மேலும் அறிய

Jharkhand: பற்றிய தீ: பறந்த 40 தீயணைப்பு வாகனங்கள்! குழந்தைகள், பெண்கள் உட்பட 14 பேர் உடல் கருகி பலி!

Jharkhand: ஜார்கண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தைகள் பெண்கள் உள்பட அப்பாவி பொதுமக்கள் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.

 

ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் மூன்றாவது தளத்தில் நேற்று (31/01/2023) மாலை ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேர் உடல் கருகி பரிதாபமாக  உயிரிழந்தனர். 14 பேர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதிகாரிகளின் கூற்றுப்படி, பேங்க் மோர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆஷிர்வாட் டவர் அடுக்குமாடி குடியிருப்பில் மாலை 6 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது, கிட்டத்தட்ட 40 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு தீயை அணைக்கும் பணி நடைபெற்றது. தீயணைப்பு வீரர்களின்  கிட்டத்தட்ட நான்கு மணி நேரத்திற்கு அதிமான  போராட்டத்திற்குப் பிறகு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

மூன்றாவது மாடியில் தீப்பிடித்ததாக தன்பாத் மாவட்ட நிர்வாகம் செய்திக்குறிப்பைப் பகிர்ந்துள்ளது. அதில்,  “14 பேர் இறந்துவிட்டனர். காயமடைந்த அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தன்பாத் துணை கமிஷனர் சந்தீப் சிங் கூறியதாவது: அதில் 10 பேர் பெண்கள், மூன்று குழந்தைகள், ஒரு ஆண் என இதுவரை மொத்தம் 14 இறப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளது.   மீட்பு பணியை முடித்து, பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் சேர்த்துள்ளோம்.   கட்டிடத்தின் தீயினால் பாதிக்கப்பட்ட பகுதி சுத்தம் செய்யப்பட்டுள்ளது. காயம் அடைந்தவர்கள் அபாய கட்டத்தை தாண்டிவிட்டனர்” என்றார்.

தன்பாத் தீயணைப்பு அதிகாரி லக்ஷ்மண் பிரசாத் கூறியதாவது: அடுக்குமாடி குடியிருப்பின் பாதுகாவலருடன் நான் நடத்திய உரையாடலின் அடிப்படையிலான முதற்கட்ட தகவலின்படி, எண்ணெய் விளக்கு தான்  தீ விபத்துக்கு காரணம். இருப்பினும், அவர் கூறியதை சரிபார்க்க நாங்கள் இன்னும் விசாரணை நடத்தி வருகிறோம் எனவும் கூறியுள்ளார். ”சிலர் உடல் கருகி இறந்தனர், பலர் மூச்சுத் திணறி இறந்தனர் என்று பிரசாத் கூறினார்.

நான்கு நாட்களுக்கு முன், மாவட்டத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், டாக்டர் தம்பதி உட்பட 5 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

பிரதமர் இரங்கல்

பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பதிவில், “தன்பாத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தது மிகுந்த வேதனை அளிக்கிறது. எனது  எண்ணங்கள் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுடன் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும்” என்றார். உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000ம் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: ’’திருப்பூரில் குவிந்த கூட்டம்; சங்கி, அடிமை கூட்டம் 10 நாட்களுக்கு தூங்காது’’- உதயநிதி ஸ்டாலின் விளாசல்!
Udhayanidhi Stalin: ’’திருப்பூரில் குவிந்த கூட்டம்; சங்கி, அடிமை கூட்டம் 10 நாட்களுக்கு தூங்காது’’- உதயநிதி ஸ்டாலின் விளாசல்!
SETC Volvo Bus: திருச்செந்தூர் டூ சென்னை Volvo பயணம்; அரசுப் பேருந்தின் 'வேகமும் விவேகமும்' ABP-யின் நேரடி ரிப்போர்ட்
SETC Volvo Bus: திருச்செந்தூர் டூ சென்னை Volvo பயணம்; அரசுப் பேருந்தின் 'வேகமும் விவேகமும்' ABP-யின் நேரடி ரிப்போர்ட்
Anna University: அண்ணா பல்கலை.யில் வேலை: ரூ.35 ஆயிரம் ஊதியம்- பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு!
Anna University: அண்ணா பல்கலை.யில் வேலை: ரூ.35 ஆயிரம் ஊதியம்- பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு!
Kanimozhi Karunanidhi : ‘கனிமொழிக்கு திமுகவில் அதிக முக்கியத்துவம்’ முதல்வர் ஸ்டாலினின் திட்டம் என்ன..?
‘கனிமொழிக்கு திமுகவில் அதிக முக்கியத்துவம்’ ஸ்டாலினின் திட்டம் என்ன..?
ABP Premium

