மேலும் அறிய

செல்போனுக்கு ஆசைப்பட்டு டாக்சி டிரைவரை கொலை செய்த ராணுவ வீரர்: மதுரை அருகே பயங்கரம்!

அலங்காநல்லூரில் கார் மற்றும் செல்போனுக்காக கால்டாக்ஸி உரிமையாளரை கடத்தி கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு காரை திருடி சென்ற ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கோட்டைமேடு பகுதியில் கடந்த வாரம் தேனி மாவட்டம் தேவதானப்பட்டி பகுதியை சேர்ந்த பாண்டியன் என்ற கால்டாக்ஸி ஓட்டுநர் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த கொலை தொடர்பாக அலங்காநல்லூர் போலீசார் வழக்குபதிவு செய்து குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில் போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுவந்த நிலையில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

செல்போனுக்கு ஆசைப்பட்டு டாக்சி டிரைவரை கொலை செய்த ராணுவ வீரர்: மதுரை அருகே பயங்கரம்!
 கால் டாக்ஸி டிரைவரை  வண்டி வாடகைக்கு வேண்டும் என அழைத்து சென்ற  ராணுவ வீரரான மார்நாடு என்ற வாலிபர், அலங்காநல்லூர் பகுதிக்கு காரை அழைத்து சென்று, மறைத்து வைத்திருந்த கத்தியால் கால்டாக்ஸி உரிமையாளர் பாண்டியை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு உடலை வயல்வெளியில் வீசியுள்ளார்.  அங்கிருந்து கார், மற்றும் செல்போன், பணத்தை திருடி சென்றுள்ளார். கார் மற்றும் செல்போனுக்காக இந்த கொலையை ராணுவ வீரர் செய்தது தெரியவந்துள்ளது.

செல்போனுக்கு ஆசைப்பட்டு டாக்சி டிரைவரை கொலை செய்த ராணுவ வீரர்: மதுரை அருகே பயங்கரம்!
கார் சென்ற இடத்தை சி.சி.டி.வி. காட்சிகள் மூலம் ஆய்வு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள தொட்டியபட்டி பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரர் மார்நாடு, காரை கடத்தி சென்று கண்மாயில்  மறைத்துவிட்டு சென்றது தெரியவந்தது. இதனை தொடர்ந்து ராணுவ வீரரான மார்நாடை கைது செய்த அலங்காநல்லூர் போலீசார் அவரிமிருந்த கார் மற்றும் 3 செல்போன்களையும் மீட்டு மார்நாடை வாடிப்பட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். கார் மற்றும் செல்போனுக்காக கார் உரிமையாளரை கொலை செய்து காரை திருடி சென்ற ராணுவ வீரரின் செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செல்போனுக்கு ஆசைப்பட்டு டாக்சி டிரைவரை கொலை செய்த ராணுவ வீரர்: மதுரை அருகே பயங்கரம்!
இது குறித்து காவல்துறையினர்...,” மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  வீ.பாஸ்கரன் அவர்கள் உத்தரவின்பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தனிப்படையினரின் சீரிய முயற்சியினால் இச் சம்பவத்தில் ஈடுபட்ட மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா தொட்டியபட்டி சேர்ந்த முனியாண்டி மகன் மார்நாடு என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டது. அவருடம் இருந்து கொலைக்கு பயன்படுத்திய ஆயுதம் மற்றும் இறந்த நபரின் நான்கு சக்கர வாகனத்தையும் தனிப் படையினர் கைப்பற்றினர். மேற்படி மார்நாடு என்பவர் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். தற்சமயம் இவர் ராணுவத்திற்கு வேலைக்குச் செல்லாமல் இருந்து வருகிறார் என்று விசாரணையில் தெரிய வருகிறது. இச்சம்பவத்தில் சிறப்பாக செயல்பட்டு துரிதமாக எதிரியை கைது செய்த தனிப்படையினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  வீ. பாஸ்கரன் அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.”

