மேலும் அறிய

NEET Exam Student Suicide | "திரும்பவும் EXAM எழுத தைரியம் இல்ல அம்மா" NEET-ஆல் மாணவி தற்கொலை

வினாத்தாள் கசிவால் நீட் தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் தேர்வெழுதியிருந்த 18 வயது மாணவி, மீண்டும் ஒரு தேர்வெழுத தைரியமில்லை என அப்பா அம்மாவுக்கு கடிதம் எழுதிவைத்துவிட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே 3-ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. இருப்பினும், வினாத்தாள் கசிவு காரணமாக தேசிய தேர்வு முகமை மத்திய அரசின் ஒப்புதலுடன் தேர்வை ரத்து செய்தது.

மேலும், மறுதேர்வு நடத்தப்படும் என்றும் அறிவித்தது. அதன்படி ஜூன் 21-ம் தேதி மறு தேர்வு நடைபெறவிருக்கிறது.

இந்த நிலையில், நீட் தேர்வு ரத்தால் 18 வயது மாணவி ஆகாங்ஷா சதுர்வேதி தற்கொலை செய்துகொண்டார்.

இவர் மத்திய பிரதேசத்தில் மௌகஞ்ச் மாவட்டத்தில் உள்ள மாகனியா கிராமத்தைச் சேர்ந்தவர் . எளிய குடும்பப் பின்னணி கொண்ட இவர், மருத்துவராகி தன் குடும்பத்தின் வறுமையைப் போக்க வேண்டும் என்ற கனவோடு நாக்பூரில் உள்ள ஒரு பயிற்சி நிறுவனத்தில் நீட் தேர்வுக்குத் தயாராகி வந்தார்.

இவரின் தந்தை கிருஷ்ண குமார் சௌபே விவசாயி ஆவார். மக்களின் படிப்புக்காக கிசான் கிரெடிட் கார்டு கடன் மூலம் கிட்டத்தட்ட 3 லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருந்தார்.

இத்தகைய சூழலில்தான், தேர்வு ரத்தானதால் மே 20-ம் தேதி பயிற்சி நிறுவனத்தில் மாணவி தனது அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.

மாணவி இறந்த சில நாள்களுக்குப் பிறகு அவரின் தற்கொலைக் கடிதத்தை அவரின் குடும்பத்தினர் கண்டெடுத்த நிலையில், தற்போது அந்தக் கடிதம் பொதுவெளியில் வெளியாகியிருக்கிறது.

அந்தக் கடிதத்தில் மாணவி தனது அப்பா அம்மாவைக் குறிப்பிட்டு, "உங்கள் மகள் நன்றாகப் படித்து மருத்துவராவாள் என்று மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தீர்கள். ஆனால் மீண்டும் ஒரு நீட் தேர்வை எழுத எனக்கு இப்போது தைரியம் இல்லை. என்னுடைய முதல் முயற்சியில் நான் நல்ல மதிப்பெண்கள் பெற்றேன். ஆனால் இப்போது மீண்டும் நான் சிறப்பான மதிப்பெண் பெறுவேன் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. என்னை மன்னித்து விடுங்கள். நான் எல்லாவற்றையும் பாழாக்கிவிட்டேன்" என்று உருக்கமாக எழுதியிருக்கிறார்.

இந்தக் கடிதம் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

நீட் தேர்வு மட்டுமல்லாது, CBSC தேர்வுகள், அரசு போட்டித் தேர்வுகளில் தொடர்ச்சியாக வினாத்தாள் கசிவு ஏற்படுவது நாளுக்கு நாள் தேசிய அளவில் மிகப்பெரிய பிரச்னையாக வெடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகள் வீடியோக்கள்

NEET Exam Student Suicide |
NEET Exam Student Suicide | "திரும்பவும் EXAM எழுத தைரியம் இல்ல அம்மா" NEET-ஆல் மாணவி தற்கொலை
மேலும் படிக்க
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

மேம்பாலக் குழியில் சைக்கிளுடன் விழுந்த முதியவர் – பதறவைக்கும் CCTV காட்சி...
மேம்பாலக் குழியில் சைக்கிளுடன் விழுந்த முதியவர் – பதறவைக்கும் CCTV காட்சி...
"கிக் பாக்சிங்கில் கோவை மாணவர்கள் கோல்டன் வேட்டை" - 20 தங்கம் வென்று சாதனை...
பக்தர்களுக்கு உதவிய ‘பாகபலி’ ஞானாம்பிகை! தருமபுர தேரோட்டத்தில் நடந்த அற்புதம்.. பக்தர்கள் நெகிழ்ச்சி!
பக்தர்களுக்கு உதவிய ‘பாகபலி’ ஞானாம்பிகை! தருமபுர தேரோட்டத்தில் நடந்த அற்புதம்.. பக்தர்கள் நெகிழ்ச்சி!
Coimbatore power cut: கோவையில் நாளை (06-06-2026) மின் தடை செய்யப்படும் பகுதிகள் அறிவிப்பு - லிஸ்டில் உங்க ஏரியா இருக்கா பாருங்க?
கோவையில் நாளை (06-06-2026) மின் தடை செய்யப்படும் பகுதிகள் அறிவிப்பு - லிஸ்டில் உங்க ஏரியா இருக்கா பாருங்க?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை
BJP Breaks TMC | 50 MLA ராஜினாமா.. உடைந்தது திரிணாமுல் காங்.,? மம்தாவை காலி செய்யும் மோடி
கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
TVK Vijay: தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? பாமக கூட்டத்தில் தவெக பேச்சு
தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? PMK கூட்டத்தில் TVK பேச்சு
Annamalai: தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
Annamalai: விலகினார் அண்ணாமலை.! பாஜக தேசிய தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு- இது தான் காரணமா.?
கட்சியில் இருந்து விலகினார் அண்ணாமலை.! பாஜக தேசிய தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு- இது தான் காரணமா.?
Annamalai: அமித் ஷா அனுமதி, மோடி ஆசீர்வாதம், புதிய அரசியல் முகமூடியில் அண்ணாமலை - காங்கிரஸ் விளாசல்
அமித் ஷா அனுமதி, மோடி ஆசீர்வாதம், புதிய அரசியல் முகமூடியில் அண்ணாமலை - காங்கிரஸ் விளாசல்
CPM SHANMUGAM :
"அதிக பிரசங்கித்தனம்".. உங்களுக்கு எப்ப நாங்க ஆதரவு கொடுத்தோம்.? பிரவீன் சக்கரவர்த்தியை வெளுத்தெடுத்த சிபிஎம்
Tamilnadu Assembly : ஆளுநரை சமாளிப்பாரா விஜய்.! ஜூன் 18 ஆம் தேதி காத்திருக்கும் சவால்- சட்டப்பேரவையில் என்ன நடக்கும்.?
ஆளுநரை சமாளிப்பாரா விஜய்.! ஜூன் 18 ஆம் தேதி காத்திருக்கும் சவால்- சட்டப்பேரவையில் என்ன நடக்கும்.?
‘காதல், சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களுக்கு சிக்கல்’ பெற்றோரின் அனுமதியை கேட்கும் பதிவுத்துறை – நடவடிக்கை எடுப்பாரா முதல்வர் விஜய்..?
’காதல் திருமணத்திற்கு NO?' பதிவுத்துறை மீது மணமக்கள் அதிருப்தி!
Embed widget