மேலும் அறிய

காஞ்சிபுரத்தில் ரவுடி ஓட ஓட வெட்டி படுகொலை..! 10 வருடங்களாக தொடரும் பழிக்கு பழி கொலைச் சம்பவங்கள்..!

Kanchipuram News : ' பொதுமக்கள் நடமாடும் பகுதியில் பகலிலேயே நடந்தேறிய கொடூர கொலை '

காஞ்சிபுரம் பல்லவர் மேடு பகுதியை சேர்ந்தவர் பிரபா என்கிற சரவணன் (35). பிரபா மீது கொலை ,கொள்ளை , கஞ்சா விற்பது, திருட்டு உள்ளிட்ட பல்வேறு பிரிவில் 40-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. பல்லவர் மேடு பகுதியில் குட்டி ரவுடியாக பிரபா வலம் வந்துள்ளார். பிரபா அவப்பொழுது, சிறைக்கு செல்வதும் ஜாமினில் வெளி வருவதுமாக அவர் வாழ்க்கை சென்று கொண்டிருக்கிறது.
 
மர்ம கும்பல்
 
இந்தநிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வழக்கு ஒன்றில் பிரபா கைது செய்ய போலீசார் முயற்சி செய்தபோது தப்பி ஓடியதில் கால் முறிவு ஏற்பட்டுள்ளது. கால் முறிவு ஏற்பட்டதால் காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, பிளேட் வைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது ஜாமினில் வெளியே இருக்கும் பிரபா இன்று காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றில், ஆஜராக பல்லவர் மேடு பகுதியில் இருந்து நடந்து சென்று கொண்டிருந்த பொழுது, வெள்ளை நிற இண்டிகா காரில் வந்த மர்ம கும்ப கும்பல் அவரை இடிப்பது போல் முயற்சி செய்துள்ளது.

காஞ்சிபுரத்தில் ரவுடி ஓட ஓட வெட்டி படுகொலை..! 10 வருடங்களாக தொடரும் பழிக்கு பழி கொலைச் சம்பவங்கள்..!
 
சரமாரியாக வெட்டி விட்டு தப்பி
 
இதனால் சுதாரித்த, பிரபா அங்கிருந்து ஓட முயற்சி செய்துள்ளார். காலில் அறுவை சிகிச்சை செய்ததால் வேகமாக ஓட முடியாத பிரபா இந்த கும்பலிடம் சிக்கி உள்ளார். காரில் இருந்து ஹெல்மெட் அணிந்திருந்த மூன்று பேர் கொண்ட மர்ம கும்பல் பட்டப் பகலிலே சாலையில் வைத்து, கழுத்து, கண், தலை உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றது. முகம் சிதைக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பிரபா துடிதுடித்து உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிவகாஞ்சி போலீசார், இது குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 

காஞ்சிபுரத்தில் ரவுடி ஓட ஓட வெட்டி படுகொலை..! 10 வருடங்களாக தொடரும் பழிக்கு பழி கொலைச் சம்பவங்கள்..!
போலீசார் நடத்திய விசாரணையில் முன்பகை காரணமாக இந்த கொலை சம்பவம் நடந்தேறியது தெரியவந்தது : 
பெரிய காஞ்சிபுரம் பகுதியில் சேர்ந்தவர்கள் ரகு மற்றும் நாராயணமூர்த்தி ஆகியோர் நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சந்தவேலி அம்மன் கோவில், அருகே ரகு மற்றும் நாராயண மூர்த்தி ஆகிய இருவரும் ஒன்றாக மது அருந்தி கொண்டிருந்த பொழுது, இருவருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு சண்டையாக மாறி உள்ளது. இதனால் ரகு நாராயண மூர்த்தியை கொலை செய்துள்ளார். 
 
 
8 ஆண்டுகளுக்கு முன் 
 
தனது சகோதரனை கொலை செய்த ரகுவை பழி வாங்குவதற்காக, நாராயண மூர்த்தியின் சகோதரன்,  சரவணன் என்கிற பிரபா பலமுறை முயற்சி செய்து வந்துள்ளார். இந்தநிலையில் பிரபா கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் ரகுவின், மற்றொரு சகோதரரான  தேமுதிக, மாநில பேச்சாளர் சரவணன் என்பவரை ரகு கொலை செய்துள்ளார். இந்த கொலைச் சம்பவம் அப்பொழுது, காஞ்சிபுரம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

காஞ்சிபுரத்தில் ரவுடி ஓட ஓட வெட்டி படுகொலை..! 10 வருடங்களாக தொடரும் பழிக்கு பழி கொலைச் சம்பவங்கள்..!
 
மூன்று வருடங்களுக்கு முன்பு 
 
கடந்த 4 வருடங்களுக்கு, ரகுவின் மற்றொரு சகோதரரான ஆட்டோ ஓட்டுநர் செந்தில் என்பவரை இரண்டு முறை கொலை முயற்சி நடந்தபோது செந்தில் தப்பி உயிர் பிழைத்துள்ளார். இதனை அடுத்து செந்திலை மூன்று வருடங்களுக்கு முன்பு வீட்டருகே நாட்டு வெடிகுண்டு வீசி முகம் சிதைக்கப்பட்ட நிலையில் மிக கொடூரமான நிலையில் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை சம்பவத்தில் பிரபா பெயர் இடம் பெற்று இருந்தது. இந்த இரண்டு கொலை சம்பவங்களுக்கு பழி வாங்குவதற்காகவே , இந்த கொலை சம்பவம் நடைபெற்று இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
 
சிசிடிவி காட்சி
 
பிரபாவை ஓட ஓட வெட்டி மூன்று பேர் கொண்ட மர்ம கும்பல் கொலை செய்யும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. மக்கள் நடமாட்டம் பகுதியில் அதுவும் பகலிலேயே இந்த கொலைச் சம்பவம் நடந்தேறி இருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
"அதிகாரத் திமிர்! தமிழ்நாட்டுல இருந்து ஒரு ரூபாய் கூட தரமாட்டோம்" கொதித்தெழுந்த சீமான்
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தமிழகத்திற்கு நிதி கிடையாது” தர்மேந்திர பிரதான் பேசியது என்ன? தமிழில் முழு வீடியோNamakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | CollectorNainar Nagendran Join ADMK : அதிமுகவில் மீண்டும் நயினார்?பாஜகவில் வெடித்த கலகம்!அ.மலை பக்கா ஸ்கெட்ச்Mayiladuthurai Murder | சாராய விற்ற கும்பல் தட்டிக்கேட்ட இளைஞர்கள் படுகொலை செய்த சம்பவம் | Crime

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
"அதிகாரத் திமிர்! தமிழ்நாட்டுல இருந்து ஒரு ரூபாய் கூட தரமாட்டோம்" கொதித்தெழுந்த சீமான்
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
குறைவான பேலன்ஸ் வைத்திருந்தால் கூடுதல் அபராதம்.. புதிய FASTag விதிகள் நாளை முதல் அமல்!
குறைவான பேலன்ஸ் வைத்திருந்தால் கூடுதல் அபராதம்.. புதிய FASTag விதிகள் நாளை முதல் அமல்!
பரீட்சைக்கு லேட் ஆச்சி; மகாராஷ்டிராவை வாட்டும் ட்ராஃபிக்! மாணவர் எடுத்த அதிரடி முடிவு! நீங்களே பாருங்க!
பரீட்சைக்கு லேட் ஆச்சி; மகாராஷ்டிராவை வாட்டும் ட்ராஃபிக்! மாணவர் எடுத்த அதிரடி முடிவு! நீங்களே பாருங்க!
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.