மேலும் அறிய

அய்யய்யோ! வாய் பேச முடியாத குழந்தை! முதலை இருக்கும் ஆற்றில் வீசிய கொடூர தாய்!

Mother Throws Son into River: கர்நாடகாவில் பிறந்ததில் இருந்தே வாய் பேச இயலாத தனது மகனை, பெற்ற தாயே ஆற்றில் தூக்கி வீசியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

26 வயது பெண் ஒருவர் தனது ஆறு வயது வாய் பேச முடியாத மகனை முதலைகள் நிறைந்த ஆற்றில் வீசியதாக சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகத்தில் அதிர்ச்சி சம்பவம்:

கர்நாடக மாநிலம் உத்தர கன்னடா பகுதிக்கு அருகில் உள்ள  தண்டேலி தாலுகாவில் வசித்து வரும் 26 வயதான சாவித்ரி என்ற பெண் மற்றும் 27 வயதான அவரது கணவர் ரவிக்குமார் ஆகியோருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகனுக்கு 6 வயது என்றும், இரண்டாவது மகனுக்கு 2 மகன் என்றும் கூறப்படுகிறது. மூத்த மகன் பிறந்ததில் இருந்தே பேசும் தன்மை இல்லாமல் இருந்துள்ளார் என கூறப்படுகிறது. 

கணவன்-மனைவி சண்டை:

இதனால், கணவன் மனைவி  இடையே கருத்து மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரும், தங்களது மூத்த மகனின் வாய்பேசாத நிலை குறித்து அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபடுவதும் சண்டை போடுவதுமாக இருந்துள்ளனர்.  வாய் பேச முடியாத குழந்தையை ஏன் பெற்றெடுத்தாய்? என்று ரவிக்குமார் கேள்வி எழுப்பியதாகவும் கூறப்படுகிறது. 

ஆற்றில் வீசப்பட்ட குழந்தை:

இந்நிலையில் இருவருக்குமிடையே மோதலானது தீவிரமானதைத் தொடர்ந்து சனிக்கிழமை மாலை, சாவித்திரி தனது மூத்த மகனை காளி ஆற்றுடன் இணைக்கப்பட்ட கழிவு கால்வாயில் வீசியதாகக் கூறப்படுகிறது.  இதையடுத்து அக்கம்பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் அளித்ததையடுத்து, அப்பகுதி மக்கள் மற்றும் நீர்மூழ்கிக் குழுவினர் உதவியுடன் குழந்தை குறித்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால், இருள் சூழ்ந்ததால் குழந்தையை கண்டுபிடிக்க முடியவில்லை.  

கொலை வழக்கு - கைது:

மறுநாள் காலை, குழந்தையின் உடல் சடலமாக மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட குழந்தையின் உடலில்  பலத்த காயங்கள், முதலை கடித்த காயங்கள் மற்றும் முதலை தாக்கியதால் கை தனியாக சென்றதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 109  (எந்தவொரு குற்றத்திற்கும் தூண்டுதல், அதன் விளைவாகத் தூண்டப்பட்ட செயல்) மற்றும் 302 (கொலை) ஆகியவற்றின் கீழ் கணவன் - மனைவி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.  

பெற்ற மகனையே பாசமின்றியும் மனிதத்தன்மை இல்லாமலும், மிருகங்களை விட கொடூரமாக  தாய் தந்தையரே நடந்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ஆம்புலன்ஸுக்கும் இடையூறு... நள்ளிரவில் கோவை இளைஞர்கள் அட்டூழியம்...
ஆம்புலன்ஸுக்கும் இடையூறு... நள்ளிரவில் கோவை இளைஞர்கள் அட்டூழியம்...
தங்கையின் காதல் விவகாரம்... கோவையில் இளைஞர் கொலை செய்த சிறுவனுக்கு நீதிமன்றம் தண்டனை...
தங்கையின் காதல் விவகாரம்... கோவையில் இளைஞர் கொலை செய்த சிறுவனுக்கு நீதிமன்றம் தண்டனை...
ஆன்லைன் செயலியில் லாபம் காட்டி ஏமாற்றம்... கோவை பெண்ணிடம் ரூ.1.66 கோடி கணக்கில் மோசடி...
ஆன்லைன் செயலியில் லாபம் காட்டி ஏமாற்றம்... கோவை பெண்ணிடம் ரூ.1.66 கோடி கணக்கில் மோசடி...
நண்பனுடன் இறால் பிடிக்கச் சென்ற 9 - ம் வகுப்பு மாணவர் கால்வாயில் மூழ்கி பலி
நண்பனுடன் இறால் பிடிக்கச் சென்ற 9 - ம் வகுப்பு மாணவர் கால்வாயில் மூழ்கி பலி
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

