மேலும் அறிய

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் ரூ.14 லட்சம் கையாடல்: செயல் அலுவலர் பணியிடை நீக்கம்!

4 லட்சம் கையாடல் செய்த விவகாரம் வல்லக்கோட்டை முருகன் கோயில் செயல் அலுவலர் பணி இடைநீக்கம் செய்து ஆணையர் அதிரடி உத்தரவு

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. சென்னை புறநகர் பகுதி அருகே அமைந்துள்ள வல்லக்கோட்டை முருகன் கோவிலில் , சுற்றுவட்டார பகுதி பொது மக்களுக்கு பரிச்சயமான கோவில் வல்லக்கோட்டை முருகன் கோவில். இங்கு முதல்நிலை செயல் அலுவலராக பணியாற்றி வந்தவர் சிந்துமதி.  இவர் அங்கு பணிபுரிந்து வந்த தற்காலிக ஊழியர் ஒருவரின் பெயரில் காசோலை எடுத்து கோயில் நிதியை முறைகேடாக செலவு செய்ததாக கூறப்படுகிறது. அதேபோல் ஆணையரின் அனுமதியின்றி கோயில் வருமானத்தில் கார் வாங்கியது உள்ளிட்ட பல்வேறு புகார்கள் பொதுமக்கள் தரப்பில் எழுந்தன.

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் ரூ.14 லட்சம் கையாடல்:  செயல் அலுவலர் பணியிடை நீக்கம்!
இதுதொடர்பாக அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் உத்தரவின் பெயரில் மண்டல தணிக்கை அலுவலர் தலைமையில் 5 பேர் கொண்ட குழு கடந்த சில நாட்களாக ஆய்வு செய்தனர். இதில் தற்காலிக ஊழியரின் காசோலை வாயிலாக 14 லட்சம் வரை கையாடல் செய்தது வெளிச்சத்திற்கு வந்தது. இந்த செலவை பலவகை ரசீதுகளில் பதிவு செய்ததும் கோயில் நிதியில் தேவையற்ற செலவுகள் செய்ததும் தெரியவந்தது. இது குறித்து அறிக்கை தயார் செய்து ஆணையருக்கு அனுப்பப்பட்டது குழுவினர் அளித்த அறிக்கையின்படி முதல்நிலை செயல் அலுவலர் சிந்துமதியை பணியிடை நீக்கம் செய்து ஆணையர் குமரகுரு உத்தரவிட்டுள்ளார். மேலும் அவருக்கு பதிலாக சென்னை ஏகாம்பரேஸ்வரர் கோயில் செயல் அலுவலரிடம் கூடுதல் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் ரூ.14 லட்சம் கையாடல்:  செயல் அலுவலர் பணியிடை நீக்கம்!
இதனைத்தொடர்ந்து முதல்நிலை செயல் அலுவலர் சிந்துமதி செய்துள்ள வரவு செலவு விவரங்களை ஆய்வு செய்யும் பணி நடக்கிறது இதில் கோடிக்கணக்கில் அவர் முறைகேடாக செலவு செய்து இருப்பதாக அறநிலை துறை உயர் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஏற்கனவே செயல் அலுவலர் சிந்து மதி இதற்கு முன்பு பணியாற்றிய கோயிலில் முறைகேட்டில் ஈடுபட்டதை தொடர்ந்து, சிலமாதங்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தார்.

