மேலும் அறிய

Illegal Liquor Transport : எந்த பெட்டிக்கு போனாலும் பொட்டி பொட்டியா குவாட்டர்! பிடித்து டயர்டு ஆன ரயில்வே போலீஸ்!

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பல்வேறு பெட்டிகளில் பிடிபட்ட 384 மதுபான பாக்கெட், 43 மதுபான பாட்டில். 35000 ரூபாய் மதிப்புள்ள மதுபானத்தை பறிமுதல் செய்தது ரயில்வே காவல்படை.

தமிழ்நாட்டில் தளர்வுகளற்ற ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் மது அருந்த முடியாமல் தவிக்கும் மது பிரியர்கள், அண்டை மாநிலங்களில் இருந்து ரயில்வே பார்சல் மூலம் மதுபானத்தை கடத்துவதாக ரயில்வே காவல்படையினருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் அடிப்படையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காவல் ஆய்வாளர் சிவநேசன் தலைமையில் தனிப்படை அமைத்து, அவ்வப்போது அதிரடி சோதனைகளில் காவல்துறையினர் ஈடுபட்டு வந்தனர்.

3 டப்பாவில் பார்சல் வந்த 384 மதுபான பாக்கெட்கள் 

இன்று அதிகாலை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடத்திய திடீர் சோதனையில் ரூபாய் 20 ஆயிரம் மதிப்பிலான மதுபானம் பிடிபட்டது. உத்திரபிரதேசத்தை சேர்ந்த 27 வயதுள்ள அகிலேஷ் யாதவ் என்னும் நபருக்கு 3 டப்பாக்கள் பார்சல் வந்திருந்தது. அவரின் நடவடிக்கையை கண்டு சந்தேகமடைந்த ரயில்வே காவல்படை போலீசார், பார்சல்களை சோதனை செய்தனர். அதில் உள்ளே பாக்கெட் மதுபானம் இருந்ததது கண்டறியப்பட்டது. பார்சலில் அனுப்பபட்ட சுமார் 384 பாக்கெட் மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டது. பெங்களூரு - சென்னை ரயிலில் அனுப்பட்டுள்ள மதுபான பார்சல் குறித்து ரயில்வே காவல்படை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Illegal Liquor Transport : எந்த பெட்டிக்கு போனாலும் பொட்டி பொட்டியா குவாட்டர்! பிடித்து டயர்டு ஆன ரயில்வே போலீஸ்!

நடைமேடை ஒன்றில் பிடிபட்ட 23 பாட்டில்

சென்ட்ரல் ரயில் நிலையத்தின் முதல் நடைமேடையில் வழக்கமான பாதுகாப்பு பணியில் ரயில்வே காவல்படையினர் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த நடைமேடையில் நீண்ட நேரமாக கையில் நீல நிற பையுடன் சந்தேகத்திற்கு இடமான முறையில் 25 வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் இருந்துள்ளார். அவரை அழைத்து, அவரிடம் இருந்த பையில் சோதனை செய்ததில் 23 பாட்டில் மதுபானத்தை பைகளில் பதுக்கி கடத்த முற்பட்டது தெரிய வந்ததது. அவரிடமிருந்து 8000 ரூபாய் மதிப்பிலான மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்தனர் ரயில்வே காவல்படையினர்.

நடைமேடை நான்கில் பிடிபட்ட 20 பாட்டில்

நடைமேடை நான்கில் அடையாளம் தெரியாத பை ஒன்று கிடந்துள்ளது, அதை சோதனை செய்த பார்த்த போது 20 மது பாட்டில்கள் அதில் கண்டறியப்பட்டுளளது. 7000 ரூபாய் மதிப்பிலான மதுபானம் அந்த பையில் இருந்ததாக ரயில்வே காவல்படையினர் தகவல் அளித்துள்ளனர்.

ஒட்டுமொத்தமாக இன்று ஒரே நாளில் மட்டும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 384 மதுபான பாக்கெட், 43 மதுபான பாட்டில் என 35000 ரூபாய் மதிப்புள்ள மதுபானத்தை ரயில்வே காவல்படை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்த மதுபான பாட்டில் அனைத்தும் பூக்கடை காவல்நிலையத்தில் புகார் அளித்து, ஒப்படைக்க பட்டது. அதிக அளவில் மதுபானம் கடத்தப்படுவதாக தெரியவந்துள்ளதை அடுத்த சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது. தங்கம் கடத்துவதைப் போன்று சமீபமாக மது கடத்தில் அதிகரித்துள்ளது. 