வீடியோ

Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்
Puducherry News | ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்!பாறை இடுக்கில் சிக்கிய பெண்புதுச்சேரியில் பரபரப்பு
Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்
தஞ்சாவூர் டூ சென்னை.. ஹெலிகாப்டரில் பறந்து வந்த இதயம்! திக் திக் நிமிடங்கள்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: ’’திருப்பூரில் குவிந்த கூட்டம்; சங்கி, அடிமை கூட்டம் 10 நாட்களுக்கு தூங்காது’’- உதயநிதி ஸ்டாலின் விளாசல்!
Udhayanidhi Stalin: ’’திருப்பூரில் குவிந்த கூட்டம்; சங்கி, அடிமை கூட்டம் 10 நாட்களுக்கு தூங்காது’’- உதயநிதி ஸ்டாலின் விளாசல்!
SETC Volvo Bus: திருச்செந்தூர் டூ சென்னை Volvo பயணம்; அரசுப் பேருந்தின் 'வேகமும் விவேகமும்' ABP-யின் நேரடி ரிப்போர்ட்
SETC Volvo Bus: திருச்செந்தூர் டூ சென்னை Volvo பயணம்; அரசுப் பேருந்தின் 'வேகமும் விவேகமும்' ABP-யின் நேரடி ரிப்போர்ட்
Anna University: அண்ணா பல்கலை.யில் வேலை: ரூ.35 ஆயிரம் ஊதியம்- பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு!
Anna University: அண்ணா பல்கலை.யில் வேலை: ரூ.35 ஆயிரம் ஊதியம்- பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு!
Kanimozhi Karunanidhi : ‘கனிமொழிக்கு திமுகவில் அதிக முக்கியத்துவம்’ முதல்வர் ஸ்டாலினின் திட்டம் என்ன..?
‘கனிமொழிக்கு திமுகவில் அதிக முக்கியத்துவம்’ ஸ்டாலினின் திட்டம் என்ன..?
Teachers Protest:தொடர் போராட்டம்; ஸ்தம்பித்த காமராசர் சாலை, திடீரெனக் குவிந்த ஆசிரியர்கள்- மயங்கி விழுந்ததால் பரபரப்பு!
Teachers Protest:தொடர் போராட்டம்; ஸ்தம்பித்த காமராசர் சாலை, திடீரெனக் குவிந்த ஆசிரியர்கள்- மயங்கி விழுந்ததால் பரபரப்பு!
Silver Rate: வெள்ளிய இப்பவே வாங்கிடுங்க.! இன்னும் 3 மாசம் தான்; ஒரு கிராம் இவ்வளவா உயரப் போகுது.?!
வெள்ளிய இப்பவே வாங்கிடுங்க.! இன்னும் 3 மாசம் தான்; ஒரு கிராம் இவ்வளவா உயரப் போகுது.?!
CUET UG 2026: மே மாதத்தில் க்யூட் நுழைவுத் தேர்வு, ஆதார் கட்டாயம்; தேசியத் தேர்வுகள் முகமை அறிவிப்பு- முக்கிய அறிவுரை!
CUET UG 2026: மே மாதத்தில் க்யூட் நுழைவுத் தேர்வு, ஆதார் கட்டாயம்; தேசியத் தேர்வுகள் முகமை அறிவிப்பு- முக்கிய அறிவுரை!
New Kia Seltos Vs Honda Elevate: புதிய கியா செல்டோஸ்-ஆ.? ஹோண்டா எலிவேட்-ஆ.?; எல்லா விதத்திலும் எந்த SUV அதிக சக்தி வாய்ந்தது.?
புதிய கியா செல்டோஸ்-ஆ.? ஹோண்டா எலிவேட்-ஆ.?; எல்லா விதத்திலும் எந்த SUV அதிக சக்தி வாய்ந்தது.?
Embed widget