மேலும் அறிய

விழுப்புரத்தில் ரூ.1 கோடி மதிப்புள்ள தங்கக்கட்டிகளுடன் தலைமறைவான நகை தொழிலாளி கைது

விழுப்புரத்தில் 1 கோடி மதிப்புள்ள தங்கக்கட்டிகளுடன் தலைமறைவான நகை தொழிலாளி கைது.

விழுப்புரத்தில் நகை செய்ய கொடுத்த ரூ.1 கோடி மதிப்புள்ள 2 கிலோ எடையுள்ள தங்கக்கட்டிகளுடன் தலைமறைவான நகை தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

தங்க நகை வியாபாரம்:

விழுப்புரம் வண்டிமேடு பகுதியை சேர்ந்தவர்கள் குமரன் மற்றும் சண்முகம், குபேரத்தெருவை சேர்ந்தவர் தீபக். இவர்கள் 3 பேரும் நகை தொழில் செய்து வருகின்றனர். இவர்கள் விழுப்புரம் நாப்பாளைய தெருவை சேர்ந்த ராமசாமி மகன் சக்திவேல் (39) என்பவரிடம் அவ்வப்போது தங்க கம்மல், ஜிமிக்கி, மூக்குத்தி, மோதிரம், நாணல் உள்ளிட்ட பொருட்களை செய்வதற்காக தங்கக்கட்டிகளை கொடுத்து நகைகளை செய்து பெற்று வந்தனர். சக்திவேலுவும், அவர்கள் 3 பேரும் கூறியபடி உரிய நேரத்தில் நகைகளை செய்து கொடுத்து வந்துள்ளார்.

இந்த நம்பிக்கையின் அடிப்படையில் கடந்த மே மாதம் 19-ந்தேதியன்று தீபக், மேற்கண்ட நகை உருப்படிகளை செய்வதற்காக சக்திவேலிடம் 450 கிராம் எடையுள்ள சுத்த தங்க கட்டியை கொடுத்துள்ளார். அதேபோல் குமரன், 200 கிராம் எடையுள்ள தங்கமும், ரூ.70 ஆயிரம் பணமும், சண்முகம் 1,600 கிராம் எடையுள்ள தங்கக்கட்டியையும் கொடுத்துள்ளனர். அதனைப்பெற்ற சக்திவேல், ஓரிரு மாதங்களில், நீங்கள் கேட்ட நகை உருப்படிகளை செய்து தருவதாக கூறியுள்ளார்.

தங்கக்கட்டியுடன் தலைமறைவு

மேலும் விழுப்புரம் வண்டிமேடு பகுதியில் நகை பட்டறை நடத்தி வரும் சக்திவேலின் கடைக்கு தீபக் உள்ளிட்ட 3 பேரும் அவ்வப்போது சென்று நகை வியாபாரம் விஷயமாக பேசி வந்துள்ளனர். இந்த சூழலில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தீபக் உள்ளிட்ட 3 பேரும் சக்திவேல் பட்டறைக்கு சென்றபோது அவரது பட்டறை பூட்டிக்கிடந்தது. அவரை பலமுறை செல்போனில் தொடர்பு கொண்டபோதிலும் அவர் செல்போன் அழைப்பை எடுக்கவில்லை. உடனே அவரது வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினரிடம் விசாரித்தபோது சக்திவேல், வீட்டுக்கு வரவில்லை என்றும் எங்கு சென்றார் என தங்களுக்கு தெரியவில்லை என்று கூறியுள்ளனர். மோசடி செய்யப்பட்ட தங்கக்கட்டிகளின் மதிப்பு ரூ.1 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதனால், சக்திவேல் நகைகளையும் செய்து தராமல், வாங்கிய தங்கக்கட்டியையும் திருப்பித்தராமல் ஏமாற்றி மோசடி செய்து விட்டாரே என்று எண்ணி மனவேதனை அடைந்த அவர்கள் 3 பேரும் இதுபற்றி விழுப்புரம் நகர காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் சக்திவேல் மீது நம்பிக்கை மோசடி பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் சக்திவேலை பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  சசாங்சாய் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. அதன்பேரில் தனிப்படை போலீசார், இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தியதோடு பல்வேறு இடங்களில் சக்திவேலை வலைவீசி தேடி வந்தனர்.

இந்நிலையில் அவர் சென்னையில் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று சக்திவேலை மடக்கிப்பிடித்தனர். பின்னர் அவரை விழுப்புரம் அழைத்து வந்து கைது செய்து அவரிடமிருந்த ரூ.30 லட்சம் மதிப்புள்ள 600 கிராம் தங்கத்தை (75 பவுன்) பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
612
Active
28518
Recovered
157
Deaths
Last Updated: Sun 13 July, 2025 at 12:57 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