தலைப்பு செய்திகள்

"என் உயிர் போனாலும் பரவாயில்லை.." சீர்காழியில் தமிழருக்காக தன் வாழ்வைப் பணயம் வைத்த வடமாநில கேட் கீப்பர்..!
" சித்தப்பா இன்னும் தூங்குறாரு " ரத்தக் கறையை துடைத்து விட்டு காபி குடித்த மனைவி
Bengaluru: மனைவிக்கு கள்ளத்தொடர்பு.. கணவர் சண்டை.. கோபத்தில் குழந்தையை கொன்ற பெற்றோர்!
Bengaluru: மனைவிக்கு கள்ளத்தொடர்பு.. கணவர் சண்டை.. கோபத்தில் குழந்தையை கொன்ற பெற்றோர்!
மயிலாடுதுறை கோவில் சிலைகள் காரைக்காலில் சிக்கியது எப்படி? காரைக்காலில் நள்ளிரவில் அதிரடி வேட்டை!
மயிலாடுதுறை கோவில் சிலைகள் காரைக்காலில் சிக்கியது எப்படி? காரைக்காலில் நள்ளிரவில் அதிரடி வேட்டை!

வீடியோ

Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!
12 year girl death|சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!சாக்கு மூட்டையில் சடலம்!கொடூரனை அடித்தே கொன்ற மக்கள்
Keerthana | ”ENGLISH-ல பேசுங்க” திகைத்து நின்ற மாணவி! பள்ளியில் கீர்த்தனா!எல்லை மீறும் ரீல்ஸ் மோகம்?
Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS ADMK : தவெகவில் மரியாதையே இருக்காது... வெறும் பதவி சுகத்திற்காக போயிருக்காங்க- இபிஎஸ்
தவெகவில் மரியாதையே இருக்காது... வெறும் பதவி சுகத்திற்காக போயிருக்காங்க- விளாசிய இபிஎஸ்
Seeman Slams Keerthana : ‘இதெல்லாம் என்ன? அதிமேதாவித்தனம், அத்துமீறல்’ அமைச்சர் கீர்த்தனாவிற்கு சீமான் கடும் எதிர்ப்பு..!
‘அதிமேதாவித்தனம், அத்துமீறல்’ அமைச்சர் கீர்த்தனாவிற்கு சீமான் கடும் எதிர்ப்பு!
Senthil Balaji: கைதுக்கு பயந்த செந்தில் பாலாஜி.? முன்ஜாமின் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு; அப்போ டீல் பேசுனது.?
கைதுக்கு பயந்த செந்தில் பாலாஜி.? முன்ஜாமின் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு; அப்போ டீல் பேசுனது.?
கரூர் விவகாரம்; தவெக-விடம் சட்டரீதியாக திமுக முதல் தோல்வி! சரமாரியாக டோஸ் விட்ட உச்சநீதிமன்றம்
கரூர் விவகாரம்; தவெக-விடம் சட்டரீதியாக திமுக முதல் தோல்வி! சரமாரியாக டோஸ் விட்ட உச்சநீதிமன்றம்
US Iran Hormuz: துக்கத்திற்கு நடுவிலும் தாக்குதல்.! ஹார்முஸில் தாக்கப்பட்ட 2 கப்பல்கள்; ஈரானை கைகாட்டும் அமெரிக்கா
துக்கத்திற்கு நடுவிலும் தாக்குதல்.! ஹார்முஸில் தாக்கப்பட்ட 2 கப்பல்கள்; ஈரானை கைகாட்டும் அமெரிக்கா
SC On Karur Stampede: உச்சநீதிமன்றத்தில் அரசியல் பண்றீங்களா? நீதிபதிகள் கடும் ஆவேசம் - வாபஸ் பெற்ற திமுக
உச்சநீதிமன்றத்தில் அரசியல் பண்றீங்களா? நீதிபதிகள் கடும் ஆவேசம் - வாபஸ் பெற்ற திமுக
பல்கலைக்கழக காலிப் பணியிடங்கள்: தமிழக உயர்கல்விக்கு பெரும் அச்சுறுத்தல்! அரசு கவனம் செலுத்துமா?
பல்கலைக்கழக காலிப் பணியிடங்கள்: தமிழக உயர்கல்விக்கு பெரும் அச்சுறுத்தல்! அரசு கவனம் செலுத்துமா?
நீட் கட்டணம் Refund; வங்கி கணக்கை புதுப்பிக்க இன்றே கடைசி வாய்ப்பு! எப்படி?
நீட் கட்டணம் Refund; வங்கி கணக்கை புதுப்பிக்க இன்றே கடைசி வாய்ப்பு! எப்படி?
Embed widget