மேலும் அறிய

தோஷம் கழிப்பதாக கூறி மூதாட்டியிடம் 11 சவரன் அபேஸ்...! - மாயாஜால திருடன் கைது...!

குண்டர் சட்டத்தில் கைதாகி வெளியே வந்த நிலையில், தோஷம் கழிப்பதாக கூறி மூதாட்டியிடம் 11 சவரன் நகையை அபேஸ் செய்த பாருக் கைது செய்யப்பட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சியில் தோஷம் கழிப்பதாக கூறி மூதாட்டியிடம் 11 சவரன் நகையை அபேஸ் செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் வாய்க்கால் மேடு தெருவைச் சேர்ந்த சீதாபதி என்பவரின் மனைவி ராஜலட்சுமி. 63 வயது மூதாட்டியான இவர் வீட்டில் தனியாக இருப்பதை நோட்டமிட்டு நபர் ஒருவர், மூதாட்டி ராஜலட்சுமியிடம் உங்கள் வீட்டில் தோஷம் இருப்பதாகவும் அதனை கழிப்பதாகவும் கூறி, மந்திரம் செய்வது போல வேடிக்கை காட்டிவிட்டு பத்து நிமிடங்களுக்கு பிறகு ராஜலட்சுமி கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை அவிழ்த்து மஞ்சள் நீர் கலந்த கிண்ணத்தில் வைக்க சொல்லி உள்ளார்.

மூதாட்டி ராஜலட்சுமி கழுத்தில் இருந்த 11 சவரன் தங்க சங்கிலியை கிண்ணத்தில் வைத்தவுடன், பூஜை செய்ய வேண்டியுள்ளதால் கை, கால்களை கழுவி வருமாறு மூதாட்டி ராஜலட்சுமியிடம் அந்த நபா் கூறியுள்ளார். அதன்படி, ராஜலட்சுமி கை, கால் கழுவுவதற்காக வீட்டினுள் சென்ற போது  கண்ணிமைக்கும் நேரத்தில் பாரு தங்க சங்கிலியை உடன் தலைமறைவானர்.


தோஷம் கழிப்பதாக கூறி மூதாட்டியிடம் 11 சவரன் அபேஸ்...! - மாயாஜால திருடன் கைது...!

இதையடுத்து அதிர்ச்சி அடைந்து ராஜலட்சுமி கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் தோஷம் கழிப்பதாக கூறி என்னிடம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றதாக புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியா உல்ஹக் உத்தரவின்பேரில் கள்ளக்குறிச்சி துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவலர்கள் தலைமையிலான போலீஸார் கள்ளக்குறிச்சி கோட்டைமேடு போன்ற இடங்களில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர் அப்போது அவ்வழியாக அதிவேகமாக வந்த இருசக்கர வாகனத்தை மடக்கிப் பிடித்தனர்.

தோஷம் கழிப்பதாக கூறி மூதாட்டியிடம் 11 சவரன் அபேஸ்...! - மாயாஜால திருடன் கைது...!

 

பின்னர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர் விசாரணையில் இருசக்கரவாகனத்தில் வந்தவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார் சந்தேகம் அடைந்த காவல் துறையினர் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து தீவிர விசாரணையை மேற்கொண்டதில் விசாரணையில் அவர், வேலூர் மாவட்டம் ஆம்பூரை சேர்ந்த பாருக் என்பதும், இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் வாய்க்கால் மேட்டு தெருவைச் சேர்ந்த ராஜலட்சுமி இடம் தோஷம் கழிப்பதாக கூறி அவரது கழுத்தில் இருந்த 11 பவுன் தங்க சங்கிலியை திருடிச் சென்றதையும் ஒப்புக்கொண்டுள்ளார். பின்னர் இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.

மேலும் பாருக் மீது சென்னை, ஆம்பூர், கள்ளக்குறிச்சி, குடியாத்தம், ஆகிய காவல் நிலையங்களில் சுமார் ஒன்பது குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், இதனால் ஏற்கெனவே குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதாகி ஓராண்டு காலம் சிறையிலிருந்து தற்போது வெளிவந்த நிலையில் மீண்டும் கைவரிசையைக் காட்டத் தொடங்கி இருப்பதும் தெரியவந்துள்ளது.

 

Kolar Truck Looted: லாரியை மறித்து வழிப்பறி: ரூ.6.50 கோடி மதிப்புள்ள செல்போன்கள் கொள்ளை!

