மேலும் அறிய

'போதை வஸ்து, ஆபாச நடனம்’ கொடி கட்டி பறக்கும் ஈ.சி.ஆர் ரெசார்ட்கள்..!

தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்கள் துவங்கி நடிகைகளின் ஆபாச நடனம் வரை ஈசிஆர் உள்ள ரெசார்டுகளில் தங்கு தடையின்றி நடக்கிறது

கிழக்குக் கடற்கரைச் சாலை சென்னை திருவான்மியூரில் தொடங்கி, செங்கல்பட்டு, புதுச்சேரி உள்ளிட்ட கடலோர மாவட்டங்களை தாண்டி நாகப்பட்டினம் வரை செல்கிறது. கிழக்குக் கடற்கரைச் சாலையில் அதிக அளவு ரெசார்ட்கள் உள்ளன . அவற்றில் பெரும்பாலான விடுதிகளில் சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிலும் குறிப்பாக பல சொகுசு விடுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு மற்றும் சனிக்கிழமை இரவுகளில் ஆபாச நடனங்களுடன், மது உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பல போதை வஸ்துகளுடன் பார்ட்டி நடைபெறுகிறது. இவ்வாறு நடைபெறும் ஆபாச விருந்துகளில் நடிகைகள் முதல் பல்வேறு பெண்கள் ஆபாச நடனங்கள் ஆடுவது, தடை செய்யப்பட்ட போதை பொருட்களை பயன்படுத்துவது, ஆகியவை தற்போது கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தொகுதிகளில் சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகிறது.

போதை வஸ்து, ஆபாச நடனம்’ கொடி கட்டி பறக்கும் ஈ.சி.ஆர் ரெசார்ட்கள்..!
கடலோரம் கட்டபட்ட அழகிய சொகுசு விடுதி, கடற்கரையோரத்தில் மதுவிருந்து, உள்ளிட்டவை இளைஞர்கள் மத்தியில் ஒரு ஆர்வத்தை தூண்டி விடுகின்றன. இந்த ஆர்வத்தை பயன்படுத்தி, பணம் சம்பாதிக்கும் முதலைகள் பல ஆயிரம் ரூபாய்களை அவர்களிடம் கறந்து விடுகிறார்கள். பொதுவாக இவ்வாறு நடைபெறும் விருந்துகள் தடை செய்யப்பட்டிருந்தாலும், பிறந்தநாள் விழா கொண்டாடுகிறோம், திருமண விழா கொண்டாடுகிறோம் உள்ளிட்ட காரணங்களை கூறி சட்டவிரோத செயலில் ஈடுபடுகின்றனர். சொகுசு விடுதி உரிமையாளர்கள் பணம் வருகிறது என்ற ஒற்றை காரணத்தால் இதை கண்டும் காணாமலும் விட்டுவிடுகிறார்கள்.

போதை வஸ்து, ஆபாச நடனம்’ கொடி கட்டி பறக்கும் ஈ.சி.ஆர் ரெசார்ட்கள்..!
சொகுசு விடுதிகள் இவ்வாறு நடைபெறுகிறது என்றால், தங்களுடைய சொந்த தேவைக்காக பண்ணை வீடுகளை கட்டிவிட்டு, இதுபோன்ற விருந்துகளுக்கு வாடகைக்கு விடுகின்றனர். இது போன்ற பண்ணை வீடுகளில் நடைபெறும் பார்ட்டிகளில் எல்லை மீறும் செயல்கள் பலவும் நடைபெறுகிறது. மொத்தமாக ஒரு பண்ணை வீட்டை புக் செய்து விடுவதால், பார்ட்டியில் கலந்து கொள்பவர்களை தவிர வேறு யாரும் அங்கு இருக்க போவதில்லை என்பதாலும் , உயர்ரக போதைப்பொருட்களில்  துவங்கி, ஆபாச குத்தாட்டங்கள் வரை எல்லை மீறுகிறது. இவ்வாறு நடைபெறும் ஆபாச நடனங்களில் நடனமாடும் பெண்களின் மீது பணம் மழை பொழிவதாகவும் கூறப்படுகிறது.  குறிப்பாக, இது போன்ற விருந்துகள் இளைஞர்களைக் குறிவைத்தே நடத்தப்படுகிறது.
மென்பொருள் பணியாளர்கள், வசதி படைத்த இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டோர், இவ்விருந்தில் ஆயிரக்கணக்கில் செலவு செய்து கலந்து கொள்கின்றன. இவ்வாறு நடைபெறும் விருந்திற்கு சமூக வலைதளம் மூலம் விளம்பரங்கள் செய்து வருவதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒருபுறம் பணம் கொடுத்து இளைஞர்கள் சீரழிந்து வருகிறார்கள் என்றால், மறுபுறம் பணத்திற்கு ஆசைப்பட்டு , ஆபாச நடனம் ஆடும் பெண்களின் கதை இன்னும் மோசம். 
போதை வஸ்து, ஆபாச நடனம்’ கொடி கட்டி பறக்கும் ஈ.சி.ஆர் ரெசார்ட்கள்..!
கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கூட மகாபலிபுரம் அருகே சட்டவிரோதமான விருந்து நடைபெற்ற பொழுது, காவல்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தி 75 க்கும் மேற்பட்ட இருபாலர் இளைஞர்களை கைது செய்து, அவர்களை எச்சரித்து  காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். மேலும், விருந்து நடந்த சொகுசு விடுதிக்கு சீல் வைத்திருந்தனர். கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக முழு பொது முடக்கம் அமலில் இருந்ததால், சொகுசு விடுதிகள் ஆகியவை மூடப்பட்டிருந்த காரணத்தினாலும். இது போன்ற விருந்துகள் நடைபெறாமல் இருந்து வந்தன. இந்நிலையில்  அவை மீண்டும் தற்பொழுது தலைத்தூக்க துவங்கியுள்ளன. கடந்த  சனிக்கிழமை ஒரு ரிசார்ட்டில் மதுவிருந்து நடத்திய 16 பெண்கள் உட்பட 31 பேர் சிக்கி உள்ளனர். இதில் காதலன் படத்தில் போலீசாக நடித்த கவிதாஸ்ரீயும் அடக்கம்.