EPS Slams DMK: ரூ.1000-க்கு ஆசைப்பட்டு ரூ.1500-அ விட்டுட்டீங்களே.?! - மக்களிடம் மத்தியில் பேசிய இபிஎஸ் ஆதங்கம்
ரூ.1000-க்கு ஆசைப்பட்டு ரூ.1500-அ விட்டுட்டீங்களே.?! - மக்களிடம் மத்தியில் பேசிய இபிஎஸ் ஆதங்கம்
அன்புமணி எதற்காக தைலாபுரம் வீட்டிற்கு வந்தார்? - ராமதாஸ் அளித்த பதில் இதோ
அன்புமணி எதற்காக தைலாபுரம் வீட்டிற்கு வந்தார்? - ராமதாஸ் அளித்த பதில் இதோ
Google's New Gmail Tool: அப்பாடா நிம்மதி.! இனிமே தேவையில்லாத மெயில ஈசியா தட்டித் தூக்கிரலாம் - ஜி மெயிலில் புதிய டூல்
அப்பாடா நிம்மதி.! இனிமே தேவையில்லாத மெயில ஈசியா தட்டித் தூக்கிரலாம் - ஜி மெயிலில் புதிய டூல்
Tesla India Launch: இந்தியாவில் கலக்க வரும் டெஸ்லா; முதல் மாடலான 'Y'-ல் இவ்வளவு வசதிகளா.!! விலை என்ன தெரியுமா.?
இந்தியாவில் கலக்க வரும் டெஸ்லா; முதல் மாடலான 'Y'-ல் இவ்வளவு வசதிகளா.!! விலை என்ன தெரியுமா.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

800 கோடி.. BOAT CLUB-ல் 1 ஏக்கர்! மாறன் BROTHERS டீல்! ஸ்டாலின்,வீரமணி சம்பவம்
தைலாபுரத்தில் அன்புமணி ENTRY! 5 நிமிடத்தில் பேசி முடித்த ராமதாஸ்! மயிலாடுதுறையில் நடந்தது என்ன?
Nayanthara Divorce | விக்னேஷ் சிவனுடன் விவாகரத்தா?வெளியான பரபரப்பு தகவல் நயன்தாரா கொடுத்த ரியாக்‌ஷன்
Pothupani Thilagam | ’நீர்வளத்துறையில் முறைகேடு?’ துரைமுருகனுக்கே விபூதி அடித்த பொதுப்பணி திலகம்!
EPS with Amit Shah | களம் இறங்கும் அமித்ஷா உறுதி அளித்த நயினார்! இபிஎஸ் பக்கா ஸ்கெட்ச்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS Slams DMK: ரூ.1000-க்கு ஆசைப்பட்டு ரூ.1500-அ விட்டுட்டீங்களே.?! - மக்களிடம் மத்தியில் பேசிய இபிஎஸ் ஆதங்கம்
ரூ.1000-க்கு ஆசைப்பட்டு ரூ.1500-அ விட்டுட்டீங்களே.?! - மக்களிடம் மத்தியில் பேசிய இபிஎஸ் ஆதங்கம்
அன்புமணி எதற்காக தைலாபுரம் வீட்டிற்கு வந்தார்? - ராமதாஸ் அளித்த பதில் இதோ
அன்புமணி எதற்காக தைலாபுரம் வீட்டிற்கு வந்தார்? - ராமதாஸ் அளித்த பதில் இதோ
Google's New Gmail Tool: அப்பாடா நிம்மதி.! இனிமே தேவையில்லாத மெயில ஈசியா தட்டித் தூக்கிரலாம் - ஜி மெயிலில் புதிய டூல்
அப்பாடா நிம்மதி.! இனிமே தேவையில்லாத மெயில ஈசியா தட்டித் தூக்கிரலாம் - ஜி மெயிலில் புதிய டூல்
Tesla India Launch: இந்தியாவில் கலக்க வரும் டெஸ்லா; முதல் மாடலான 'Y'-ல் இவ்வளவு வசதிகளா.!! விலை என்ன தெரியுமா.?
இந்தியாவில் கலக்க வரும் டெஸ்லா; முதல் மாடலான 'Y'-ல் இவ்வளவு வசதிகளா.!! விலை என்ன தெரியுமா.?
Iran Threatens Trump: ஈரானிடமிருந்து கொலை மிரட்டல்; புன்னகையால் டீல் செய்த ட்ரம்ப் - நடந்தது என்ன தெரியுமா.?
ஈரானிடமிருந்து கொலை மிரட்டல்; புன்னகையால் டீல் செய்த ட்ரம்ப் - நடந்தது என்ன தெரியுமா.?
சென்னையிலே இப்படியா? ஆசிரியர்கள் இல்லா அரசுப்பள்ளிகள்.. அப்புறம் எப்படி பசங்க படிப்பாங்க?
சென்னையிலே இப்படியா? ஆசிரியர்கள் இல்லா அரசுப்பள்ளிகள்.. அப்புறம் எப்படி பசங்க படிப்பாங்க?
PM Modi TN Visit: 3 மாதங்களுக்குப் பிறகு - ஃபாரின் டூர் முடிந்து தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி - எப்போது? ஏன்?
PM Modi TN Visit: 3 மாதங்களுக்குப் பிறகு - ஃபாரின் டூர் முடிந்து தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி - எப்போது? ஏன்?
ரேஷன் கார்டில் திருத்தம் செய்ய அறிய வாய்ப்பு...! பெயர் சேர்த்தல், நீக்கம் உட்பட முக்கிய சேவைகள்! தவறவிடாதீர்!
ரேஷன் கார்டில் திருத்தம் செய்ய அறிய வாய்ப்பு...! பெயர் சேர்த்தல், நீக்கம் உட்பட முக்கிய சேவைகள்! தவறவிடாதீர்!
Embed widget