மேலும் அறிய

3 மாதங்களில் 11 இந்தியர்கள் மரணம்! படிக்கச் சென்ற ஹைதரபாத் மாணவர் அமெரிக்காவில் உயிரிழப்பு!

அமெரிக்காவில் படிப்பதற்காக சென்ற இந்திய மாணவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். நடப்பாண்டில் நிகழும் இந்தியர்களின் 11வது மரணம் ஆகும்.

அமெரிக்காவில் வேலைவாய்ப்பு, கல்வி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்தியாவைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர் வசித்து வருகின்றனர். அந்த நாட்டு குடியுரிமை பெற்றவர்களே லட்சக்கணக்கான இந்தியர்கள் வசித்து வருகின்றனர்.

இந்திய மாணவர் மர்ம மரணம்:

தெலங்கானாவின் தலைநகரான ஹைதரபாத்தைச் சேர்ந்தவர் முகமது அப்துல் அர்ஃபத். 25 வயதான முகமது அப்துல் அமெரிக்காவில் உள்ள ஓஹியோவில் உள்ள கிளெவ்லேண்ட் பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார். இவர் கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு மாயமானார். இதனால், அங்குள்ள அவரது நண்பர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

இதையடுத்து, அந்த நாட்டு காவல்துறையினருக்கும், அங்குள்ள இந்திய தூதரகத்திற்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, அவரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இன்று காலை மாயமான முகமது அப்துல் அர்ஃபத்தை சடலமாக மீட்டுள்ளனர். அவரது சடலத்தை ஓஹியோவில் உள்ள கிளெவ்லேண்டில் மீட்டுள்ளனர்.

3 மாதங்களில் 11வது இந்தியர்:

மாயமான இந்திய மாணவர் 3 வாரங்களுக்கு பிறகு சடலமாக மீட்கப்பட்டுள்ளது அங்குள்ள அவரது நண்பர்களுக்கும், இந்தியாவில் உள்ள அவரது குடும்பத்தினருக்கும் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவரது மரணத்தால் அவரது குடும்பத்தினர் பெரும் சோகத்திற்கு ஆளாகியுள்ளனர்.

அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் படித்து வரும் சூழலில், இந்தாண்டு மட்டும் அங்கு பயிலும் இந்திய மாணவர்கள் தொடர்ந்து உயிரிழந்து வருகின்றனர். முகமது அப்துல்லின் மரணம் நடப்பாண்டில் மட்டும் நிகழும் 11வது இந்தியரின் மரணம் ஆகும். அமெரிக்காவில் பயிலும் இந்திய மாணவர்கள் தொடர்ந்து மர்மமான முறையில் உயிரிழந்து வருவது அங்கு வசிக்கும் இந்தியர்களுக்கும், அங்கு படிக்கும் இந்திய மாணவர்கள் மத்தியிலும் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியைம் ஏற்படுத்தியுள்ளது.

அச்சத்தில் இந்தியர்கள்:

மேலும், இந்தியாவில் வசிக்கும் அவர்களது குடும்பத்தினர் பெரும் வேதனைக்கு ஆளாகியுள்ளனர். சில மாணவர்கள் அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கே திரும்பி வருகின்றனர். கடந்த 2022 -2023 காலகட்டத்தில் மட்டும் 2.6 லட்சம் இந்திய மாணவர்கள் நாடு திரும்பியுள்ளனர். வழக்கமாக, படிப்பை முடித்துவிட்டு இந்தியா திரும்பும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கையை காட்டிலும் இது 35 சதவீதம் அதிகம் ஆகும்.

இதுதொடர்பாக, முறையான விசாரணை நடத்த வேண்டும் என்றும், இந்தியர்களின் மரணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் இந்தியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். மேலும், இதற்கு காரணமானவர்களை கைது செய்து தக்க தண்டனை அளிக்க வேண்டும் என்றும், தங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக இந்திய தூதரகமும் அந்த நாட்டு அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. 

மேலும் படிக்க: ED Raid: போதைப் பொருள் கடத்தல் வழக்கு: அமீர், ஜாஃபர் சாதிக் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை..

மேலும் படிக்க: Tiruppur Accident: திருப்பூர் சாலை விபத்து - 3 மாத குழந்தை உட்பட 5 பேர் உயிரிழப்பு..!