போதை வஸ்து, ஆபாச நடனம்’ கொடி கட்டி பறக்கும் ஈ.சி.ஆர் ரெசார்ட்கள்..!
ன்னை கிழக்கு கடற்கரை சாலை, கானத்தூர்  சாலை உள்ளிட்ட இடங்களில்  உள்ள  சொகுசு பண்ணை செயல்பட்டு வருகிறது. இந்த சொகுசு பண்ணை வீடுகளில் கடந்த சனிக்கிழமை இரவு ஆண்கள், பெண்கள் என 30- க்கும் மேற்பட்டோர், கலந்துகொண்ட மது விருந்து நடைபெற்று வருவதாக கானத்தூர் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் வந்தது. இது குறித்து தகவலின் பேரில், கானத்தூர் போலீசார் சென்றபோது அந்த இடத்தில் மிகப்பெரிய அளவில் மது விருந்து நடைபெற்று கொண்டிருந்ததை கானத்தூர் காவல் துறையினர் உறுதி செய்தனர்.
போதை வஸ்து, ஆபாச நடனம்’ கொடி கட்டி பறக்கும் ஈ.சி.ஆர் ரெசார்ட்கள்..!
 
அங்கு ஆண்கள் மற்றும் பெண்கள்  மதுபோதையில் அரைகுறை ஆடைகளுடன், போலீசார் செல்லும்போது இணைந்து நடனமாடி கொண்டிருந்தனர். அதனை பார்த்து அதிர்ந்த காவல்துறையினர் மது விருந்தை தடுத்து நிறுத்தினர். மேலும், மது விருந்து நடத்திக்கொண்டு இருந்தவர்களிடம்  விசாரணை நடத்தியதில், அங்கிருந்த பெண் ஒருவர் இந்த மது விருந்துக்கு ஏற்பாடு செய்தது தெரியவந்தது.