தலைப்பு செய்திகள்

புது பைக் வாங்குபவர்கள் கண்டிப்பாக அறிய வேண்டிய உண்மை! நீதிமன்றத்தின் பரபரப்பு உத்தரவு!
புது பைக் வாங்குபவர்கள் கண்டிப்பாக அறிய வேண்டிய உண்மை! நீதிமன்றத்தின் பரபரப்பு உத்தரவு!
இராமநாதபுரம் ஊரணியில் மணல் கொள்ளை: புகார் எதிரொலியாக அதிரடி நடவடிக்கை!
இராமநாதபுரம் ஊரணியில் மணல் கொள்ளை: புகார் எதிரொலியாக அதிரடி நடவடிக்கை!
யாருக்காகக் காத்திருக்கிறது இந்த அங்கன்வாடி? கட்டப்பட்டு மாதங்கள் கடந்தும் திறக்கப்படாத விசித்திரம்!
யாருக்காகக் காத்திருக்கிறது இந்த அங்கன்வாடி? கட்டப்பட்டு மாதங்கள் கடந்தும் திறக்கப்படாத விசித்திரம்!
அடுத்து எந்த கடை? அச்சத்தில் வியாபாரிகள்... மயிலாடுதுறையில் நள்ளிரவில் களமிறங்கிய 'பூட்டுடைப்பு' கும்பல்!
அடுத்து எந்த கடை? அச்சத்தில் வியாபாரிகள்... மயிலாடுதுறையில் நள்ளிரவில் களமிறங்கிய 'பூட்டுடைப்பு' கும்பல்!

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: தேர்தலில் படுதோல்வி.. பறிபோகிறது 20 மாவட்டச் செயலாளர்கள் பதவி? மு.க.ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு!
DMK: தேர்தலில் படுதோல்வி.. பறிபோகிறது 20 மாவட்டச் செயலாளர்கள் பதவி? மு.க.ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு!
13 நாட்களுக்குப்பின் ஈரான் மீதான தாக்குதலை நிறுத்திய ட்ரம்ப்; ஏன் இந்த முடிவு.? இத்தனை காரணங்களா.?
13 நாட்களுக்குப்பின் ஈரான் மீதான தாக்குதலை நிறுத்திய ட்ரம்ப்; ஏன் இந்த முடிவு.? இத்தனை காரணங்களா.?
Iran Vs Trump: ஆறுச்சாமி ஆன ஈரான்; பெருமாள் பிச்சை ஆன ட்ரம்ப்; பாதி வழியில் விமானத்தை மாற்றிய அமெரிக்க அதிபர்
ஆறுச்சாமி ஆன ஈரான்; பெருமாள் பிச்சை ஆன ட்ரம்ப்; பாதி வழியில் விமானத்தை மாற்றிய அமெரிக்க அதிபர்
த.வெ‌.க அரசு கடந்த 3 மாதங்களில் மட்டும் 20,281 கோடியை கடனை வாங்கியுள்ளது  - முன்னாள் அமைச்சர் அதிர்ச்சி தகவல் !
த.வெ‌.க அரசு கடந்த 3 மாதங்களில் மட்டும் 20,281 கோடியை கடனை வாங்கியுள்ளது  - முன்னாள் அமைச்சர் அதிர்ச்சி தகவல் !
EPS ADMK : அந்த 4 பேரை விடவே மாட்டேன்.. ஸ்கெட்ச் போட்ட இபிஎஸ்.! நேரில் வர அழைப்பு விடுத்த சபாநாயகர்- வெளியான கடிதம்
அந்த 4 பேரை விடவே மாட்டேன்.. ஸ்கெட்ச் போட்ட இபிஎஸ்.! நேரில் வர அழைப்பு விடுத்த சபாநாயகர்- வெளியான கடிதம்
Tiago Vs Grand i10 Nios: டாடா டியாகோவா.? ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸா.? பெர்ஃபார்மென்ஸ் கிங் யார்.? சோதனை முடிவுகள் இதோ
டாடா டியாகோவா.? ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸா.? பெர்ஃபார்மென்ஸ் கிங் யார்.? சோதனை முடிவுகள் இதோ
Tata Sumo Next Generation: புதிய அவதாரம் எடுக்கும் ரௌடி பாய்; சுமோவின் அடுத்த தலைமுறையை இறக்கப் போகும் டாடா; என்ன சிறப்பு.?
புதிய அவதாரம் எடுக்கும் ரௌடி பாய்; சுமோவின் அடுத்த தலைமுறையை இறக்கப் போகும் டாடா; என்ன சிறப்பு.?
Honda QC3 Scooter: அப்படி போடு.! 151 கிமீ ரேஞ்ச்; ஹெல்மெட், மளிகை பொருள் வைக்க பெரிய இடம்; ஹோண்டா களமிறக்கிய QC3 e ஸ்கூட்டர்
அப்படி போடு.! 151 கிமீ ரேஞ்ச்; ஹெல்மெட், மளிகை பொருள் வைக்க பெரிய இடம்; ஹோண்டா களமிறக்கிய QC3 e ஸ்கூட்டர்
Embed widget