மேலும் அறிய

3 மாதங்களில் 11 இந்தியர்கள் மரணம்! படிக்கச் சென்ற ஹைதரபாத் மாணவர் அமெரிக்காவில் உயிரிழப்பு!

அமெரிக்காவில் படிப்பதற்காக சென்ற இந்திய மாணவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். நடப்பாண்டில் நிகழும் இந்தியர்களின் 11வது மரணம் ஆகும்.

அமெரிக்காவில் வேலைவாய்ப்பு, கல்வி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்தியாவைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர் வசித்து வருகின்றனர். அந்த நாட்டு குடியுரிமை பெற்றவர்களே லட்சக்கணக்கான இந்தியர்கள் வசித்து வருகின்றனர்.

இந்திய மாணவர் மர்ம மரணம்:

தெலங்கானாவின் தலைநகரான ஹைதரபாத்தைச் சேர்ந்தவர் முகமது அப்துல் அர்ஃபத். 25 வயதான முகமது அப்துல் அமெரிக்காவில் உள்ள ஓஹியோவில் உள்ள கிளெவ்லேண்ட் பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார். இவர் கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு மாயமானார். இதனால், அங்குள்ள அவரது நண்பர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

இதையடுத்து, அந்த நாட்டு காவல்துறையினருக்கும், அங்குள்ள இந்திய தூதரகத்திற்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, அவரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இன்று காலை மாயமான முகமது அப்துல் அர்ஃபத்தை சடலமாக மீட்டுள்ளனர். அவரது சடலத்தை ஓஹியோவில் உள்ள கிளெவ்லேண்டில் மீட்டுள்ளனர்.

3 மாதங்களில் 11வது இந்தியர்:

மாயமான இந்திய மாணவர் 3 வாரங்களுக்கு பிறகு சடலமாக மீட்கப்பட்டுள்ளது அங்குள்ள அவரது நண்பர்களுக்கும், இந்தியாவில் உள்ள அவரது குடும்பத்தினருக்கும் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவரது மரணத்தால் அவரது குடும்பத்தினர் பெரும் சோகத்திற்கு ஆளாகியுள்ளனர்.

அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் படித்து வரும் சூழலில், இந்தாண்டு மட்டும் அங்கு பயிலும் இந்திய மாணவர்கள் தொடர்ந்து உயிரிழந்து வருகின்றனர். முகமது அப்துல்லின் மரணம் நடப்பாண்டில் மட்டும் நிகழும் 11வது இந்தியரின் மரணம் ஆகும். அமெரிக்காவில் பயிலும் இந்திய மாணவர்கள் தொடர்ந்து மர்மமான முறையில் உயிரிழந்து வருவது அங்கு வசிக்கும் இந்தியர்களுக்கும், அங்கு படிக்கும் இந்திய மாணவர்கள் மத்தியிலும் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியைம் ஏற்படுத்தியுள்ளது.

அச்சத்தில் இந்தியர்கள்:

மேலும், இந்தியாவில் வசிக்கும் அவர்களது குடும்பத்தினர் பெரும் வேதனைக்கு ஆளாகியுள்ளனர். சில மாணவர்கள் அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கே திரும்பி வருகின்றனர். கடந்த 2022 -2023 காலகட்டத்தில் மட்டும் 2.6 லட்சம் இந்திய மாணவர்கள் நாடு திரும்பியுள்ளனர். வழக்கமாக, படிப்பை முடித்துவிட்டு இந்தியா திரும்பும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கையை காட்டிலும் இது 35 சதவீதம் அதிகம் ஆகும்.

இதுதொடர்பாக, முறையான விசாரணை நடத்த வேண்டும் என்றும், இந்தியர்களின் மரணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் இந்தியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். மேலும், இதற்கு காரணமானவர்களை கைது செய்து தக்க தண்டனை அளிக்க வேண்டும் என்றும், தங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக இந்திய தூதரகமும் அந்த நாட்டு அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. 

மேலும் படிக்க: ED Raid: போதைப் பொருள் கடத்தல் வழக்கு: அமீர், ஜாஃபர் சாதிக் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை..

மேலும் படிக்க: Tiruppur Accident: திருப்பூர் சாலை விபத்து - 3 மாத குழந்தை உட்பட 5 பேர் உயிரிழப்பு..!