போதை வஸ்து, ஆபாச நடனம்’ கொடி கட்டி பறக்கும் ஈ.சி.ஆர் ரெசார்ட்கள்..!
மேலும், மது விருந்துக்கு  சினிமா நடிகை கவிதா ஸ்ரீ  மற்றும் ராமாபுரத்தை சேர்ந்த ஸ்ரீ ஜித்குமார் (34) என்பவருடன் இணைந்து, இந்த இரவு நேர மது விருந்து பார்ட்டியை ஏற்பாடு செய்ததும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து  காவல்துறையினர், இந்த மது விருந்து பார்ட்டியில் நடனமாடிய  பெண்கள் மற்றும் நடிகை கவிதா ஸ்ரீ உடன் சேர்த்து மொத்தம் 16 பேரையும் கடுமையாக எச்சரிக்கை செய்து பண்ணை வீட்டிலிருந்து அனுப்பி உள்ளனர். இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அந்த மது விருந்தில் கலந்து கொள்வதற்கு, இன்ஸ்டாகிராம் செயலி மூலம் விளம்பரம் செய்யப்பட்டு, அதில் கலந்து கொள்ளும் ஆண் ஒருவருக்கு ரூ.5000  முதல் பத்தாயிரம் வரை வரை கட்டணம் வசூலித்ததும்  தெரியவந்தது.போதை வஸ்து, ஆபாச நடனம்’ கொடி கட்டி பறக்கும் ஈ.சி.ஆர் ரெசார்ட்கள்..!
பின்னர், அங்கிருந்த ஸ்ரீ ஜித்குமார் உள்ளிட்ட 15 பேரையும் போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து, அவர்கள் மீது ஊரடங்கின் போது அரசு உத்தரவை மீறியதாகவும், சட்டத்திற்கு புறம்பாக பன்ணை வீட்டில் மது விருந்து நடத்தியது என 4 பிரிவின் கீழ் வழக்குகள் பதியபட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து கானத்தூர் கிராம நிர்வாக அதிகாரி கலை செல்விக்கு தகவல் கொடுக்கப்பட்டதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற கிராம நிர்வாக அதிகாரி நேற்று பன்ணை வீட்டை பூட்டி சீல் வைத்தார்.

போதை வஸ்து, ஆபாச நடனம்’ கொடி கட்டி பறக்கும் ஈ.சி.ஆர் ரெசார்ட்கள்..!
இவ்வாறு, மீண்டும் தலை தூக்கி உள்ள இந்த ஆபாச விருந்துகள் நடைபெறாமல் இருக்கவும்,  தடை செய்யப்பட்ட போதை வஸ்துகள் பயன்படுத்தாமல் இருக்கவும், காவல்துறையினர் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை வைத்துள்ளனர்.  மது விருந்தில் பங்கேற்குவிட்டு, நிதானம் இல்லாமல் ‘சொகுசு’ கார்களை ஓட்டிச்செல்வதால், பலர் காயமடைந்து வருவதாகவும் அந்த பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதில், உயர் அதிகாரிகள் இந்த விஷயத்தில் தலையிட்டு இளைஞர்களின் வாழ்க்கை சீரழியாமல் இருக்க, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என்பதே பொது மக்களின் கருத்தாக உள்ளது.
 
இளைஞர்களும் தங்களுடைய தனிமனித ஒழுக்கத்தை முறையாக கடைபிடித்தால் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாது !
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
ABP Premium

வீடியோ

Police Helps Pregnant Women|'’மனைவிக்கு பிரசவ வலி’’DRUNK & DRIVEல் வந்த கணவன் போலீஸ் நெகிழ்ச்சிசெயல்
Tambaram Boys Atrocity | பட்டாக்கத்தி உடன் REELSதாம்பரம் சிறுவர்கள் அராஜகம்தட்டித்தூக்கிய போலீஸ்
Jananayagan Bhagavanth Kesari | பகவந்த் கேசரி ரீமேக்கா? ஜனநாயகன் பட சீக்ரெட்! இயக்குநர் OPENS UP
Manickam Tagore | ”வைகோ, திருமா தலையிடாதீங்க” மாணிக்கம் தாகூர் பரபர POST! நடந்தது என்ன?
DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
Jothimani MP: “அழிவின் பாதையில் செல்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்“; எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு
“அழிவின் பாதையில் செல்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்“; எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு
SETC Volvo Bus: பறக்கும் Volvo! திருச்சி டூ சென்னை கிளாம்பாக்கம்! 5 மணி நேரத்தில் மின்னல் பயண அனுபவம்..
SETC Volvo Bus: பறக்கும் Volvo! திருச்சி டூ சென்னை கிளாம்பாக்கம்! 5 மணி நேரத்தில் மின்னல் பயண அனுபவம்..
Chennai Metro Train: சென்னை மெட்ரோ ரயிலில் 9 ஆண்டுகளில் பயணித்தவர்கள் இத்தனை கோடியா? - ஆச்சர்ய தகவல்!
Chennai Metro Train: சென்னை மெட்ரோ ரயிலில் 9 ஆண்டுகளில் பயணித்தவர்கள் இத்தனை கோடியா? - ஆச்சர்ய தகவல்!
Old pension scheme: பழைய ஓய்வூதிய திட்டம்.! முதலமைச்சர் நாளை முக்கிய அறிவிப்பு- அரசு ஊழியர்கள் குஷி
பழைய ஓய்வூதிய திட்டம்.! முதலமைச்சர் நாளை முக்கிய அறிவிப்பு- அரசு ஊழியர்கள் குஷி
Embed widget