப்படும் வன்முறை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கின்றன. குறிப்பாக அவர்களுக்கு தெரிந்த நபர்களே தான் வன்முறை சம்பவங்களில் ஈடுபடுகின்றனர்.  அப்படி ஒரு சம்பவம் தான் மகாராஷ்டிராவில் நடந்துள்ளது. நில தகராறு காரணமாக 25-வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

நில தகராறு

நாக்பூர் நகரில் நில தகராறு காரணமாக பெண் ஒருவரை கொன்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். ராம்பார்க் ஏரியாவில் புதிதாக வீடு கட்டுவதற்காக பக்கத்து வீட்டு பெண்ணுடன் எழுந்த மோதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் கோபமடைந்த நபர், அப்பெண்ணை அவரின் தாய் கண்முன்னே கொலை செய்துள்ளார். அந்நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

போலீசார் விசாரணையில், கைது செய்யப்பட நபர் புதிதாக வீடு கட்டி வருவதாகவும், அதற்காக பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண்ணின் இடத்தையும் கேட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால், அப்பெண் இடத்தை தர மறுத்துள்ளார். இதனால் கோபமடைந்த நபர், பெண்ணுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். எல்லை மீறிய மோதலில் கைது செய்யப்பட்ட நபர், அப்பெண்ணை குத்திவிட்டார். 

உயிரிழந்தவர் ஆர்த்தி நிக்கோலஸ் என்பது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. இவர் தன் கணவனைப் பிரிந்து இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.

கணவன் - மனைவி மோதல்

மகாராஷ்டிராவில் உள்ள பால்கர் மாவட்டத்தின் விகார் பகுதியில் 60 வயதுள்ள மாமியாரை கொன்ற வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விகார் பகுதியில் உள்ள குடும்பத்தில் கணவன் - மனைவி இருவருக்கும் இடையே நீண்ட காலமாக பிரச்சனை தொடர்ந்துள்ளது. இருவருக்கும் இடையே பல முறை பேச்சுவார்த்தை நடந்தும் தீர்வு எட்டப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அவர்கள் வீட்டில் சண்டை நிகழ்ந்துள்ளது. அப்போது பெண்ணுடைய தாயார் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையை சமாதானம் செய்ய முயன்றுள்ளார்.  கணவனுக்கு ஏற்பட்ட கோபத்தில், மாமியாரை கூர்மையான கருவியை கொண்டு குத்தியுள்ளார். பாதிக்கப்பட்ட மாமியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அதீத கோபத்தில் மாமியாரை கொன்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அதிகரிக்கும் குற்றங்கள்

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக கடந்த 2022-ஆம் ஆண்டு தேசிய மகளிர் ஆணையத்துக்கு  சுமார் 31 ஆயிரம் புகார்கள் பெறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2014-ஆம் ஆண்டில் இருந்து ஒப்பிடுகையில் இதுவே அதிமாகும். கடந்த 2014ல் 30,906 புகார்கள் மகளிர் ஆணையத்தில் பதிவாகி உள்ளது. நாட்டிலேயே உத்தர பிரதேசத்தில் 16,876  புகார்கள் கிடைக்கப் பெற்றன. இரண்டாவது இடத்தில் டெல்லி உள்ளது. டெல்லியில் 3,004 புகார்கள் கிடைக்க பெற்றன.  மூன்றாவது இடமாக மகாராஷ்ராவில்  1,381 புகார்கள் பதிவாகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் வாசிக்க..

Crime Chennai : கோடிக்கணக்கில் தங்கம்.. ஏர் இந்தியா ஊழியர் கைது.. தலைசுற்ற வைக்கும் கடத்தல் சம்பவம்..!

கரூர்: மேட்டுப்பட்டி பிரிவு அருகே சாலை விபத்தில் கணவன், மனைவி உயிரிழப்பு

Freelancer Jhansi Rani. MA
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
ABP Premium

வீடியோ

Piyush Goyal on Vijay | ”விஜய் ஒரு SPOILER
TVK Ajitha | காரை மறித்த பெண் நிர்வாகி தவெகவில் இருந்து நீக்கம்?ஆக்‌ஷனில் இறங்கிய விஜய்
அதிமுக - பாஜக MEETING! MISS ஆன அண்ணாமலை! ஒதுக்கி வைக்கும் பாஜக
ஆதவ் அர்ஜூனாவுடன் ஒரே மேடையில் காங்கிரஸ் கட்சியினர்! கூட்டணிக்கான அச்சாரமா?
விஜய் சொன்னது பொய் கதை?”மக்களை அடிமையாக்கிய ஜோசப்” சர்ச்சையான KUTTY STORY உண்மை இதுதான்? | Christmas TVK Vijay Speech |

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
விஜய் ஒரு Spoiler .! அதிமுக- பாஜக கூட்டணியின் வெற்றிக்கு சிக்கல்.? போட்டுடைத்த பியூஸ் கோயல்
விஜய் ஒரு Spoiler .! அதிமுக- பாஜக கூட்டணியின் வெற்றிக்கு சிக்கல்.? போட்டுடைத்த பியூஸ் கோயல்
Pongal Gift: பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.5000.!! பொதுமக்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? இன்று தமிழக அரசு முக்கிய முடிவு
பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.5000.!! பொதுமக்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? இன்று தமிழக அரசு முக்கிய முடிவு
America Offer illegal Immigrants: இலவச விமானப் பயணச்சீட்டு, 3000 டாலர்கள், அபராதம் ரத்து; ட்ரம்ப் அதிரடி ஆஃபர்; யாருக்கு தெரியுமா.?
இலவச விமானப் பயணச்சீட்டு, 3000 டாலர்கள், அபராதம் ரத்து; ட்ரம்ப் அதிரடி ஆஃபர்; யாருக்கு தெரியுமா.?
Bottle Water New Regulations: பாட்டில் குடிநீருக்கு புதிய விதிமுறைகள்; FSSAI கெடுபிடி; ஜனவரி 1 முதல் இதெல்லாம் கட்டாயம்
பாட்டில் குடிநீருக்கு புதிய விதிமுறைகள்; FSSAI கெடுபிடி; ஜனவரி 1 முதல் இதெல்லாம் கட்டாயம்
Embed widget