பிறந்தநாள் அன்று மரணம்! மதுபோதையால் வந்த வினை! பதறவைக்கும் தஞ்சாவூர் விபத்து
தமிழர்களின் பொக்கிஷம்! ஆனைமங்கலம் செப்பேடு சோழ வரலாறு திரும்புகிறது!
விஜய் வசம் 16 துறைகள்! யாருக்கு என்னென்ன இலாகா? அதிகாரப்பூர்வ பட்டியல்
EPS-க்கு உதவும் ஸ்டாலின்?CM விஜய்க்கு ஸ்கெட்ச்! SP வேலுமணி அணிக்கு சிக்கல்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Cabinet: அமைச்சர் இல்லாத இலாகாக்கள்..! அதிமுகவிற்கு நோ, விரிவாக்கம் எப்போது? CM விஜய் அறிவிப்பு?
அமைச்சர் இல்லாத இலாகாக்கள்..! அதிமுகவிற்கு நோ, விரிவாக்கம் எப்போது? CM விஜய் அறிவிப்பு?
K.C.Palanisamy: என்னைப் பார்த்து பயமா? - மீண்டும் கட்சியில சேருங்க.. இபிஎஸ்க்கு கே.சி.பழனிசாமி கோரிக்கை!
K.C.Palanisamy: என்னைப் பார்த்து பயமா? - மீண்டும் கட்சியில சேருங்க.. இபிஎஸ்க்கு கே.சி.பழனிசாமி கோரிக்கை!
Ravi Mohan: ரவிமோகன் மேல மரியாதை இருக்கு.. ஆதாரம் எங்ககிட்டேயும் இருக்கும்.. மாமியார் சுஜாதா பதிலடி
Ravi Mohan: ரவிமோகன் மேல மரியாதை இருக்கு.. ஆதாரம் எங்ககிட்டேயும் இருக்கும்.. மாமியார் சுஜாதா பதிலடி
இந்த மழையைத்தான் எதிர்பார்த்தோம்! தஞ்சை விவசாயிகளின் அதிரடி ஆட்டம் ஆரம்பம்!
இந்த மழையைத்தான் எதிர்பார்த்தோம்! தஞ்சை விவசாயிகளின் அதிரடி ஆட்டம் ஆரம்பம்!
த்ரிஷா மாதிரி நீங்களும் விஜய் கூட போவீங்களா? - பத்திரிக்கையாளரை சாடிய மாளவிகா மோகனன்!
த்ரிஷா மாதிரி நீங்களும் விஜய் கூட போவீங்களா? - பத்திரிக்கையாளரை சாடிய மாளவிகா மோகனன்!
Minister Keerthana: சிவகாசிக்கு கிடைக்கப்போகும் விடிவுகாலம்.. தொழில்துறை அமைச்சரான கீர்த்தனா!
Minister Keerthana: சிவகாசிக்கு கிடைக்கப்போகும் விடிவுகாலம்.. தொழில்துறை அமைச்சரான கீர்த்தனா!
CBSE: அமலுக்கு வந்த மும்மொழிக் கொள்கை; சிபிஎஸ்இ 9, 10ஆம் வகுப்புகளுக்கு 3 மொழிகள் கட்டாயம்- பாடத்திட்டம் வெளியீடு!
CBSE: அமலுக்கு வந்த மும்மொழிக் கொள்கை; சிபிஎஸ்இ 9, 10ஆம் வகுப்புகளுக்கு 3 மொழிகள் கட்டாயம்- பாடத்திட்டம் வெளியீடு!
TN Cabinet Ministers: வெளியான தவெக அமைச்சரவை பட்டியல்; யார் யாருக்கு எது? வெயிட்டான துறையைப் பெற்ற செங்கோட்டையன்!
TN Cabinet Ministers: வெளியான தவெக அமைச்சரவை பட்டியல்; யார் யாருக்கு எது? வெயிட்டான துறையைப் பெற்ற செங்கோட்டையன்!
Embed widget