ஸ்ரீபெரும்புதூரில் 5 வயது சிறுவன் கொடூரக் கொலை: தன்பாலின உறவுக்கு மறுத்ததால் கல்லை வீசி கொன்ற இளைஞர் கைது
"காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே தன்பாலின உறவுக்கு மறுத்த 5 வயது சிறுவன் கல்லால் அடித்துக் கொலை"

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே 5 வயது சிறுவனை தன்பாலின உறவுக்கு கட்டாயப்படுத்த முயற்சித்து, கல்லால் அடித்துக் கொலை. இந்த சம்பவம் தொடர்பாக, பீகாரை சேர்ந்த தம்பதியின் ஐந்து வயது மகனை அடித்துக் கொலை செய்ததாக, அசாம் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுவனுடன் இளைஞர் ஒருவர் சென்ற சிசிடிவி காட்சி அடிப்படையில் போலீசார் நடவடிக்கை
காணாமல் போன வட மாநில சிறுவன்
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கருமாங்கழனி கிராமத்தில் பீகாரைச் சேர்ந்த நீரஜ் குமார், காஜல் குமாரி தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களது 5 வயது மகன் கடந்த 9 ம் தேதி காணாமல் போனதாக சிறுவனின் தாய் காஜல் குமாரி, ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
தாயார் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். புகார் தொடர்பாக வழக்கு பதியப்பட்டு, சிறுவனை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் சிறுவன் அதே கிராமத்தில் அடர்ந்த முட்புதரில், அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டான். போலீசார் சிறுவன் தவறி விழுந்து, தலையில் பலத்த காயமடைந்து உயிரிழந்து விட்டதாக கருதினர்.
ஆதாரத்துடன் கைது செய்த போலீஸ்
இந்தநிலையில் வடமாநில தொழிலாளர்கள் தங்கி இருந்து வந்த குடியிருப்பின் முன்பு உள்ள, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் சிறுவனை இளைஞர் ஒருவர் அழைத்து சென்றது பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில், அசாம்மைச் சேர்ந்த போல்தேவ் (22) என்பவனை சந்தேகத்தின் பேரில் போலீசார் கைது செய்து விசாரித்தனர்.
போலீஸ் விசாரணையில் சிறுவன் தன் பாலின ஈர்ப்புக்கு மறுத்ததால், அடர்ந்த முட்புதர்க்கு அழைத்து சென்று கல்லால் அடித்துக் கொன்றதாக போல்தேவ் போலீசாரிடம் அதிர்ச்சியூட்டும் தகவலை தெரிவித்துள்ளார் . அதன் பேரில் அசாமைச் சேர்ந்த போல்தேவை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.





















