மேலும் அறிய

தாய், மகள் உயிரிழந்த விவகாரத்தில் திருப்பம்: கள்ளக்காதலன் டார்ச்சரால் தற்கொலை செய்தது அம்பலம்!

ஒரு கட்டத்தில் அவரிடமிருந்து கற்பகம் ஒதுங்கியுள்ளார். ஆனாலும் கற்பகத்தை அடிக்கடி இச்சைக்கு அழைத்துள்ளார் வீரப்பெருமாள். ஆனால் அதற்கு கற்பகம் மறுத்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் சிக்கன் கிரேவி சாப்பிட்டு விட்டு, குளிர்ப்பானம் குடித்த தாய் - மகள் - உயிரிழந்த விவகாரத்தில் தற்போது திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. 

                                   தாய், மகள் உயிரிழந்த விவகாரத்தில் திருப்பம்: கள்ளக்காதலன் டார்ச்சரால் தற்கொலை செய்தது அம்பலம்!
 
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் சிக்கன் கிரேவி சாப்பிட்டு விட்டு, குளிர்ப்பானம் குடித்த தாய், மகள் - உயிரிழப்பு விவகாரத்தில் திடீர் திருப்பமாக குளிர்பானத்தில் பூச்சி மருந்து கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. கற்பகம் வீட்டின் அருகே இருக்கும் வீரப்பெருமாள் என்பவர் தன்னுடன் உல்லாசமாக இருக்க வேண்டும், இல்லையென்றால் இருவரும் ஒன்றாக இருக்கும் படம் மற்றும் வீடியோக்களை கற்பகத்தின் கணவர் மற்றும் குடும்பத்தினரிடம் காண்பித்து விடுவேன் என்று மிரட்டியதால் கற்பகம் தனது குழந்தையுடன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. இதையெடுத்து போலீசார் வீரப்பெருமாளை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

                                   தாய், மகள் உயிரிழந்த விவகாரத்தில் திருப்பம்: கள்ளக்காதலன் டார்ச்சரால் தற்கொலை செய்தது அம்பலம்!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தங்கப்ப நகரைச் சேர்ந்த லாரி டிரைவர் இளங்கோவன் என்பவருடைய மனைவி கற்பகம்(34) மற்றும் அவரது மகள் தர்ஷினி (7) இருவரும் அப்பகுதியில் உள்ள ஹோட்டலில் கடந்த 12ந்தேதி சிக்கன் கிரேவி வாங்கி சாப்பிட்டு, குளிர்பானம் குடித்த போது திடீரென இருவரும் மயங்கி விழுந்தனர். கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் சிகிச்சை பலன் இல்லமால் தாய், மகள் இருவரும் உயிரிழந்தனர். இது குறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். கிரேவி, குளிர்பானம் தான் காரணமா அல்லது வேறு எதுவும் காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். மேலும் அவர்கள் சாப்பிட்டதாக கூறும் உணவு மற்றும் குளிர்பான பாட்டில்கள் ஆய்வுக்கு அனுப்பட்டன. மேலும் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் மாரியப்பன் தலைமையிலான குழுவினரும் ஆய்வு செய்து, இருவரும் உணவின் காரணமாக நேரடியாக இறக்கவில்லை, பூச்சி மருந்து கலக்கப்பட்டு இருக்கலாம் என்று தெரிவித்தனர்.

                                                      தாய், மகள் உயிரிழந்த விவகாரத்தில் திருப்பம்: கள்ளக்காதலன் டார்ச்சரால் தற்கொலை செய்தது அம்பலம்!
இதையெடுத்து போலீசார் வழக்கு விசாரணையை வேறு திசைக்கு மாற்றினர். கற்பகம் பயன்படுத்தி வந்த செல்போனை ஆய்வு செய்த நிலையில் கற்பகம் வீட்டின் அருகே இருக்கும் வீரப்பெருமாள் (34) என்பவருடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் அவரிடமிருந்து கற்பகம் ஒதுங்கியுள்ளார். ஆனாலும் கற்பகத்தை அடிக்கடி இச்சைக்கு அழைத்துள்ளார் வீரப்பெருமாள். ஆனால் அதற்கு கற்பகம் மறுத்துள்ளார். அது தொடர்பாக இருவருக்கும் இடையே வாட்ஸ் அப் உரையாடல் நடந்துள்ளது. கற்பகம் தொடர்ந்து மறுத்ததால், முன்பு உல்லாசமாக இருந்த போட்டோக்கள் மற்றும் வீடியோவை அவரது கணவர் மற்றும் குடும்பத்தினருக்கு அனுப்பி விடுவதாக வீரப்பெருமாள் மிரட்டியுள்ளார். தனக்கு அவமானம் ஏற்பட்டு விடும் என்று கருதிய கற்பகம் குளிர்பானத்தில் பூச்சி மருந்து கலந்து தானும், அவரது மகளும் தற்கொலை செய்து கொண்டதாக போலீசில் தரப்பில் கூறப்படுகிறது. ஆதரங்களுடன் சிக்கியதால் வீரப்பெருமாளை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
TN Budget 2026: தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
TN Budget 2026 : ‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் விஜயின் வாக்குறுதிகள் என்னென்ன இடம்பெறவில்லை..?
‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் இடம்பெறாத தவெக வாக்குறுதிகள்..!
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
Embed widget