தலைப்பு செய்திகள்

Nagercoil Sabarivarman :நாகர்கோவில் விசாரணை கைதி திடீர் மரணம்.! பிரேதப் பரிசோதனையில் வெளியான ஷாக் தகவல்- நடந்தது என்ன.?
நாகர்கோவில் விசாரணை கைதி திடீர் மரணம்.! பிரேதப் பரிசோதனையில் வெளியான ஷாக் தகவல்- நடந்தது என்ன.?
கடல் வழியே இலங்கைக்கு போலி மருந்துகள் கடத்தல்: புதுச்சேரியில் போலி மருந்து தொழிற்சாலை உரிமையாளர் கைது!
கடல் வழியே இலங்கைக்கு போலி மருந்துகள் கடத்தல்: புதுச்சேரியில் போலி மருந்து தொழிற்சாலை உரிமையாளர் கைது!
15 வயது பள்ளி மாணவி கர்ப்பம் !! காதலிப்பதாக ஏமாற்றி சிறுமியுடன் உல்லாசம் !! போக்சோவில் கைது
15 வயது பள்ளி மாணவி கர்ப்பம் !! காதலிப்பதாக ஏமாற்றி சிறுமியுடன் உல்லாசம் !! போக்சோவில் கைது
பெற்றோர் பணம் தராததால் விபரீதம் ? கிணற்றில் கையில் கல்லுடன் மிதந்த இளைஞரின் சடலம்
பெற்றோர் பணம் தராததால் விபரீதம் ? கிணற்றில் கையில் கல்லுடன் மிதந்த இளைஞரின் சடலம்

வீடியோ

விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?
CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Premalatha vs Vijay : தொடரும் லாக்அப் மரணம்.! மாற்றம் என கூறினீங்க எந்தவித மாற்றமும் ஏற்படவில்லையே- சீறிய பிரேமலதா
தொடரும் லாக்அப் மரணம்.! மாற்றம் என கூறினீங்க எந்தவித மாற்றமும் ஏற்படவில்லையே- சீறிய பிரேமலதா
Nagercoil Sabarivarman :நாகர்கோவில் விசாரணை கைதி திடீர் மரணம்.! பிரேதப் பரிசோதனையில் வெளியான ஷாக் தகவல்- நடந்தது என்ன.?
நாகர்கோவில் விசாரணை கைதி திடீர் மரணம்.! பிரேதப் பரிசோதனையில் வெளியான ஷாக் தகவல்- நடந்தது என்ன.?
EV Car Charging : மின்சார கார் வாங்குபவர்களுக்கு இனி ஜாலி.! அசத்தலான திட்டத்திற்கு பிளான் போட்ட தமிழக அரசு
மின்சார கார் வாங்குபவர்களுக்கு இனி ஜாலி.! அசத்தலான திட்டத்திற்கு பிளான் போட்ட தமிழக அரசு
Vanathi Srinivasan: விசாரணை கைதி மரணம்.. காவல் நிலையம் சித்ரவதைக்கூடமா? .. விஜயை விளாசிய வானதி சீனிவாசன்!
Vanathi Srinivasan: விசாரணை கைதி மரணம்.. காவல் நிலையம் சித்ரவதைக்கூடமா? .. விஜயை விளாசிய வானதி சீனிவாசன்!
ஒரே ஆண்டில் ஒரு லட்சம் ஏக்கர் காலி! தமிழகத்தை உலுக்கும் தண்ணீர் பற்றாக்குறை! முழு விபரம் உள்ளே!
ஒரே ஆண்டில் ஒரு லட்சம் ஏக்கர் காலி! தமிழகத்தை உலுக்கும் தண்ணீர் பற்றாக்குறை! முழு விபரம் உள்ளே!
உனக்கு காதலி இருக்கா? .. வயசு என்ன?.. டார்ச்சர் பண்றீங்களேப்பா.. நிர்வாகியிடம் திண்டுக்கல் சீனிவாசன் டென்ஷன்!
உனக்கு காதலி இருக்கா? .. வயசு என்ன?.. டார்ச்சர் பண்றீங்களேப்பா.. நிர்வாகியிடம் திண்டுக்கல் சீனிவாசன் டென்ஷன்!
CM Vijay:
CM Vijay: "இந்த பக்கமே வரக்கூடாது.." கூட்டணி கட்சிகளை விரட்டிவிட்ட முதலமைச்சர் விஜய் - எதற்காக?
TVK: பழனி கோயில் விவகாரம்.. லாக்கப் மரணம்.. தவெக ஆட்சிக்கு அடுத்தடுத்து நெருக்கடி!
TVK: பழனி கோயில் விவகாரம்.. லாக்கப் மரணம்.. தவெக ஆட்சிக்கு அடுத்தடுத்து நெருக்கடி!
Embed widget