மேலும் அறிய
மதுரை மாநகராட்சி பகுதிகளில் தடைசெய்யப்பட்ட பான் மசாலா மற்றும் குட்கா பொருட்கள் பறிமுதல் – 28 கடைகள் சீல் !
தகவல் தெரிந்தால், பொதுமக்கள் உடனடியாக உணவு பாதுகாப்புத்துறை அல்லது காவல்துறைக்கு தகவல் அளித்து ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

பான் மசாலா கடை
Source : whatsapp
மதுரை மாநகராட்சி பகுதிகளில் தடைசெய்யப்பட்ட பான் மசாலா மற்றும் குட்கா பொருட்கள் பறிமுதல் – 28 கடைகள் சீல்
புகையிலைப் பொருட்கள் விற்பனை தொடர்பான ஆய்வு
மதுரை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை சார்பில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை மற்றும் பதுக்கல் தொடர்பாக 01.05.2026 முதல் 26.05.2026 வரை மாவட்டம் முழுவதும் தீவிர ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்படி, உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் மூலம் 3,804 கடைகளிலும், கூட்டுப்படையினர் மூலம் 2,537 கடைகளிலும் என மொத்தம் 6,341 கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வுகளில் மொத்தம் 32 இடங்களில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் கண்டறியப்பட்டு, 28 கடைகள் மூடப்பட்டன. மேலும், மொத்தம் 134.93 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
விதிமீறலில் ஈடுபட்ட 28 கடைகளுக்கு சீல்
விதிமீறலில் ஈடுபட்ட 28 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு சம்பந்தப்பட்ட 30 நபர்களுக்கு மொத்தம் ரூ.10,25,000/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 9 வழக்குகளில் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டு, தொடர்ந்து சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மதுரை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை, சேமிப்பு மற்றும் கடத்தல் நடவடிக்கைகள் மீது தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு, கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
எனவே, தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுவது குறித்து தகவல் தெரிந்தால், பொதுமக்கள் உடனடியாக உணவு பாதுகாப்புத்துறை அல்லது காவல்துறைக்கு தகவல் அளித்து ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement

வினய் லால்Columnist
Opinion




















