மேலும் அறிய

வாண்டடா வந்து சிக்கிய ‛ஹோல் சேல்’ கஞ்சா வியாபாரி

புவனேஷ் குமார் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தை சோதனை செய்ததில் இருசக்கர வாகனத்தில் ஒரு கிலோ எடை கொண்ட கஞ்சா பொட்டலங்களை மறைத்து வைத்திருந்ததை காவல்துறையினர் கண்டு பிடித்தனர்

தற்போது இளைஞர்களிடையே  குறிப்பாக கூற வேண்டும் என்றால் பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் போதை பழக்கம் அதிகரித்து வருகிறது. சிகரெட்டே , மது பழக்கங்களை தண்டி தற்பொழுது கஞ்சா போதைக்கு அதிகமாக அடிமையாகி வருகின்றனர் .இதனை கட்டுப்படுத்த போலீசார் பல முயற்சிகளை எடுத்துவரும் வேலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரு கிலோ கஞ்சா பொட்டலங்குளுடன் , தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுவந்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்து உள்ளனர் .

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு காவல்துறையினர்,  ஆற்காடு மற்றும் மேல்விஷாரம் சுற்றுவட்டாரத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர் . அப்போது விஷாரம் கத்தியவாடி கூட்ரோடு பகுதியில் இரு சக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த நபர் ஒருவர் ,  அவ்வழியாக சென்று கொண்டிருந்த மற்றொரு நபரின் மீது இருசக்கர வாகனகத்தை மோதி விட்டு அங்கிருந்து நிற்காமல் ஆற்காடு நோக்கி அதிவேகமாக சென்றுள்ளார்.


வாண்டடா வந்து சிக்கிய ‛ஹோல் சேல்’ கஞ்சா வியாபாரி

 இதனை கண்ட பொது மக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.  தகவலை தொடர்ந்து வாகன தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர்  ஆற்காடு நோக்கி வந்த இருசக்கர வாகனத்தை மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டதில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தவர் சாத்தூர் பகுதியை சேர்ந்த புவனேஷ் குமார் (29)என்பதும் இவர் கஞ்சா போதையில் இருப்பதும் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து புவனேஷ் குமார் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தை சோதனை செய்ததில் இருசக்கர வாகனத்தில் ஒரு கிலோ எடை கொண்ட கஞ்சா பொட்டலங்களை மறைத்து வைத்திருந்ததை காவல்துறையினர் கண்டு பிடித்தனர். மேலும்  காவல்துறையினர் புவனேஷ் குமாரிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டதில் புவனேஷ் குமார் ஆற்காடு ,விஷாரம் கத்தியவாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடைத்தரகர்கள் மற்றும் இளைஞர்களை கொண்டு கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

 குற்றவாளி அளித்த வாக்குமூலத்தின் பேரில்  இருசக்கர வாகனத்தில்  விற்பனைக்காக கொண்டு சென்ற கஞ்சா பாக்கெட்டுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.  மேலும்  கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட இரு சக்கர வாகனத்தையும்  பறிமுதல் செய்ததுடன் புவனேஷ் குமாரை(29) கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். 


வாண்டடா வந்து சிக்கிய ‛ஹோல் சேல்’ கஞ்சா வியாபாரி

ஏஜெண்டுகளை அமைத்து ஆற்காடு நகரம் முழுவதும் கஞ்சா விற்பனை செய்து பல இளைஞர்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி இதுபோன்ற கஞ்சா வியாபாரிகளை மாவட்டம் முழுவதும் கண்டறிந்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா அவர்களுக்கு  கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இதுபோன்ற கஞ்சா பொட்டலங்கள் அதிக அளவில் ஆந்திர மாநிலத்தில் இருந்து கடத்தி வர படுவதாகவும் , இதனை தடுக்க மாநில எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் பொது மக்களிடையே எழுந்துள்ளது.

Also Read : தானாய் வளர்ந்த ஒரு காட்டுச் செடி : திருப்பத்தூர் மலை கிராமங்கள் போற்றும் மருத்துவர் வெங்கட்ராமன் யார் ?

