மேலும் அறிய

அதிர்ச்சி வைத்தியம்! தலைக்காயத்திற்கு ஆணுறை பாக்கெட்டை வைத்துக்கட்டிய சுகாதாரப் பணியாளர்.. என்ன நடந்தது?

இந்தியாவில் சுகாதார சேவை நிலவரம் எப்படி இருக்கிறது என்பதற்கு நற்சான்றுகளும் இருக்கின்றன சில மோசமான உதாரணங்களும் இருக்கின்றன.

இந்தியாவில் சுகாதார சேவை நிலவரம் எப்படி இருக்கிறது என்பதற்கு நற்சான்றுகளும் இருக்கின்றன சில மோசமான உதாரணங்களும் இருக்கின்றன.

கொரோனா பெருந்தொற்றை சமாளிப்பதில், மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட நாட்டில் தடுப்பூசித் திட்டத்தை சமாளிப்பது எப்படி என்பதற்கு இந்தியா முன்னுதாரணமாக இருந்து வருகிறது.
ஹீல் இன் இந்தியா திட்டம் என்ற ஒன்றைக் கொண்டு வந்து இந்தியாவை மருத்துவ சுற்றுலா தலமாகவும் மாற்ற அரசு திட்டமிட்டு வருகிறது. 

இதே வேளையில் தான் இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அதிர்ச்சிகரமான சிகிச்சை வழங்கப்பட்டிருக்கிறது.

மத்தியப் பிரதேச மாநிலம் மொரேனா மாவட்டத்தைச் சேர்ந்தவார் ரேஷ்மா பாய். இவருக்கு தலையில் காயம் ஏற்பட்டிருக்கிறது. இதற்காக அவர் போர்ஸா கம்யூனிட்டி ஹெல்த் சென்டர் சமுதாய மருத்துவநலக் கூடத்திற்கு வந்துள்ளார். அங்கே அவருக்கு சிகிச்சை அளித்த செவிலி தலைக்காயத்தில் இருந்து ரத்தம் வருவதைத் தடுக்க காண்டம் அட்டையை வைத்து ஒட்டி அதன் மீது கட்டுப்போட்டு முதலுதவி செய்து உடனடியாக மாவட்ட தலைமை மருத்துவமனைக்குச் செல்லுமாறு சொல்லியுள்ளார்.

மாவட்ட தலைமை மருத்துவமனையில் ரேஷ்மா பாயின் தலையில் இருந்த கட்டை அவிழ்த்துப் பார்த்த மருத்துவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ரேஷ்மா பாயின் தலையில் காண்டம் பாக்கெட்டுகள் அடங்கிய அட்டைப் பெட்டி இருந்தது. இந்த புகைப்படம் இப்போது இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக மொரேனா மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் ராகேஷ் மிஸ்ரா கூறுகையில், ரேஷ்மா பாய் தரம்கர் பகுதியில் இருந்து சமுதாய நலக் கூடத்திற்கு வந்துள்ளார். அப்போது அங்கிருந்த மருத்துவர் வேறொரு அவசர சிகிச்சையில் இருந்துள்ளார். இதனால் மருத்துவர் தர்மேந்திர ராஜ்புட் வார்டு பாய் அனந்த ராமிடம் தொலைபேசியில் எப்படி முதலுதவி செய்வது என்று கூறியுள்ளார். அதன்படி காயத்தின் மீது ஒரு பெரிய காட்டன் பேடை வைத்து அதன் மீது கார்டு போர்டு போன்ற ஏதேனும் ஒன்றை வைத்து கட்டிவிட்டு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கச் சொல்லியுள்ளார். ஆனால் அந்த வார்டு பாயோ கார்டு போர்டு இல்லாததால் அங்கிருந்த தடிமனான காண்டம் அட்டையை வைத்துக் கட்டியுள்ளார் என்று விளக்கமளித்துள்ளார்.

இந்நிலையில் காயத்துக்குக் கட்டுப்போட்ட நபரை மாவட்ட சுகாதார நலத் துறை பணியிடை நீக்கம் செய்துள்ளது.

இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை மாவட்ட கூடுதல் நீதிபதி நாரோட்டம் பார்கவ் கண்டனம் தெரிவித்துள்ளது. சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று  தெரிவித்துள்ளார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget