மேலும் அறிய

செந்தில்-வடிவேலு கூட்டணி போல இளநீரை திருடி விற்பனை செய்த பலே ‛ரஜினி’ கைது!

கோயம்போடு பகுதியில் முதலீடு இல்லாமல் திருடப்பட்ட இளநீரை விற்று நல்ல வருவாய் பார்த்து வந்ததும் தெரியவந்தது. 

சென்னை எம்.ஜி.ஆர்., நகரில் வசிப்பவர் லிங்கம். சென்னை கே.கே.நகர் 80 அடி சாலையில் உள்ள நடைபாதையில் பல ஆண்டுகளாக இளநீர் வியாபாரம் செய்து வருகிறார். மொத்த இளநீர் வியாபாரியான இவர், வெளியூரிலிருந்து இரவு லாரி மூலம் வரும் இளநீரை, சம்மந்தப்பட்ட நடைபாதையில் இறக்கி வைத்து தார்பால் கொண்டு அவற்றை மூடி வைப்பார். மறுநாள் காலை சில்லரை வியாபாரிகளுக்கு அவற்றை விற்பது வழக்கம். இப்படி தான் அவரது அன்றாட வியாபாரம் பிரச்சனை இல்லாமல் நடந்து வந்தது.  இந்நிலையில், கடந்த சில வாரங்களாக அடுக்கி வைக்கப்படும் இளநீர், காலையில் பார்க்கும் போது 100ல் இருந்து 200 வரை எண்ணிக்கை குறைந்திருந்தது.


செந்தில்-வடிவேலு கூட்டணி போல இளநீரை திருடி விற்பனை செய்த பலே ‛ரஜினி’ கைது!

தினமும் இப்படியே குறைந்து கொண்டிருக்க.. ‛என்னடா... எங்கேடா... குறையுது....’ என நொந்து கொண்டார் லிங்கம். யாரோ ஒருவர் இளநீரை திருடி செல்கிறார் என்பது மட்டும் தெரிந்தது. ஆனால், யார் அது... எப்படி திருடுகிறார் என்கிற விபரம் எல்லாம் அவரிடத்தில் இல்லை. பின்னர் அவரது கடை அருகே உள்ள அப்பார்மெண்ட்க்கு சென்ற லிங்கம், அங்குள்ள மக்களிடம் உதவி கேட்டார். தனது கடையில் தினமும் இளநீர் திருடப்படுவதாகவும், உங்களில் உள்ள சிசிடிவி உதவியோடு அதை கண்டுபிடிக்க உதவுமாறு கேட்டுள்ளார். அவர்களும் உதவ முன்வந்தனர். அதன் படி சிசிடி காட்சியும் கிடைத்தது. ஆனால் அதில் இளநீர் திருடும் நபர் யார் என்கிற விபரம் தெளிவாக தெரியவில்லை. 

என்னடா எல்லாம் கைகூடியும் ஆளை பிடிக்க முடியவில்லையே என நொந்து கொண்ட லிங்கம், நேரடியாக களத்தில் இறங்க முடிவு செய்தார். அதன் படி, சம்பவத்தன்று இளநீர் இறக்கிவிட்டு, நள்ளிரவு 1 மணியளவில், அப்பகுதியில் தன் நண்பர்களுடன் பதுங்கிக் கொண்டார் லிங்கம். சிறிது நேரத்தில் அங்கு வந்த நபர், அடுக்கி வைக்கப்பட்டிருந்த இளநீர் கொத்துகளை ஒவ்வொன்றாக எடுத்து தான் கொண்டு வந்த ட்ரை சைக்கிளில் ஏற்றத் தொடங்கினார். உடனே அவர் அருகில் வந்த லிங்கம் மற்றும் அவரது நண்பர்கள், சம்மந்தப்பட்ட நபரை சுற்றி வளைத்தனர். அந்த நபரை பார்த்த லிங்கத்திற்கு ஒரே ஷாக்.


செந்தில்-வடிவேலு கூட்டணி போல இளநீரை திருடி விற்பனை செய்த பலே ‛ரஜினி’ கைது!

அந்த நபர், லிங்கத்திற்கு நன்கு பரிட்சயமான முகம். முன்பு லிங்கத்திடம் வியாபார தொடர்பில் இருந்தவர். தெரிந்த முகம் தான். ஆனாலும் பெயர் உள்ளிட்டவை அவருக்கு நியாகம் இல்லை. ‛எத்தனை நாட்களாக இளநீர் திருடுகிறாய்...’ என அவரிடம் கேட்ட போது, ‛இன்று மட்டும் தான்...’ என்று அந்த நபர் கூறினார். ‛பார்த்தா... அப்படி தெரிவில்லையே...’ என எதிர்கேள்வி கேட்க, அந்த நபர் எந்த பதிலும் கூறவில்லை. உடனே அவரை மடக்கிபிடித்த லிங்கம் உள்ளிட்ட நண்பர்கள், அவரை கே.கே.நகர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். அதன் பின் நடந்த விசாரணையில் அவர் சென்னை நெசப்பாக்கத்தைச் சேர்ந்த ரஜினிகாந்த் என்பதும், இளநீர் வியாபாரியான அவர், கொரோனா ஊரடங்குக்கு முன்பு வரை முறையான இளநீர் வியாபாரம் செய்து வந்ததாகவும், ஊரடங்கால் வறுமையில் சிக்கி, அதிலிருந்து மீண்டு வர இளநீரை திருடி , கோயம்போடு பகுதியில் கடை போட்டு விற்று வந்தது தெரியவந்தது. முதலீடும் இல்லாமல் திருடப்பட்ட இளநீரை விற்று நல்ல வருவாய் பார்த்து வந்ததும் தெரியவந்தது. 

சினிமா ஒன்றில் கவுண்டமணியின் இளநீர் கடையில் வேலை செய்யும் செந்தில், அவற்றை திருடி வடிவேலுவை வைத்து தனிக்கடை ஒன்று போட்டு பெரிய ஆளாக மாறுவார். அதே போன்று ரஜினிகாந்தும் லிங்கத்தின் இளநீரை திருடி விற்பனை செய்து வந்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

அண்ணியுடன் கள்ள உறவு !! தடையாக இருந்த மனைவி !! கணவரே செட்டிங் போட்டு செய்த சம்பவம்
அண்ணியுடன் கள்ள உறவு !! தடையாக இருந்த மனைவி !! கணவரே செட்டிங் போட்டு செய்த சம்பவம்
மனைவியின் கள்ளத் தொடர்பு !! தட்டி கேட்ட கணவருக்கு நேர்ந்த சோகம் !! சிக்கியது எப்படி ?
மனைவியின் கள்ளத் தொடர்பு !! தட்டி கேட்ட கணவருக்கு நேர்ந்த சோகம் !! சிக்கியது எப்படி ?
சென்னையில் அதிர்ச்சி !! பெற்ற மகளையே கள்ளக் காதலனுக்கு விருந்தாக்கிய தாய்
சென்னையில் அதிர்ச்சி !! பெற்ற மகளையே கள்ளக் காதலனுக்கு விருந்தாக்கிய தாய்
" காதலனுடன் தான் வாழ்வேன் " திருமணமான பெண் பிடிவாதம் !! இறுதியில் நடந்த சம்பவம் !!
ABP Premium

வீடியோ

Mexico El Mencho Killed | PABLO ESCOBAR 2.0 உலக மாஃபியாவின் Kingpin சுட்டுக்கொலை யார் இந்த El Mencho
Kerala Bus Fire Accident|ஊசலாடிய 35 உயிர்கள்!நடுரோட்டில் தீப்பற்றிய பேருந்துகேரள மக்கள் மாஸ் சம்பவம்
PTR Palanivel Thiagarajan |”ஸ்டாலின் வாய்ப்பளித்தால்” விருப்ப மனு கொடுத்த PTR! தேர்தலில் போட்டி ஏன்?
Chinmayi | கேரள சர்ச்சை வீடியோ ஆண்களுக்கு SUPPORT செய்த GOSU கொதித்தெழுந்த சின்மயி | Kerala Issue
DMK Madurai maanadu | ஹாட்பாக்ஸில் மட்டன் பிரியாணி! சிக்கன் 65, தால்சா! மதுரை திமுக அசத்தல்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi: மு.க.ஸ்டாலினிடம் 40 சீட் கேட்ட உதயநிதி..! ஓகே சொல்வாரா அப்பா?
Udhayanidhi: மு.க.ஸ்டாலினிடம் 40 சீட் கேட்ட உதயநிதி..! ஓகே சொல்வாரா அப்பா?
DMDK: எந்த தொகுதியில நிக்கலாம்? பட்டியலை பட்டைத் தீட்டும் தேமுதிக - உத்தரவு போட்ட பிரேமலதா!
DMDK: எந்த தொகுதியில நிக்கலாம்? பட்டியலை பட்டைத் தீட்டும் தேமுதிக - உத்தரவு போட்ட பிரேமலதா!
விஜய்க்கு ஆதரவு: பண்ருட்டி ராமச்சந்திரன் கட்சி அதிரடி முடிவு! தேர்தல் களம் பரபரப்பு!
விஜய்க்கு ஆதரவு: பண்ருட்டி ராமச்சந்திரன் கட்சி அதிரடி முடிவு! தேர்தல் களம் பரபரப்பு!
TN Voter List: போன் நம்பர் போதும்.. இறுதி வாக்காளர் பட்டியலில் உங்க பெயர் இருக்கா? 3 வழியில் உடனே சரிபார்க்கலாம்!
TN Voter List: போன் நம்பர் போதும்.. இறுதி வாக்காளர் பட்டியலில் உங்க பெயர் இருக்கா? 3 வழியில் உடனே சரிபார்க்கலாம்!
மாணவர்களிடையே வளர்ந்து நிற்கும் சாதி வெறிக்கு யார் பொறுப்பு? சாத்தான்குளம் சம்பவத்தில் ஈபிஎஸ் கேள்வி!
மாணவர்களிடையே வளர்ந்து நிற்கும் சாதி வெறிக்கு யார் பொறுப்பு? சாத்தான்குளம் சம்பவத்தில் ஈபிஎஸ் கேள்வி!
ஏடிஎம் கார்டு இல்லாமல் பணம் எடுப்பது எப்படி? பணம் எடுக்கும் எளிய வழிமுறைகள்!
ஏடிஎம் கார்டு இல்லாமல் பணம் எடுப்பது எப்படி? பணம் எடுக்கும் எளிய வழிமுறைகள்!
Isha: பழங்குடியின, கிராமப்புற மாணவர்களுக்கு ஈஷா கல்வி உதவித்தொகை!
Isha: பழங்குடியின, கிராமப்புற மாணவர்களுக்கு ஈஷா கல்வி உதவித்தொகை!
UPSC: யுபிஎஸ்சி CAPF -ல் 349 பணியிடங்கள்! உடனே விண்ணப்பிங்க- தகுதி, வழிமுறை.. முழு விவரம் இதோ!
UPSC: யுபிஎஸ்சி CAPF -ல் 349 பணியிடங்கள்! உடனே விண்ணப்பிங்க- தகுதி, வழிமுறை.. முழு விவரம் இதோ!
Embed widget