மேலும் அறிய

NEET Exam: நீட் வெறி - 17 வயது மகளை கொடூரமாக அடித்துக் கொன்ற தந்தை - ஆசிரியரின் ஆசையால் வந்த வினை

NEET Exam: மகாராஷ்டிராவில் நீட் மாதிரி தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றதற்காக, 17 வயது மகளை தந்தையே அடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

NEET Exam: மகாராஷ்டிராவில் நீட் மாதிரி தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றதற்காக, 17 வயது மகளை அடித்துக் கொன்ற தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

மகளை அடித்துக் கொன்ற தந்தை:

பல மாணவர்களுக்கு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் என்பது கனவாகும். ஆனால், அதனை உண்மையாக்கி 10ம் வகுப்பில் 92.60 சதவிகித மதிப்பெண்களை பெற்ற மாணவி, ஒரு வருட இடைவெளியில் மாதிரி தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்ததால் பெற்ற தந்தையாலே அடித்துக் கொள்ளப்பட்டுள்ளார். மகாராஷ்ட்ராவின் சங்லி பகுதியை சேர்ந்த சாத்னா போன்ஸ்லே, நீட் எனப்படும் மருத்துவ நுழைவுத் தேர்வுக்காக தயாராகி வந்தார். அதுதொடர்பாக அண்மையில் மாதிரி தேர்வு ஒன்றையும் எழுதியுள்ளார். இதில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றதால் ஆத்திரமடைந்த சாத்னாவின் தந்தையான தொண்டிராம் மகளை கடுமையாக தாக்கியுள்ளார். இவர் ஒரு பள்ளி ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.

நடந்தது என்ன?

தேர்வு முடிவுகள் வெளியாகி குறைந்த மதிப்பெண்கள் பெற்றதை அறிந்ததுமே, கம்பு கொண்டு தனது 17 வயது மகளை கண்மூடித்தனமாக சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த சாத்னா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனிடையே, குற்றத்தை ஒப்புக்கொண்ட தொண்டிராமை போலீசார் கைது செய்துள்ளனர். தந்தை தாக்கியதில் தலையில் படுகாயமடைந்த சாத்னாவை சங்க்லி பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், சிகிச்சையை தொடங்குவதற்கு முன்பே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

காவல்துறை விளக்கம்:

மாதிரி தேர்வில் குறைந்த மதிப்பெண்களை பெற்றதால் ஆத்திரமடைந்து தனது கணவர் தாக்கியதில், மகள் படுகாயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கடந்த 22ம் தேதி மனைவி அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதனடிப்படையில் தொண்டி ராம் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியவில்லை என்றும், நல்ல மதிப்பெண்களை பெற முடிய்வைல்லை என்றும் மற்றும் நீட் தேர்வுக்கு பயந்தும் மாணவர்கள் தற்கொலை செய்துகொண்ட சம்பவங்களை யாராலும் மறக்க முடியாது. ஆனால், படித்து ஆசிரியராக உள்ள ஒருவரே, ஒரு மாதிரி தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் பெற்ற மகளை அடித்துக் கொன்ற சம்பவமும் சற்றும் ஏற்க முடியாததாக உள்ளது. உயிரை விட படிப்பு முக்கியமா? பெற்ற மகளை காட்டிலும் மதிப்பெண்கள் முக்கியமா? என ஏராளமான கேள்விகள் எழுகின்றன.

தங்களது விருப்பங்களை பிள்ளைகளின் மீது திணித்து, அதில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கவில்லை என ஆத்திரம் கொள்ளும் பெற்றோர் இன்னும் இந்த சமூகத்தில் இருக்கின்றனர் என்பதற்கு உதாரணமாகவே மகாராஷ்டிரா சம்பவம் அரங்கேறியுள்ளது. பிள்ளைகளை அவர்களது விருப்பம்போல் கல்வி பயில விடுவதே, நல்ல எதிர்காலத்திற்கு வழிவகுக்கும். குறிப்பாக தோல்வியுறும்போது தட்டிக் கொடுப்பதே பெற்றோருக்கு அழகு.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

ஈரானிய கடற்கொள்ளையர்களின் துப்பாக்கிச் சூட்டில் மேலும் ஒரு தமிழக மீனவர் உயிரிழப்பு..! 
ஈரானிய கடற்கொள்ளையர்களின் துப்பாக்கிச் சூட்டில் மேலும் ஒரு தமிழக மீனவர் உயிரிழப்பு..! 
Crime: 27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
மாணவிக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த மளிகை கடை ஊழியர்
மாணவிக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த மளிகை கடை ஊழியர்
"ஸ்வீட் வாங்கித் தர்றேன் வா..." - 8 வயது சிறுமியிடம் செக்யூரிட்டி சில்மிஷம்.. கம்பி எண்ணும் நிலை

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
ஸ்விஃப்ட், பலேனோவை முந்தி முதலிடம்; ரூ.4.99 லட்சம் மதிப்பில் கார்- ஹேட்ச்பேக் கார்களின் வரலாற்று கம்பேக்!
ஸ்விஃப்ட், பலேனோவை முந்தி முதலிடம்; ரூ.4.99 லட்சம் மதிப்பில் கார்- ஹேட்ச்பேக் கார்களின் வரலாற்று கம்பேக்!
Manav Suthar: இந்திய சுழலின் எதிர்காலம்.. மானத்தை காப்பாத்தப்போகும் மானவ் சுதர் - யார்?
Manav Suthar: இந்திய சுழலின் எதிர்காலம்.. மானத்தை காப்பாத்தப்போகும் மானவ் சுதர் - யார்?
Embed widget