![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Crime: சென்னையில் பயங்கரம்.. தனியாக இருந்த பெண்ணுக்கு வீடுபுகுந்து, கத்திமுனையில் வன்கொடுமை முயற்சி.. நடந்தது என்ன?
தொடர்ந்து சில நாள்களாக நோட்டமிட்டு வந்த நபர்கள் இருவர், திடீரென வீட்டுக்குள் புகுந்து, கத்திமுனையில் ப்ரீத்தியை பாலியல் வன்புணர்வு செய்ய முயன்றுள்ளனர்.
![Crime: சென்னையில் பயங்கரம்.. தனியாக இருந்த பெண்ணுக்கு வீடுபுகுந்து, கத்திமுனையில் வன்கொடுமை முயற்சி.. நடந்தது என்ன? Koyembedu Chennai men attempt to sexually assault woman who was home alone Crime Crime: சென்னையில் பயங்கரம்.. தனியாக இருந்த பெண்ணுக்கு வீடுபுகுந்து, கத்திமுனையில் வன்கொடுமை முயற்சி.. நடந்தது என்ன?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/10/f8fbe343e88a4e9c327f687a91b1f70f1660100284305224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சென்னை, கோயம்பேடு பகுதியில் வீடு புகுந்து இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்க முயன்ற இரண்டு பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
வேலைக்கு சென்ற கணவன், தனியே இருந்த மனைவி
கோயம்பேடு, பாரதியார் நகரைச் சேர்ந்த கர்ணன், இவரது மனைவி ப்ரீத்தி (வயது 26) பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. கோயம்பேடு மார்க்கெட்டில் சுமை தூக்கும் தொழிலாளியாக கர்ணன் வேலை பார்த்து வரும் நிலையில், நேற்று முன் தினம் அதிகாலை வழக்கம் போல் இவர் வேலைக்குச் சென்றார்.
அப்போது இவர்களது வீட்டில் ப்ரீத்தி மட்டும் தனியாக வசித்து வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து சில நாள்களாக நோட்டமிட்டு வந்த நபர்கள் இருவர், திடீரென வீட்டுக்குள் புகுந்து, கத்திமுனையில் ப்ரீத்தியை பாலியல் வன்புணர்வு செய்ய முயன்றுள்ளனர்.
மேலும் படிக்க: Crime : இப்படி ஒரு இடத்தில் ரகசிய கேமராவா? டிவி பார்த்தபோது ஷாக்கான குடும்பத்தினர்! பிரபல நிறுவனம் கொடுத்த அறிக்கை..
அக்கம்பக்கத்தினர் உதவி
மேலும், தங்களுக்கு இணங்காவிட்டால் கொலை செய்து விடுவோம் எனவும் மிரட்டியுள்ளனர். அதேசமயம், ப்ரீத்தியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்துள்ளனர்.
இதனால், ஆத்திரமடைந்த நபர்கள், ப்ரீத்தியை சரமாரியாகத் தாக்கிவிட்டு, அங்கிருந்து தப்பியோட முயன்றுள்ளனர். ஆனால் அதற்கு முன்பே அவர்களை சுற்றிவளைத்த பொதுமக்கள் சரமாரியாகயாக இருவரையும் அடித்து உதைத்தனர்.
மேலும் படிக்க: Crime : மிதுன் சக்கரவர்த்தி நினைவிருக்கிறதா? அதிரவைத்த கோவை பள்ளி மாணவியின் தற்கொலை கடிதம் நினைவிருக்கிறதா? 2 முதியவர்கள் கைது..
பல நாள் நோட்டமிட்டு திட்டம்
தொடர்ந்து பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் அங்கு வந்த காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற நபர்களை காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரித்தனர். அதில், அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த அரவிந்த் (26), குள்ள பையன் (எ) கணேசமூர்த்தி (28) என்பதும், அவர்களும் கோயம் பேடு சந்தையில் கூலி வேலை செய்து வருவதும் தெரிய வந்தது.
இதையடுத்து, இந்நபர்கள் மீது, ஆபாசமாகப் பேசுதல், வீடுபுகுந்து பெண்ணை மானபங்கப்படுத்தல், கொலை மிரட்டல் விடுத்தல், பெண்கள் வன்கொடுமைச் சட்டம் ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்து, புழல் சிறை யில் அடைத்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் படிக்க: Crime : காஞ்சிபுரம் : மளிகை கடைக்காரர் வெட்டிக்கொலை.. வலைவைத்து கொலையாளிகளைப் பிடித்த காவலர்கள்.. என்ன நடந்தது?
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)