மேலும் அறிய

மாத சீட்டு நடத்தி ஒன்றரை கோடி மோசடி; ஒன்று திரண்ட மக்களால் கரூரில் பரபரப்பு

கரூர் எஸ்பி அலுவலகத்தில் கண்ணீர் மல்க பெண் ஒருவர் ஏல சீட்டு மோசடி செய்த நபரை கைது செய்ய வலியுறுத்தி புகார் தெரிவித்தது சோகத்தை ஏற்படுத்தியது.

SM சீட்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற பைனான்ஸ் நிறுவனத்தை நடத்திய குளித்தலையைச் சார்ந்த வினோத் மற்றும் முருகானந்தம் ஆகிய இருவர் 250 க்கும் மேற்பட்ட நபர்களிடமிருந்து சுமார் ஒன்றரை கோடி மாதாந்திர எழுச்சீட்டு நடத்தி மோசடி செய்து தலைமறைவாகியுள்ளனர். இவர்கள் மீது ஏன் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட மக்களால் பரபரப்பு ஏற்பட்டது.

 

 


மாத சீட்டு நடத்தி ஒன்றரை கோடி மோசடி; ஒன்று திரண்ட மக்களால் கரூரில் பரபரப்பு

இவர்கள் கரூர், தரகம்பட்டி, தோகைமலை, கடவூர், பெட்டவாய்த்தலை பகுதியில் ஸ்ரீ முருகன் எலக்ட்ரானிக்ஸ் வேல்டு மற்றும் ஸ்ரீ முருகா சிட்ஸ் என்ற மாதாந்திர ஏல சீட்டு நிறுவனம் நடத்தினார். கடந்த தீபாவளிக்கு முன்பு இவர்கள் தலைமறைவாகின்றனர் இது தொடர்பாக கடந்த வாரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்த நிலையில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

 


மாத சீட்டு நடத்தி ஒன்றரை கோடி மோசடி; ஒன்று திரண்ட மக்களால் கரூரில் பரபரப்பு


தோகைமலை காவல்துறையினர் எஃப் ஐ ஆர் பதிவு செய்துள்ளனர். கைது செய்து நடவடிக்கை எடுப்பதாக கூறிவிட்டு தற்பொழுது வரை எந்த நடவடிக்கையும் அவர்கள் மீது எடுக்கவில்லை. தோகைமலையில் உள்ள காவல் ஆய்வாளர் வழக்கு பதிவு செய்து அது தொடர்பாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் தெரிவிக்கவில்லை. ஆயிரம் ரூபாய் ஒருவர் பணம் தரவில்லை என்றால் அதற்கு வழக்கு பதிவு செய்து கைது செய்யும் காவல்துறையினர்.

 


மாத சீட்டு நடத்தி ஒன்றரை கோடி மோசடி; ஒன்று திரண்ட மக்களால் கரூரில் பரபரப்பு

 

250க்கும் மேற்பட்ட கிராமப் பகுதிகளைச் சார்ந்த மக்கள் தங்களது மகன், மகள் திருமணத்திற்காகவும், கல்விச்செலவிற்காகவும் என பல்வேறு வகையில் சேமிப்பதற்காக மாதாந்திர சீட்டு ரூ.25000 முதல் ஒன்றரை லட்சம் வரை சீட்டு பணம் மாதாந்திர தொகையை செலுத்தி வந்துள்ளனர். இத்தொகையானது சுமார் ஒன்னரை கோடி ரூபாய் அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த நவம்பர் மாதம் முதல் வாரத்தில் நிறுவனம் செயல்பட்டு வந்த முகவரிக்கு சென்று பார்த்த போது பூட்டி இருந்தது. நிறுவனத்தின் ஊழியராக இருந்த செந்தில் குமார் சிவக்குமார் என்பவர்கள் ஒவ்வொரு மாதமும் மாத சீட்டுத் தொகையை வங்கிக் கணக்கு மூலமாகவும் ஜிபே மூலமாகவும் பணத்தை வசூல் செய்து வந்துள்ளனர்.

