மேலும் அறிய

திருவாரூரில் 6ஆம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது

சிறுமி தனது வீட்டின் கொல்லைப்புறத்தில் விளையாண்டு கொண்டிருந்த பொழுது அன்பழகன் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்துள்ளார். அதனை அன்பழகனின் மனைவி நேரடியாக பார்த்து சத்தம் போட்டுள்ளார்.

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே பாலாக்குடி புதுத் தெருவைச் சேர்ந்த ஆறாம் வகுப்பு சிறுமிக்கு அதே பகுதியை சேர்ந்த அன்பழகன் என்பவர் பாலியல் துன்புறுத்தல் அளித்ததன் அடிப்படையில் திருவாரூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அன்பழகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கொரடாச்சேரி பகுதியைச் சேர்ந்த விவசாயக் கூலித் தொழிலாளர்களின் மகள் அங்கு உள்ள அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் பெற்றோர்கள் வேலைக்கு செல்லும் நேரத்தில் சிறுமி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அந்த நேரத்தில் அவருடைய வீட்டின் பின்புறத்தில் உள்ள அன்பழகன் என்பவர் சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் அளித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று சிறுமி தனது வீட்டின் கொல்லைப்புறத்தில் விளையாடி கொண்டிருந்த பொழுது அன்பழகன் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்துள்ளார். அதனை அன்பழகனின் மனைவி நேரடியாக பார்த்து சத்தம் போட்டுள்ளார்.

திருவாரூரில் 6ஆம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது
 
அவரது சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினரும் சிறுமியின் உறவினர்களும் அன்பழகனை பிடித்து கொரடாச்சேரி காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். பின்னர் சிறுமியின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததன் அடிப்படையில் இந்த  வழக்கை திருவாரூரில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றி உள்ளனர். அதன் அடிப்படையில் அன்பழகன் மீது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்தது போஸ்கோ வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் காவல்துறையினர் அன்பழகனை அடைத்தனர். குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் சமீபகாலமாக குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் என்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனை தடுக்கும் வகையில் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என பெற்றோர்கள் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
 

திருவாரூரில் 6ஆம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது
 
அதே நேரத்தில் பெற்றோர்களும் தங்களுடைய குழந்தைகளுக்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கி வளர்க்க வேண்டும். சிறுவயதிலிருந்தே குழந்தைகளுக்கு மற்றவர்கள் நடந்துகொள்ளும் விதங்கள் குறித்து புரிய வைக்க வேண்டும், குழந்தைகள் மீது பெற்றோர்கள் தனி கவனம் செலுத்த வேண்டும் இதே போன்று செய்தால் தான் இந்த மாதிரியான சம்பவங்களை குறைப்பதற்கான வழி வகைகள் அதிகமாகும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் காவல் துறை சார்பில் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஆறாம் வகுப்பு சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் அன்பழகனுக்கு கடுமையான தண்டனை பெற்றுத் தர வேண்டும் என பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர்கள் காவல்துறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர் அதனையடுத்து காவல்துறையின் சார்பில் நீதிமன்றத்தின் மூலமாக அன்பழகனுக்கு கடுமையான தண்டனை பெற்றுத் தரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

" காதலனால் கர்ப்பமான நர்ஸ் " எனக்கு எதுவுமே தெரியாது என சாதித்த நர்ஸ்
Supreme Court: வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Embed widget