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Jagdeep Dhankhar Resign: பெரும் அதிர்ச்சி! குடியரசுத் துணைத்தலைவர் திடீர் ராஜினாமா - ஜெகதீப் தன்கருக்கு என்னாச்சு?
Jagdeep Dhankhar Resign: பெரும் அதிர்ச்சி! குடியரசுத் துணைத்தலைவர் திடீர் ராஜினாமா - ஜெகதீப் தன்கருக்கு என்னாச்சு?
MK Stalin Health: அடுத்த 3 நாட்கள்.. மருத்துவர்கள் கண்காணிப்பில் மு.க. ஸ்டாலின் - அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை
அடுத்த 3 நாட்கள்.. மருத்துவர்கள் கண்காணிப்பில் மு.க. ஸ்டாலின் - அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை
Honey Rose: ஹனிரோஸ் ஒரு திருநங்கை.. ரசிகர்களுக்கு அதிர்ச்சி தந்த பயில்வான் ரங்கநாதன்!
Honey Rose: ஹனிரோஸ் ஒரு திருநங்கை.. ரசிகர்களுக்கு அதிர்ச்சி தந்த பயில்வான் ரங்கநாதன்!
Metro Travel Card: மெட்ரோ ரயில் பயணிகளே, ஆகஸ்ட் 1-ல் இருந்து அந்த கார்டு இருந்தா தான்... CMRL-ன் முக்கிய அறிவிப்பு
மெட்ரோ ரயில் பயணிகளே, ஆகஸ்ட் 1-ல் இருந்து அந்த கார்டு இருந்தா தான்... CMRL-ன் முக்கிய அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK BJP Alliance  | ”கூட்டணி வேண்டுமா வேண்டாமா?” தடாலடியாய் சொன்ன இபிஎஸ்! குழப்பத்தில் NDA கூட்டணி
“என் பையனை காப்பாத்துங்க”ரஷ்யாவில் கைதான மாணவன் கதறி அழும் கடலூர் பெற்றோர் Russia Ukraine War
Annamalai vs EPS |
Congress DMK Alliance | ”2026-ல் கூட்டணி ஆட்சிதான்”புயலை கிளப்பும் காங்கிரஸ் மீண்டும் வெடித்த மோதல்?
Spicejet Flight Women Fight : ’’சீட் பெல்ட் போட முடியாது’’PILOT அறைக்குள் சென்ற பெண்கள்அவசரமாக தரையிறங்கிய விமானம்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Jagdeep Dhankhar Resign: பெரும் அதிர்ச்சி! குடியரசுத் துணைத்தலைவர் திடீர் ராஜினாமா - ஜெகதீப் தன்கருக்கு என்னாச்சு?
Jagdeep Dhankhar Resign: பெரும் அதிர்ச்சி! குடியரசுத் துணைத்தலைவர் திடீர் ராஜினாமா - ஜெகதீப் தன்கருக்கு என்னாச்சு?
MK Stalin Health: அடுத்த 3 நாட்கள்.. மருத்துவர்கள் கண்காணிப்பில் மு.க. ஸ்டாலின் - அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை
அடுத்த 3 நாட்கள்.. மருத்துவர்கள் கண்காணிப்பில் மு.க. ஸ்டாலின் - அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை
Honey Rose: ஹனிரோஸ் ஒரு திருநங்கை.. ரசிகர்களுக்கு அதிர்ச்சி தந்த பயில்வான் ரங்கநாதன்!
Honey Rose: ஹனிரோஸ் ஒரு திருநங்கை.. ரசிகர்களுக்கு அதிர்ச்சி தந்த பயில்வான் ரங்கநாதன்!
Metro Travel Card: மெட்ரோ ரயில் பயணிகளே, ஆகஸ்ட் 1-ல் இருந்து அந்த கார்டு இருந்தா தான்... CMRL-ன் முக்கிய அறிவிப்பு
மெட்ரோ ரயில் பயணிகளே, ஆகஸ்ட் 1-ல் இருந்து அந்த கார்டு இருந்தா தான்... CMRL-ன் முக்கிய அறிவிப்பு
மயிலாடுதுறை டிஎஸ்பிக்கு ஆதரவாக களத்தில் இறங்கிய பொதுமக்கள் - மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்த  திட்டம்..!
மயிலாடுதுறை டிஎஸ்பிக்கு ஆதரவாக களத்தில் இறங்கிய பொதுமக்கள் - மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டம்..!
Chennai Police Order: இரவு நேர குற்றத் தடுப்பு; காவலர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு - என்ன பண்ணப் போறாங்க தெரியுமா.?
இரவு நேர குற்றத் தடுப்பு; காவலர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு - என்ன பண்ணப் போறாங்க தெரியுமா.?
வெறும் 18 பேருதானா? 77 வருடத்தில் மக்களவைக்குப் போன இஸ்லாமிய பெண்கள் இவ்வளவுதான்!
வெறும் 18 பேருதானா? 77 வருடத்தில் மக்களவைக்குப் போன இஸ்லாமிய பெண்கள் இவ்வளவுதான்!
புதுச்சேரியில் ரூ.1 கோடி மோசடி! போலி முதலீடு வலையில் சிக்கிய மக்கள்: எச்சரிக்கை அவசியம்!
புதுச்சேரியில் ரூ.1 கோடி மோசடி! போலி முதலீடு வலையில் சிக்கிய மக்கள்: எச்சரிக்கை அவசியம்!
Embed widget