 


மாத சீட்டு நடத்தி ஒன்றரை கோடி மோசடி; ஒன்று திரண்ட மக்களால் கரூரில் பரபரப்பு

தற்பொழுது நிறுவனத்தை தொலைபேசி மூலமாகவும் நேரடியாகவும் தொடர்பு கொள்ள முடியாத சூழ்நிலையை இருவரும் தலைமறைவாகி விட்டனர். இதற்கு காரணமாக சிட்ஃபண்ட் நடத்தி வந்த குளித்தலை முதலைப்பட்டி கிராமத்தைச் சார்ந்த வினோத் மற்றும் குளித்தலை காவல்காரன்பட்டியைச் சேர்ந்த முருகானந்தம் இவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு தெரிவித்தனர்.

 


மாத சீட்டு நடத்தி ஒன்றரை கோடி மோசடி; ஒன்று திரண்ட மக்களால் கரூரில் பரபரப்பு

கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம் காவல்காரன்பட்டியைச் சேர்ந்த முருகானந்தம் நிறுவனத்தின் சேர்மன், கோவையைச் சார்ந்த அன்னூர் கீரநத்தம், சக்தி நகரைச் சார்ந்த கார்த்திக் ராஜா, கரூர் வடக்கு காந்திகிராமம் சாய்பிரேம் (கணக்காளர்),  ஸ்ரீ முருகன் எலக்ட்ரானிக் லோடு உரிமையாளர் பிரேமா நாகராஜ் மற்றும் வினோத்தின் மனைவி பிரபா, அவரது மைத்துனர்

 

 


மாத சீட்டு நடத்தி ஒன்றரை கோடி மோசடி; ஒன்று திரண்ட மக்களால் கரூரில் பரபரப்பு

கரூர் மாவட்டம் குப்பிச்சிபட்டியைச் சார்ந்த வேல்முருகன் அவரது மனைவி சுகன்யா, மைலாடியைச் சார்ந்த சந்திரசேகர், முதலைப்பட்டியைச் சார்ந்த வினோத்தின் சகோதரர் ஹரிஹரன் ஆகியோர் திட்டமிட்டு சீட்டு நடத்திய பணத்தை திருப்பிதராமல் மோசடி செய்து பாதிக்கப்பட்ட நபர்களை வந்த கொலை மிரட்டல் விடுவதாக கடந்த 6-ம் தேதி மற்றும் 8-ம் தேதி புகார் அளித்துள்ள நிலையில் மேற்படி மோசடி செய்த நபர்கள் மீது தோகைமலை காவல் துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் வரும் 4- ஆம் தேதி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக  தெரிவித்தனர். 

 


மாத சீட்டு நடத்தி ஒன்றரை கோடி மோசடி; ஒன்று திரண்ட மக்களால் கரூரில் பரபரப்பு

நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்க வந்தனர். அவர்களை தடுத்த காவல்துறையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பின்னர் பாதிக்கப்பட்ட அனைவரும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளிக்க அழைத்துச் சென்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Iran Protest: மோசமாகும் நிலைமை.. இந்தியர்களை தாயகம் மீட்டு வர மத்திய அரசு திட்டம் - நடவடிக்கைகள் தீவிரம்
Iran Protest: மோசமாகும் நிலைமை.. இந்தியர்களை தாயகம் மீட்டு வர மத்திய அரசு திட்டம் - நடவடிக்கைகள் தீவிரம்
உரிமைக்காக போராடும் ஆசிரியர்களை பொங்கல் நாளிலும் கைது செய்து அடைத்து வைப்பதா? அன்புமணி ராமதாஸ் கண்டனம் !
உரிமைக்காக போராடும் ஆசிரியர்களை பொங்கல் நாளிலும் கைது செய்து அடைத்து வைப்பதா? அன்புமணி ராமதாஸ் கண்டனம் !
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
Trump Putin Zelensky: “உக்ரைன் அமைதி ஒப்பந்தத்த தடுக்கறது புதின் இல்ல, ஆனா...“; ட்ரம்ப் கூறியது என்ன தெரியுமா.?
“உக்ரைன் அமைதி ஒப்பந்தத்த தடுக்கறது புதின் இல்ல, ஆனா...“; ட்ரம்ப் கூறியது என்ன தெரியுமா.?
ABP Premium

