மேலும் அறிய

'புஷ்பா நினைவு நீர்த்தேக்கத் தொட்டி' : அரசு சார்பில் கட்டப்பட்ட நீர்த்தேக்கத் தொட்டி புஷ்பா பெயருக்கு மாறியது எப்படி?

விழுப்புரம் மாவட்டம் கானை குப்பம் கிராமத்தில் அரசு சார்பில் கட்டப்பட்ட நீர்த்தேக்கத் தொட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் மனைவி பெயருக்கு மாறிய விநோதம்.

விழுப்புரம் மாவட்டம் கானை குப்பம் கிராமத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கட்டப்பட்ட நீர்த்தேக்க தொட்டியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தனது மனைவியின் புகைப்படத்தை வரைந்திருப்பது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் அடுத்த கானை குப்பம் கிராமத்தில் 2006 ஆம் ஆண்டு கிருஷ்ணராஜ் என்பவர் ஊராட்சி மன்ற தலைவராக பணியாற்றி வந்துள்ளார். இவருடைய மனைவி புஷ்பா, இவர் கானை குப்பம் கிராமத்தில் அங்கன்வாடி பணியாளர் ஆக பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த ஆண்டு புஷ்பா இறந்துள்ளார்.  இந்த நிலையில் கிருஷ்ணராஜ் தலைவராக இருந்த காலகட்டத்தில் கானை குப்பத்தில் உயர்நிலை நீர்த்தேக்கத் தொட்டி ஒன்றை கட்டியுள்ளார்.

இந்தநிலையில், உயர்நிலை நீர்த்தேக்க தொட்டியில் தனது மனைவி புஷ்பாவின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தும் விதமாக நீர்த்தேக்க தொட்டியில் புஷ்பாவின் படத்தை வரைந்து, நினைவு நீர்த்தேக்கத் தொட்டி என அதில் குறிப்பிட்டுள்ளார். அரசு சார்பில் அரசு இடத்தில் கட்டப்பட்ட உயர்நிலை நீர்த்தேக்க தொட்டியில் நினைவுச்சின்னமாக முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் தனது மனைவியின் புகைப்படத்தை வரைந்திருப்பது அப்பகுதியில் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.

இது தொடர்பாக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணராஜ் தொடர்பு கொண்டு கேட்டபோது, நான் கட்டிய உயர்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் பணி நிறைவடைந்து தற்போது வரை எனக்கு அதற்கான பணத்தை ஊரக வளர்ச்சி துறை வழங்கவில்லை என தெரிவித்தார். என்னுடை பணத்தில் கட்டிய நீர் தேக்க தொட்டியில் எனது மனைவியின் படத்தை வரைந்தேன் என்றார்.


புஷ்பா நினைவு நீர்த்தேக்கத் தொட்டி' : அரசு சார்பில் கட்டப்பட்ட நீர்த்தேக்கத் தொட்டி புஷ்பா பெயருக்கு மாறியது எப்படி?

மேலும் இது தொடர்பாக கானை ஊரக வளர்ச்சித்துறை அலுவலரிடம் தொடர்புகொண்டு கேட்டபோது, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் உயர்நிலை நீர்த்தேக்க தொட்டியில் தனது மனைவியின்புகைப்படத்தை வரைந்திருப்பது கண்டனத்திற்குரியது எனவும், மேலும் புகைப்படத்தை அழிப்பதற்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் ஊராட்சி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணராஜ் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். அரசு சார்பில் பொது இடத்தில் கட்டப்பட்ட நீர்த்தேக்க தொட்டியில் தனது மனைவியின் புகைப்படத்தை வரைந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் இச்செயலை அப்பகுதியில் பரபரப்பாகி பேசு பொருளாக மாறி வருகிறது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

புதுச்சேரியில் புதிய மதுபான தொழிற்சாலைக்கு அனுமதி - கலால் துறை அறிவிப்பு


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Armstrong Funeral | உடல் அடக்கம் எங்கே? நீதிமன்றம் சொன்னது என்ன? சம்மதித்த ஆம்ஸ்ட்ராங் மனைவிMayawati in Armstrong Funeral |  Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
TNPL 2024: NRK vs CSG: கடைசி ஓவரில் கெத்து காட்டிய நித்திஷ்! - 3 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக்கை வீழ்த்திய நெல்லை ராயல்!
TNPL 2024: NRK vs CSG: கடைசி ஓவரில் கெத்து காட்டிய நித்திஷ்! - 3 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக்கை வீழ்த்திய நெல்லை ராயல்!
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
Sunil Gavaskar: ட்ராவிட்டிற்கு இதுதான் உயர்ந்த கெளரவமாக இருக்கும்! அரசுக்கு கவாஸ்கர் வைத்த முக்கிய கோரிக்கை!
Sunil Gavaskar: ட்ராவிட்டிற்கு இதுதான் உயர்ந்த கெளரவமாக இருக்கும்! அரசுக்கு கவாஸ்கர் வைத்த முக்கிய கோரிக்கை!
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
Embed widget