தலைப்பு செய்திகள்

133 வழக்குகள்... ஒரே நாளில் சாம்பலான ரூ.1 கோடி போதைப்பொருள்! பின்னணி என்ன?
133 வழக்குகள்... ஒரே நாளில் சாம்பலான ரூ.1 கோடி போதைப்பொருள்! பின்னணி என்ன?
திருமணமான 15 நாளில் அதிர்ச்சி ; மாமாவுடன் ஓடிய புதுப்பெண் !! ரூ.4 லட்சம் ஏமாந்த வாலிபர்
திருமணமான 15 நாளில் அதிர்ச்சி ; மாமாவுடன் ஓடிய புதுப்பெண் !! ரூ.4 லட்சம் ஏமாந்த வாலிபர்
சென்னையில் சிக்கிய பெரிய நெட்வொர்க்! பின்னணியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளா? உறைந்துபோன போலீசார்!
சென்னையில் சிக்கிய பெரிய நெட்வொர்க்! பின்னணியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளா? உறைந்துபோன போலீசார்!
லோடு இறக்க 3 நாள் தாமதம் !! லாரி டிரைவரை இரும்பு ராடால் அடித்துக் கொன்ற உரிமையாளர்
லோடு இறக்க 3 நாள் தாமதம் !! லாரி டிரைவரை இரும்பு ராடால் அடித்துக் கொன்ற உரிமையாளர்

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: அமைச்சர்களுக்கு கட்டுப்பட மறுக்கும் அதிகாரிகள்..? அடுத்த ஆக்ஷனுக்கு ரெடியாகும் முதலமைச்சர் விஜய்!
CM Vijay: அமைச்சர்களுக்கு கட்டுப்பட மறுக்கும் அதிகாரிகள்..? அடுத்த ஆக்ஷனுக்கு ரெடியாகும் முதலமைச்சர் விஜய்!
US Iran War: பின்னி பெடலெடுக்கும் ஈரான்! அமெரிக்க போர் விமானங்கள், ஜோர்டான் விமானப்படை தளம் அழிப்பு என அறிவிப்பு
பின்னி பெடலெடுக்கும் ஈரான்! அமெரிக்க போர் விமானங்கள், ஜோர்டான் விமானப்படை தளம் அழிப்பு என அறிவிப்பு
Vanni Arasu:
Vanni Arasu: "ரூ.154 கோடியை ரிலீஸ் பண்ணுங்க..." ராம்தாஸ் அத்வாலேவிற்கு வன்னி அரசு நேரில் மனு!
Meghalaya Project : ’தவெக ஆட்சியை கவிழ்க்க சதி – ஆபரேஷன் மேகாலயா’ பெயருக்கான காரணம் என்ன?
’தவெக ஆட்சியை கவிழ்க்க சதி – ஆபரேஷன் மேகாலயா’ பெயருக்கான காரணம் என்ன?
Monsoon season: பாதுகாப்பு முக்கியம் பாஸு; மழைக்கால கார் பயணம்- சேஃப்டிக்கு என்னென்ன தேவை?
Monsoon season: பாதுகாப்பு முக்கியம் பாஸு; மழைக்கால கார் பயணம்- சேஃப்டிக்கு என்னென்ன தேவை?
Free Claude AI: ஆசிரியர்களுக்கு இலவச ஏஐ சேவை அறிமுகம்- யாரெல்லாம் பெறலாம்? முழு விவரம்
Free Claude AI: ஆசிரியர்களுக்கு இலவச ஏஐ சேவை அறிமுகம்- யாரெல்லாம் பெறலாம்? முழு விவரம்
NEET UG Result 2026: நீட் மறுதேர்வில் யார் முதலிடம், தேர்ச்சி சதவீதம், பெண்களே அதிகம், கட் ஆஃப்- முக்கிய ஹைலைட்ஸ்!
NEET UG Result 2026: நீட் மறுதேர்வில் யார் முதலிடம், தேர்ச்சி சதவீதம், பெண்களே அதிகம், கட் ஆஃப்- முக்கிய ஹைலைட்ஸ்!
மாணவர்கள் உயர்கல்விக்கு பிணையில்லா கடன்: சிஎம் விஜய் திட்டம்!- தனி அலுவலர் நியமனம்!
மாணவர்கள் உயர்கல்விக்கு பிணையில்லா கடன்: சிஎம் விஜய் திட்டம்!- தனி அலுவலர் நியமனம்!
Embed widget