வீடியோ

திமுக ஏன் அமைதியா இருக்காங்க? ராகுல் காரில் ஆ. ராசா நடந்தது என்ன? | Congress | Rahul Gandhi On DMK
”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Iran Protest: மோசமாகும் நிலைமை.. இந்தியர்களை தாயகம் மீட்டு வர மத்திய அரசு திட்டம் - நடவடிக்கைகள் தீவிரம்
Iran Protest: மோசமாகும் நிலைமை.. இந்தியர்களை தாயகம் மீட்டு வர மத்திய அரசு திட்டம் - நடவடிக்கைகள் தீவிரம்
உரிமைக்காக போராடும் ஆசிரியர்களை பொங்கல் நாளிலும் கைது செய்து அடைத்து வைப்பதா? அன்புமணி ராமதாஸ் கண்டனம் !
உரிமைக்காக போராடும் ஆசிரியர்களை பொங்கல் நாளிலும் கைது செய்து அடைத்து வைப்பதா? அன்புமணி ராமதாஸ் கண்டனம் !
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
Trump Putin Zelensky: “உக்ரைன் அமைதி ஒப்பந்தத்த தடுக்கறது புதின் இல்ல, ஆனா...“; ட்ரம்ப் கூறியது என்ன தெரியுமா.?
“உக்ரைன் அமைதி ஒப்பந்தத்த தடுக்கறது புதின் இல்ல, ஆனா...“; ட்ரம்ப் கூறியது என்ன தெரியுமா.?
America Stops Visa: 75 நாடுகளுக்கு ஆப்படித்த ட்ரம்ப் நிர்வாகம்; குடிவரவு விசாக்கள் நிறுத்தம்; எதற்காக இந்த அதிரடி.?
75 நாடுகளுக்கு ஆப்படித்த ட்ரம்ப் நிர்வாகம்; குடிவரவு விசாக்கள் நிறுத்தம்; எதற்காக இந்த அதிரடி.?
Iran Trump War?: ''இந்த முறை குறி தப்பாது“; ட்ரம்ப்புக்கு நேரடி மிரட்டல் விடுத்த ஈரான்; அப்போ போர் கன்ஃபார்மா.?!!
''இந்த முறை குறி தப்பாது“; ட்ரம்ப்புக்கு நேரடி மிரட்டல் விடுத்த ஈரான்; அப்போ போர் கன்ஃபார்மா.?!!
Mahindra XUV 7XO, XEV 9S Bookings: அடேங்கப்பா.!! முதல் நாள்லயே இவ்வளவு புக்கிங்கா.?! பட்டையை கிளப்பிய மஹிந்திராவின் XUV 7XO, XEV 9S
அடேங்கப்பா.!! முதல் நாள்லயே இவ்வளவு புக்கிங்கா.?! பட்டையை கிளப்பிய மஹிந்திராவின் XUV 7XO, XEV 9S
சரத்குமார் குறி வைக்கும் அந்த 3 தொகுதி.! மல்லுக்கு நிற்கும் அதிமுக, தமாகா- கைப்பற்றப்போவது யார்.?
சரத்குமார் குறி வைக்கும் அந்த 3 தொகுதி.! மல்லுக்கு நிற்கும் அதிமுக, தமாகா- கைப்பற்றப்போவது யார்.?
Embed widget