மேலும் அறிய

வாண்டடா வந்து சிக்கிய ‛ஹோல் சேல்’ கஞ்சா வியாபாரி

புவனேஷ் குமார் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தை சோதனை செய்ததில் இருசக்கர வாகனத்தில் ஒரு கிலோ எடை கொண்ட கஞ்சா பொட்டலங்களை மறைத்து வைத்திருந்ததை காவல்துறையினர் கண்டு பிடித்தனர்

தற்போது இளைஞர்களிடையே  குறிப்பாக கூற வேண்டும் என்றால் பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் போதை பழக்கம் அதிகரித்து வருகிறது. சிகரெட்டே , மது பழக்கங்களை தண்டி தற்பொழுது கஞ்சா போதைக்கு அதிகமாக அடிமையாகி வருகின்றனர் .இதனை கட்டுப்படுத்த போலீசார் பல முயற்சிகளை எடுத்துவரும் வேலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரு கிலோ கஞ்சா பொட்டலங்குளுடன் , தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுவந்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்து உள்ளனர் .

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு காவல்துறையினர்,  ஆற்காடு மற்றும் மேல்விஷாரம் சுற்றுவட்டாரத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர் . அப்போது விஷாரம் கத்தியவாடி கூட்ரோடு பகுதியில் இரு சக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த நபர் ஒருவர் ,  அவ்வழியாக சென்று கொண்டிருந்த மற்றொரு நபரின் மீது இருசக்கர வாகனகத்தை மோதி விட்டு அங்கிருந்து நிற்காமல் ஆற்காடு நோக்கி அதிவேகமாக சென்றுள்ளார்.


வாண்டடா வந்து சிக்கிய ‛ஹோல் சேல்’ கஞ்சா வியாபாரி

 இதனை கண்ட பொது மக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.  தகவலை தொடர்ந்து வாகன தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர்  ஆற்காடு நோக்கி வந்த இருசக்கர வாகனத்தை மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டதில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தவர் சாத்தூர் பகுதியை சேர்ந்த புவனேஷ் குமார் (29)என்பதும் இவர் கஞ்சா போதையில் இருப்பதும் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து புவனேஷ் குமார் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தை சோதனை செய்ததில் இருசக்கர வாகனத்தில் ஒரு கிலோ எடை கொண்ட கஞ்சா பொட்டலங்களை மறைத்து வைத்திருந்ததை காவல்துறையினர் கண்டு பிடித்தனர். மேலும்  காவல்துறையினர் புவனேஷ் குமாரிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டதில் புவனேஷ் குமார் ஆற்காடு ,விஷாரம் கத்தியவாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடைத்தரகர்கள் மற்றும் இளைஞர்களை கொண்டு கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

 குற்றவாளி அளித்த வாக்குமூலத்தின் பேரில்  இருசக்கர வாகனத்தில்  விற்பனைக்காக கொண்டு சென்ற கஞ்சா பாக்கெட்டுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.  மேலும்  கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட இரு சக்கர வாகனத்தையும்  பறிமுதல் செய்ததுடன் புவனேஷ் குமாரை(29) கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். 


வாண்டடா வந்து சிக்கிய ‛ஹோல் சேல்’ கஞ்சா வியாபாரி

ஏஜெண்டுகளை அமைத்து ஆற்காடு நகரம் முழுவதும் கஞ்சா விற்பனை செய்து பல இளைஞர்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி இதுபோன்ற கஞ்சா வியாபாரிகளை மாவட்டம் முழுவதும் கண்டறிந்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா அவர்களுக்கு  கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இதுபோன்ற கஞ்சா பொட்டலங்கள் அதிக அளவில் ஆந்திர மாநிலத்தில் இருந்து கடத்தி வர படுவதாகவும் , இதனை தடுக்க மாநில எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் பொது மக்களிடையே எழுந்துள்ளது.

Also Read : தானாய் வளர்ந்த ஒரு காட்டுச் செடி : திருப்பத்தூர் மலை கிராமங்கள் போற்றும் மருத்துவர் வெங்கட்ராமன் யார் ?

