மேலும் அறிய

வங்கி டெபாசிட் பணத்தை எடுத்து சினிமா தயாரிப்பாளர்களுக்கு கடனாக வழங்கிய நிர்வாகிகள்!

வங்கியில் நகையே இல்லாமல் நகைக்கடன் கொடுத்ததாக தெரியவந்த நிலையில் தான், தற்போது அந்த பணத்தை சினிமாத்துறையைச் சேர்ந்தவர்களிடம் கடனாக கொடுத்தது அம்பலமாகியுள்ளது.

திருச்செந்தூர் அருகே குரூம்பூர் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் மக்கள் டெபாசிட் செய்த பணத்தை சினிமா எடுப்பதற்காக கொடுத்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இச்சம்பவம் வாடிக்கையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் உள்ள நகைகள் தள்ளுபடி செய்யப்படும் என முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பையடுத்து கூட்டுறவு வங்கி நிர்வாகிகள் நகை அடகு வைத்திருந்த மக்களிடம் ஆதார், ரேசன் போன்ற அடையாள அட்டைகளையெல்லாம் பெற்றுக்கொண்டு இதுக்குறித்து பரிசீலனை நடைபெற்றுவருகிறது. மேலும் ஒவ்வொரு வங்கியிலும் அதிகாரிகள், வங்கிகளில் உள்ள நகைகளை மதிப்பீடு செய்து வருகின்றனர். இந்நிலையில் தான் தூத்துக்குடி மாவட்டம்  திருச்செந்தூர் அருகே குரூம்பூர் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் நடந்த மோசடி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. யார் பல கோடி ரூபாய் மோசடிக்கு காரணம்? பணத்தை என்ன செய்தார்கள் என்ற ஆய்வு முடிவு தான் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

  • வங்கி டெபாசிட் பணத்தை எடுத்து சினிமா தயாரிப்பாளர்களுக்கு கடனாக வழங்கிய நிர்வாகிகள்!,

இவ்வங்கியில் மக்கள் செய்யும் டெபாசிட் பணத்தை அவர்கள் வங்கிக்கணக்கில் சேர்க்காமல் இதனை வட்டிக்கொடுக்க வங்கி நிர்வாகிகள் முடிவெடுத்துள்ளனர். இதன் பேரில் சினிமா எடுக்கும் தயாரிப்பாளர்களுக்கு வட்டிக்கு கொடுக்கும் போது இரட்டிப்பு பணம் பெறலாம் என்ற ஆசையில் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி நிர்வாகிகள் கொடுத்துள்ளனர். குறிப்பாக சினிமா படம் எடுப்பதற்கு ரூபாய் 20 கோடி கொடுக்கும் போது 6 மாதம் கழித்து 25 கோடியாக வழங்குவார்கள் என மற்றவர்கள் சொல்வதைக் கேட்டு, ரூ.50 கோடியை குரூம்பூர் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் சினிமா பிரமுகருக்கு வட்டிக்கொடுத்துள்ளனர். ஆனால் கொரோனா காலம் என்பதால் சினிமாத்துறை முடங்கியதால் படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறவில்லை. இதனால் இவர்கள் கொடுத்த பணம் திரும்பி வரவில்லை. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த சூழலில் தான், அதிகாரிகள் நடத்திய ஆய்விலும் சிக்கிக்கொண்டனர். இச்சம்பவத்தை அறிந்த வங்கி வாடிக்கையாளர்கள் தங்களது கணக்கில் டெபாசிட் செய்த பணம் இருக்கிறதா? என்று விசாரிக்கையில் பணம் டெபாசிட் ஆகாமல் இருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து இந்த மோசடியில் ஈடுபட்ட தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கித்தலைவர் முருகேசப்பாண்டியன், செயலாளர் தேவராஜ், துணை செயலாளர் ஜான்சி சந்திரகாந்தா ஞானபாய் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டனர். மேலும் கூட்டுறவு வங்கி கள அலுவலர் ஆழ்வார் குமார் சஸ்பென்ட் செய்யப்பட்டார். இதோடு கடந்த 13 ஆம் தேதி  கூட்டுறவு வங்கித்தலைவர் முருகேசப்பாண்டினை போலீசார் கைது செய்து தொடர் விசாரணை நடத்திவருகின்றனர். இச்சம்பவம் தூத்துக்குடி மாவட்டம் மட்டுமில்லை தமிழம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.  இதோடு வங்கி மோசயில் ஈடுபட்ட பல கோடி ரூபாய் பணத்திற்கு ஈடாக நிர்வாகிகள் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் பறிமுதல் செய்யும் வகையில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இச்சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில் வணிக குற்றவியல் புலனாய்வுப்பிரிவு போலீசார் தமிழகம் முழுவதும் வங்கிகளில் ஆய்வு நடத்துவார்கள் என தெரியவருகிறது. முன்னதாக வங்கியில் நகையே இல்லாமல் நகைக்கடன் கொடுத்ததாக தெரியவந்த நிலையில் தான், தற்போது அந்த பணத்தை சினிமாத்துறையைச் சேர்ந்தவர்களிடம் கடனாக கொடுத்தது அம்பலமாகியுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