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் ரூ.14 லட்சம் கையாடல்:  செயல் அலுவலர் பணியிடை நீக்கம்!
ஏற்கனவே, ஒரு கோயிலில் முறைகேட்டில் ஈடுபட்ட காரணத்தால், பணி இடைநீக்கம் செய்யப்பட்டு இருந்தும் வல்லக்கோட்டை முருகன் கோயிலில் 14 லட்சம் வரை முறைகேட்டில் ஈடுபட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது குறித்து அதிகாரிகள் சிந்துமதியிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பிரபல கோவில் செயல் அலுவலர் ஒருவர் முறைகேட்டில் ஈடுபட்டுள்ள சம்பவம் பக்தர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Budget Halwa Ceremony: மத்திய பட்ஜெட் 2024: நிதி அமைச்சர் நிர்மலா முன்னிலையில் நடைபெற்ற அல்வா கிண்டும் விழா!
Budget Halwa Ceremony: மத்திய பட்ஜெட் 2024: நிதி அமைச்சர் நிர்மலா முன்னிலையில் நடைபெற்ற அல்வா கிண்டும் விழா!
தெலங்கானா முன்னாள் முதல்வர் கேசிஆரின் மகள் கவிதா மருத்துவமனையில் அனுமதி.. என்னாச்சு?
தெலங்கானா முன்னாள் முதல்வர் கேசிஆரின் மகள் கவிதா மருத்துவமனையில் அனுமதி.. என்னாச்சு?
பாலக்கோடு அருகே  2 பஸ்கள் மோதியதில் 110 பேர் காயம் - விபத்திற்கு காரணம் என்ன?
பாலக்கோடு அருகே 2 பஸ்கள் மோதியதில் 110 பேர் காயம் - விபத்திற்கு காரணம் என்ன?
Raayan Trailer:  சிங்கமா? ஓநாயா? பேய் மாதிரி வந்த தனுஷ்! வெளியானது ராயன் பட ட்ரைலர்!
Raayan Trailer: சிங்கமா? ஓநாயா? பேய் மாதிரி வந்த தனுஷ்! வெளியானது ராயன் பட ட்ரைலர்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Pa Ranjith on Armstrong Murder  : ஆம்ஸ்ட்ராங் படுகொலை..தேதி குறித்த பா.ரஞ்சித்..திடீர் அழைப்பு!MR Vijayabashkar Arrest : கண் அசைத்த செந்தில் பாலாஜி!விஜயபாஸ்கர் அதிரடி கைது!சிக்கலில் கரூர் அதிமுக?EPS on Electricity Tariff : ”இப்ப ஷாக் அடிக்கலயா ஸ்டாலின்?”வெளுத்து வாங்கிய EPS மின் கட்டண உயர்வு!Electricity Tariff Hike | ”ஷாக் அடிக்கும் மின்கட்டணம் மறந்துடீங்களா ஸ்டாலின்?”விளாசும் நெட்டிஷன்கள்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Budget Halwa Ceremony: மத்திய பட்ஜெட் 2024: நிதி அமைச்சர் நிர்மலா முன்னிலையில் நடைபெற்ற அல்வா கிண்டும் விழா!
Budget Halwa Ceremony: மத்திய பட்ஜெட் 2024: நிதி அமைச்சர் நிர்மலா முன்னிலையில் நடைபெற்ற அல்வா கிண்டும் விழா!
தெலங்கானா முன்னாள் முதல்வர் கேசிஆரின் மகள் கவிதா மருத்துவமனையில் அனுமதி.. என்னாச்சு?
தெலங்கானா முன்னாள் முதல்வர் கேசிஆரின் மகள் கவிதா மருத்துவமனையில் அனுமதி.. என்னாச்சு?
பாலக்கோடு அருகே  2 பஸ்கள் மோதியதில் 110 பேர் காயம் - விபத்திற்கு காரணம் என்ன?
பாலக்கோடு அருகே 2 பஸ்கள் மோதியதில் 110 பேர் காயம் - விபத்திற்கு காரணம் என்ன?
Raayan Trailer:  சிங்கமா? ஓநாயா? பேய் மாதிரி வந்த தனுஷ்! வெளியானது ராயன் பட ட்ரைலர்!
Raayan Trailer: சிங்கமா? ஓநாயா? பேய் மாதிரி வந்த தனுஷ்! வெளியானது ராயன் பட ட்ரைலர்!
Breaking News LIVE, JULY 16: ரூ. 4 கோடி பணத்திற்கும் எனக்கும் சம்பந்தமில்லை - நயினார் நாகேந்திரன்
Breaking News LIVE, JULY 16: ரூ. 4 கோடி பணத்திற்கும் எனக்கும் சம்பந்தமில்லை - நயினார் நாகேந்திரன்
IAS Officers Transfer: மேலும் 25 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அதிரடி காட்டும் அரசு- மதுவிலக்கு இயக்குநர் பதவி புதிதாக உருவாக்கம்!
IAS Officers Transfer: மேலும் 25 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அதிரடி காட்டும் அரசு- மதுவிலக்கு இயக்குநர் பதவி புதிதாக உருவாக்கம்!
TN Rain: இரவு 7 மணி வரை 17 மாவட்டங்களில் மழைதான்; இந்த பகுதி மக்களே முன்னெச்சரிக்கையாக இருங்க..!
TN Rain: இரவு 7 மணி வரை 17 மாவட்டங்களில் மழைதான்; இந்த பகுதி மக்களே முன்னெச்சரிக்கையாக இருங்க..!
JK Terrorist: பயங்கரவாத தாக்குதலில் 5 பாதுகாப்பு வீரர்கள் பலி: ஹெலிகாப்டர் மூலம் களமிறங்கும் ராணுவம்! நடந்தது என்ன?
JK Terrorist: பயங்கரவாத தாக்குதலில் 5 பாதுகாப்பு வீரர்கள் பலி: ஹெலிகாப்டர் மூலம் களமிறங்கும் ராணுவம்! நடந்தது என்ன?
Embed widget