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL 2025 MI Vs GT: தமிழ் பாய்ஸின் அதிரடி வீண்; கோட்டை விட்ட குஜராத் - குவாலிஃபயர் 2-க்கு சென்ற மும்பை
தமிழ் பாய்ஸின் அதிரடி வீண்; கோட்டை விட்ட குஜராத் - குவாலிஃபயர் 2-க்கு சென்ற மும்பை
MI vs GT Eliminator: 229 ரன்கள் எடுத்தால் உள்ளே.. இல்லாட்டி வெளியே! மும்பைக்கு அடிபணியுமா குஜராத்?
MI vs GT Eliminator: 229 ரன்கள் எடுத்தால் உள்ளே.. இல்லாட்டி வெளியே! மும்பைக்கு அடிபணியுமா குஜராத்?
அன்புமணியால் ராமதாஸ் உயிருக்கு ஆபத்து - வி.ஜி.கே.மணிகண்டன் பரபரப்பு பேட்டி
அன்புமணியால் ராமதாஸ் உயிருக்கு ஆபத்து - வி.ஜி.கே.மணிகண்டன் பரபரப்பு பேட்டி
Minister Mano Thangaraj: ஆவின் ஊழியர்களுக்கு  போனஸ்... மாடு வாங்க கடன்! ஏபிபி நிகழ்வில் ஸ்வீட் செய்தி சொன்ன அமைச்சர் மனோ தங்கராஜ்
Minister Mano Thangaraj: ஆவின் ஊழியர்களுக்கு போனஸ்... மாடு வாங்க கடன்! ஏபிபி நிகழ்வில் ஸ்வீட் செய்தி சொன்ன அமைச்சர் மனோ தங்கராஜ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Shiva Rajkumar | Kamalhaasan vs Vaiko : வைகோ OUTகமல்ஹாசன் IN திமுக அதிரடி முடிவுஅமைச்சரை தடுத்து நிறுத்திய நபர் அதிர்ந்த கோவி. செழியன் மயிலாடுதுறையில் பரபரப்பு | Govi Chezhiaanமாமன் மச்சான் தகராறு மச்சானை கொன்ற மர்மநபர்கள் ஓட ஓட வெட்டிய CCTV காட்சி | Jolarpettai Murder | Family Fight

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL 2025 MI Vs GT: தமிழ் பாய்ஸின் அதிரடி வீண்; கோட்டை விட்ட குஜராத் - குவாலிஃபயர் 2-க்கு சென்ற மும்பை
தமிழ் பாய்ஸின் அதிரடி வீண்; கோட்டை விட்ட குஜராத் - குவாலிஃபயர் 2-க்கு சென்ற மும்பை
MI vs GT Eliminator: 229 ரன்கள் எடுத்தால் உள்ளே.. இல்லாட்டி வெளியே! மும்பைக்கு அடிபணியுமா குஜராத்?
MI vs GT Eliminator: 229 ரன்கள் எடுத்தால் உள்ளே.. இல்லாட்டி வெளியே! மும்பைக்கு அடிபணியுமா குஜராத்?
அன்புமணியால் ராமதாஸ் உயிருக்கு ஆபத்து - வி.ஜி.கே.மணிகண்டன் பரபரப்பு பேட்டி
அன்புமணியால் ராமதாஸ் உயிருக்கு ஆபத்து - வி.ஜி.கே.மணிகண்டன் பரபரப்பு பேட்டி
Minister Mano Thangaraj: ஆவின் ஊழியர்களுக்கு  போனஸ்... மாடு வாங்க கடன்! ஏபிபி நிகழ்வில் ஸ்வீட் செய்தி சொன்ன அமைச்சர் மனோ தங்கராஜ்
Minister Mano Thangaraj: ஆவின் ஊழியர்களுக்கு போனஸ்... மாடு வாங்க கடன்! ஏபிபி நிகழ்வில் ஸ்வீட் செய்தி சொன்ன அமைச்சர் மனோ தங்கராஜ்
Impact Makers Conclave: ரூ.1000-க்கு கரண்ட் யூஸ் பண்றதுக்கு, எவ்ளோ கார்பன் உமிழ்வு ஏற்படுது தெரியுமா.? அதிர்ச்சித் தகவல்
ரூ.1000-க்கு கரண்ட் யூஸ் பண்றதுக்கு, எவ்ளோ கார்பன் உமிழ்வு ஏற்படுது தெரியுமா.? அதிர்ச்சித் தகவல்
Sai Abhyankkar: நான் நல்ல பையன் மாதிரி நடிப்பேன்.. நல்லா நடிக்கமாட்டேன்.. இசையமைப்பாளர் சாய் அபியங்கர் கலகல
Sai Abhyankkar: நான் நல்ல பையன் மாதிரி நடிப்பேன்.. நல்லா நடிக்கமாட்டேன்.. இசையமைப்பாளர் சாய் அபியங்கர் கலகல
Impact Makers Conclave LIVE: சாதி என்பது அசிங்கம் - அமைச்சர் மனோதங்கராஜ்
Impact Makers Conclave LIVE: சாதி என்பது அசிங்கம் - அமைச்சர் மனோதங்கராஜ்
Thangam Tennarasu on Election: “எட்ட முடியாத இலக்கு அல்ல“ 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் - அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி
“எட்ட முடியாத இலக்கு அல்ல“ 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் - அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி
Embed widget