ஆண்களுடன் ஏற்பட்ட தகாத உறவு !! அக்காவை பழி தீர்க்க தம்பி செய்த வெறிச் செயல்
ஆண்களுடன் ஏற்பட்ட தகாத உறவு !! அக்காவை பழி தீர்க்க தம்பி செய்த வெறிச் செயல்
மனைவி மீது ஏற்பட்ட சந்தேகம் !! தனி அறை எடுத்து இறுதியாக பேசிய வீடியோ கால் !! நடந்தது என்ன ?
மனைவி மீது ஏற்பட்ட சந்தேகம் !! தனி அறை எடுத்து இறுதியாக பேசிய வீடியோ கால் !! நடந்தது என்ன ?
அதிகாரிகளை எதிர்த்த டி.எஸ்.பி சுந்தரேசனுக்கு மீண்டும் பணி: நீலகிரி டி.எஸ்.பியாக பொறுப்பேற்பு...
அதிகாரிகளை எதிர்த்த டி.எஸ்.பி சுந்தரேசனுக்கு மீண்டும் பணி: நீலகிரி டி.எஸ்.பியாக பொறுப்பேற்பு...
சீர்காழி அருகே பரபரப்பு: மதுபான கடை வாசலில் வாலிபர் சுருண்டு விழுந்து உயிரிழப்பு - கள்ளமது விற்பனையால் நேர்ந்த விபரீதமென உறவினர்கள் குற்றச்சாட்டு..
சீர்காழி அருகே பரபரப்பு: மதுபான கடை வாசலில் வாலிபர் சுருண்டு விழுந்து உயிரிழப்பு - கள்ளமது விற்பனையால் நேர்ந்த விபரீதமென உறவினர்கள் குற்றச்சாட்டு..
ABP Premium

வீடியோ

Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி
Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK
TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Smallpox Prevention : சின்னம்மை பாதிப்பா குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாதீங்க... பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்ன.?
சின்னம்மை பாதிப்பா குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாதீங்க... பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்ன.?
TN Assembly: போஸ்டர், பேனர்களுக்கு நோ.. அரசியல் கட்சிகளையே அலறவிடும் தமிழக கிராமம் - எந்த ஊருப்பா?
TN Assembly: போஸ்டர், பேனர்களுக்கு நோ.. அரசியல் கட்சிகளையே அலறவிடும் தமிழக கிராமம் - எந்த ஊருப்பா?
Khameni: 15 நிமிஷம்தான்.. முடிவுக்கு வந்த சண்டை! காஷ்மீரில் அப்பவே சம்பவம் செய்த காமேனி!
Khameni: 15 நிமிஷம்தான்.. முடிவுக்கு வந்த சண்டை! காஷ்மீரில் அப்பவே சம்பவம் செய்த காமேனி!
Israel Iron Beam: இஸ்ரேல் களமிறக்கிய அதிநவீன ஆயுதம்; சிதறும் எதிரிகளின் ஏவுகணைகள்; அதென்ன அயர்ன் பீம்.?
இஸ்ரேல் களமிறக்கிய அதிநவீன ஆயுதம்; சிதறும் எதிரிகளின் ஏவுகணைகள்; அதென்ன அயர்ன் பீம்.?
கிளாப் அடிக்குறதுனா சும்மாவா? விக்ரமனையே மிரளவைத்த காமெடி நடிகர் - இவரா?
கிளாப் அடிக்குறதுனா சும்மாவா? விக்ரமனையே மிரளவைத்த காமெடி நடிகர் - இவரா?
KS Ravikumar: விக்ரமனிடம் கே.எஸ்.ரவிக்குமார் போட்ட கண்டிஷன்- என்ன தெரியுமா?
KS Ravikumar: விக்ரமனிடம் கே.எஸ்.ரவிக்குமார் போட்ட கண்டிஷன்- என்ன தெரியுமா?
இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டல்...சர்ச்சையில் மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குநர் சிதம்பரம்
இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டல்...சர்ச்சையில் மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குநர் சிதம்பரம்
Saudi Arabia Attack: ”உலகின் எண்ணெய் வங்கி” அராம்கோவை தாக்கிய ஈரான் ட்ரோன்கள் - கலக்கத்தில் உலக நாடுகள்
Saudi Arabia Attack: ”உலகின் எண்ணெய் வங்கி” அராம்கோவை தாக்கிய ஈரான் ட்ரோன்கள் - கலக்கத்தில் உலக நாடுகள்
Embed widget