தலைப்பு செய்திகள்

"எல்லாம் காதலுக்காக.." எம்.எல்.ஏ-விடமே சினிமா பாணியில் கைவரிசை காட்டிய மேலாளர்: கிடுக்கிப்பிடி விசாரணையில் உடைந்த மயக்க நாடகம்!
சாமியார்களுக்கே 'விபூதி' அடித்த போலீஸ் - திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் இருந்த கஞ்சா - சிக்கியது எப்படி?
சாமியார்களுக்கே 'விபூதி' அடித்த போலீஸ் - திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் இருந்த கஞ்சா - சிக்கியது எப்படி?
மகள் கண் எதிரே , தாய்க்கு நேர்ந்த பாலியல் கொடுமை நடந்த அதிர்ச்சி சம்பவம்
மகள் கண் எதிரே , தாய்க்கு நேர்ந்த பாலியல் கொடுமை நடந்த அதிர்ச்சி சம்பவம்
" ஏற்கனவே திருமணமானதை மறைத்து , காதலியைக் கொலை செய்த ஆட்டோ ஓட்டுநர் " அதிர்ச்சி சம்பவம்

வீடியோ

Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி
Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NEET: நீட் தற்கொலைகள்: விஜய் அரசுக்கு திருமாவளவன் வைத்த கோரிக்கை என்ன?
NEET: நீட் தற்கொலைகள்: விஜய் அரசுக்கு திருமாவளவன் வைத்த கோரிக்கை என்ன?
பெரியபாளையம் ஆலை மூடல்; 23 பேருக்கு தீவிர சிகிச்சை- உரிமையாளர் கைது, அமைச்சர்கள் ஆறுதல்
பெரியபாளையம் ஆலை மூடல்; 23 பேருக்கு தீவிர சிகிச்சை- உரிமையாளர் கைது, அமைச்சர்கள் ஆறுதல்
IND A: நேற்று சீனியர்.. இன்று ஜுனியர்! முத்தரப்பு தொடரை வென்ற இந்தியா ஏ! சூர்யவன்ஷி காட்டடி!
IND A: நேற்று சீனியர்.. இன்று ஜுனியர்! முத்தரப்பு தொடரை வென்ற இந்தியா ஏ! சூர்யவன்ஷி காட்டடி!
ரெடி ஜூட்.. ஜூன் 23 மாபெரும் போராட்டத்தை அறிவித்த திமுக- எதற்கு தெரியுமா?
ரெடி ஜூட்.. ஜூன் 23 மாபெரும் போராட்டத்தை அறிவித்த திமுக- எதற்கு தெரியுமா?
பெரியபாளையத்தில் பெரும் சோகம்! - மூக்கு, வாயில் வந்த ரத்தம்.. அமோனியா வாயு கசிந்து 7 பேர் துடிதுடித்து மரணம்
பெரியபாளையத்தில் பெரும் சோகம்! - மூக்கு, வாயில் வந்த ரத்தம்.. அமோனியா வாயு கசிந்து 7 பேர் துடிதுடித்து மரணம்
DMK ADMK Alliance: பகையாளி அல்ல; பங்காளிகள்..! விஜய்யை வீழ்த்த திமுக - அதிமுக கூட்டணியா?
DMK ADMK Alliance: பகையாளி அல்ல; பங்காளிகள்..! விஜய்யை வீழ்த்த திமுக - அதிமுக கூட்டணியா?
உருவாகிறதா மங்காத்தா 2? அஜித்துடன் பேச்சுவார்த்தை நடத்திய வெங்கட்பிரபு - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
உருவாகிறதா மங்காத்தா 2? அஜித்துடன் பேச்சுவார்த்தை நடத்திய வெங்கட்பிரபு - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
நாளை சட்டசபை கூடியதும் முதல்வர் விஜய் இதைச் செய்யவேண்டும்; செக் வைத்த கம்யூனிஸ்ட்!
நாளை சட்டசபை கூடியதும் முதல்வர் விஜய் இதைச் செய்யவேண்டும்; செக் வைத்த கம்யூனிஸ்ட்!
Embed widget