மேலும் அறிய
மடப்புரம் அஜித்குமார் உயிரிழப்பு தொடர்பான சி.பி.ஐ., விசாரணைக்கு அஜித்குமார் சகோதரர் உட்பட 5 பேர் ஆஜர் !
மதுரை ஆத்திகுளம் சி.பி.ஐ., அலுவலகத்தில் அஜித்குமார் உயிரிழப்பு தொடர்பாக பல கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது.

மதுரையில் சி.பி.ஐ., விசாரணை
Source : whats app
மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார், காவல்துறை விசாரணையில் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில், கோயில் ஊழியர்கள், அஜித்குமாரின் சகோதரர் உள்ளிட்ட 5 நபர்கள் சி.பி.ஐ., அலுவலகத்தில் ஆஜர்.
அஜிக்குமார் வழக்கில் சி.பி.ஐ., விசாரணை
சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார். கடந்த 28 ஆம் தேதி திருப்புவனம் காவல் நிலைய நகை திருட்டு வழக்கு விசாரனைக்கு தனிப்படை காவலர்கள் அழைத்துச் சென்ற போது, கடுமையாக தாக்கியதில் உயிரிழந்தார். இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு சி.பி.ஐ தற்சமயம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. கடந்த 14 ஆம் தேதி முதல் நாளான சி.பி.ஐ விசாரனையின் போது டி.எஸ்.பி மோஹித்குமார் தலைமையிலான 5 பேர் கொண்ட குழுவினர், அஜித்குமார் தாக்கப்பட்டதாக கூறப்படும் அறநிலையத்துறை அலுவலகம் பின்புறமுள்ள கோசாலை, அரசினர் மாணவர் விடுதி, புளியந்தோப்பு ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு விசாரனையை துவங்கினர்.
கோயில் ஊழியர்கள் உள்ளிட்ட 5 பேருக்கு சம்மன்
இரண்டாவது நாள் விசாரணையில் மதுரை பகுதிகளில் ஆவணங்களை பெறும் பணியினை மேற்கொண்டதுடன், தொடர்ந்து நேற்று இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக உள்ள அறநிலையத்துறை ஊழியர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் ஆகியோர்களுக்கு விசாரணைக்கான சம்மனை வழங்கினர். இதில் அஜித்குமார் நண்பரான ஆட்டோ ஓட்டுநர் அருண்குமார், உதவி ஆணையர் ஓட்டுநர் கார்த்திக்வேல், அஜித்குமாரின் சக ஊழியர்களான பிரவின்குமார், வினோத்குமார், ஆகியோர் மற்றும் அஜித்குமாரின் சகோதரரான நவீன்குமார் ஆகியோருக்கு மடப்புரம் அறநிலையத்துறை அலுவலகத்திற்கு வந்த சி.பி.ஐ அதிகாரி நேரில் அனைவரையும் வரவழைத்து, இன்று மதுரை ஆத்திக்குளத்தில் உள்ள சி.பி.ஐ அலுவலகத்தில் ஆஜராகக் கூறி சம்மன் வழங்கியிருந்தனர்.
மதுரை சி.பி.ஐ., அலுவலகத்தில் அஜிக்குமார் தொடர்பான விசாரணைக்கு ஆஜர்
இந்நிலையில் திருப்புவனத்தில் அஜித்குமாருடன் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட உதவி ஆணையரின் ஓட்டுனர் கார்த்திகேயன் மற்றும் ஆட்டோ ஓட்டுனர் அருண்குமார், அஜித்குமாரின் சகோதரர் நவீன் மற்றும் அஜித் குமாருடன் காவலராக பணிபுரிந்த பிரவீன் குமார் வினோத்குமார் ஆகியோர் இன்று மதுரை ஆத்திகுளம் பகுதியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகினர். அஜித்குமார் உயிரிழப்பு தொடர்பாக பல கட்டமான விசாரணை நடைபெற்று வருகிறது.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















