மேலும் அறிய

கட்டட மேற்பார்வையாளர் கொலை: தலைமறைவாக இருந்த 4 வடமாநில தொழிலாளர்கள் கைது..!

பெரும்பாக்கத்தில் கட்டிட மேற்பார்வையாளரை கொலை செய்து தலைமறைவாக இருந்த வடமாநிலத்தவர்கள் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னையில் நடைபெறும் கட்டுமான பணிகளில் ஏராளமான வடமாநில தொழிலாளர்களே பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், கடந்த 2015ம் ஆண்டு சென்னை பெரும்பாக்கத்திலும் நடைபெற்று வந்த கட்டிட வேலையில் வடமாநிலத்தவர்கள் வேலை பார்தது வந்துள்ளனர். அவர்களில் வேலை செய்யும்போது சாப்பாட்டிற்கு சரியாக பணம் தராத ஆத்திரத்தில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மேற்பார்வையாளரான உமேஷ் (வயது 22) என்பவரை அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சக தொழிலாளர்களான சிவம்நாயக் (26), பிஜய் நாயக்(24), ஜோரா முண்டா (25) சஞ்சய் குவாலா(21) ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.


கட்டட மேற்பார்வையாளர் கொலை: தலைமறைவாக இருந்த 4 வடமாநில தொழிலாளர்கள் கைது..!

சிறையில் அடைக்கப்பட்ட அவர்கள் பின்னர் ஜாமீனில் வெளியே வந்தனர். இந்த கொலை வழக்கு செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஜாமீனில் வந்த அவர்கள் 4 பேரும் கடந்த 2018ம் ஆண்டு முதல் தலைமறைவாகிவிட்டனர். பின்னர், அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, இந்த வழக்கில் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்த காவல்துறை அதிகாரிகள் அசாம் மாநிலத்தில் பிஜய் நாயக்கும், ரோஜா முண்டாவும் பதுங்கியிருப்பதாக தகவலறிந்துள்ளனர். இதையடுத்து, அசாம் சென்ற தமிழக காவல்துறையினர் பிஜய் நாயக் மற்றும் ஜோரா முண்டாவை கைது செய்தனர். மேலும், திருவள்ளூரில் பதுங்கியிருந்த எஞ்சிய குற்றவாளிகளான சஞ்சய் குவாலா மற்றும் சிவம் நாயக் இருவரையும் கைது செய்தனர்.


கட்டட மேற்பார்வையாளர் கொலை: தலைமறைவாக இருந்த 4 வடமாநில தொழிலாளர்கள் கைது..!

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து, அவர்களை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.  பள்ளிக்கரணை காவல் துணை ஆணையர் குமார் மேற்பார்வையில் பெரும்பாக்கம் காவல் ஆய்வாளர் மகுடீஸ்வரி, உதவி ஆய்வாளர் திருநாவுக்கரசு, காவலர் தேஷ் முஸ்தாக் ஆகியோர் தனிப்படைகளாக செயல்பட்டு இவர்கள் நான்கு பேரையும் கைது செய்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் சிறப்பாக செயல்பட்ட காவல்துறையினரை தாம்பரம் மாநகர காவல் ஆணையர் ரவி பாராட்டினார். சென்னை, கோவை, மதுரை, திருப்பூர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பெருநகரங்களில் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆயிரக்கணக்கானோர் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் சிலர் இதுபோன்று அடிக்கடி குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வருவதையடுத்து, குற்றச்சம்பவங்ளில் ஈடுபடும் வடமாநிலத்தவருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

காதல் திருமணத்தின் சோக முடிவு! கந்திலி அருகே இளம்பெண் தற்கொலை செய்யக் காரணம் என்ன?
காதல் திருமணத்தின் சோக முடிவு! கந்திலி அருகே இளம்பெண் தற்கொலை செய்யக் காரணம் என்ன?
திருமணம் மீறிய உறவு !! தட்டி கேட்டவர்கள் மீது கஞ்சா கும்பல் தாக்குதல்
திருமணம் மீறிய உறவு !! தட்டி கேட்டவர்கள் மீது கஞ்சா கும்பல் தாக்குதல்
Nagercoil Sabarivarman :நாகர்கோவில் விசாரணை கைதி திடீர் மரணம்.! பிரேதப் பரிசோதனையில் வெளியான ஷாக் தகவல்- நடந்தது என்ன.?
நாகர்கோவில் விசாரணை கைதி திடீர் மரணம்.! பிரேதப் பரிசோதனையில் வெளியான ஷாக் தகவல்- நடந்தது என்ன.?
கடல் வழியே இலங்கைக்கு போலி மருந்துகள் கடத்தல்: புதுச்சேரியில் போலி மருந்து தொழிற்சாலை உரிமையாளர் கைது!
கடல் வழியே இலங்கைக்கு போலி மருந்துகள் கடத்தல்: புதுச்சேரியில் போலி மருந்து தொழிற்சாலை உரிமையாளர் கைது!

வீடியோ

விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?
CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK: செங்கோட்டையனைச் சந்தித்த லீமாரோஸ்.. ஆடிப்போன அதிமுக! கட்டுப்படுத்துவாரா எடப்பாடி பழனிசாமி?
ADMK: செங்கோட்டையனைச் சந்தித்த லீமாரோஸ்.. ஆடிப்போன அதிமுக! கட்டுப்படுத்துவாரா எடப்பாடி பழனிசாமி?
Weather Update: தமிழகத்திற்கு வெப்ப அலை எச்சரிக்கை! 3 நாட்களுக்கு வறுத்தெடுக்கப் போகும் வெயில் - என்னென்ன பாதிப்புகள் வரும்?
தமிழகத்திற்கு வெப்ப அலை எச்சரிக்கை! 3 நாட்களுக்கு வறுத்தெடுக்கப் போகும் வெயில் - என்னென்ன பாதிப்புகள் வரும்?
E.V. Velu lookout notice : அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
திமுகவின் சதிவலை... பழிவாங்குறாங்க! லஞ்சம் வாங்கல.. கடன் வாங்கினேன்.. தலைவர் பரபரப்பு பேட்டி!
திமுகவின் சதிவலை... பழிவாங்குறாங்க! லஞ்சம் வாங்கல.. கடன் வாங்கினேன்.. தலைவர் பரபரப்பு பேட்டி!
Maruti WagonR CNG: ரூ.2 லட்சம் போதும்; 34 கிமீ மைலேஜ், நடுத்தர குடும்பங்களின் நண்பன்- ரூ. 8,612 இஎம்ஐயில் சொந்தமாக்குங்கள்!
Maruti WagonR CNG: ரூ.2 லட்சம் போதும்; 34 கிமீ மைலேஜ், நடுத்தர குடும்பங்களின் நண்பன்- ரூ. 8,612 இஎம்ஐயில் சொந்தமாக்குங்கள்!
IIT Madras: ஒன்றாகப் பட்டம் பெற்ற தாய், மகன்- ஐஐடி சென்னை பட்டமளிப்பு விழாவில் ருசிகரம்!
IIT Madras: ஒன்றாகப் பட்டம் பெற்ற தாய், மகன்- ஐஐடி சென்னை பட்டமளிப்பு விழாவில் ருசிகரம்!
’’உங்க விஜய் ஆட்சி’’ அரசு அலுவலகங்களில் லஞ்சமா? புகார் அளிக்க வாட்ஸப் எண் அறிமுகம்
’’உங்க விஜய் ஆட்சி’’ அரசு அலுவலகங்களில் லஞ்சமா? புகார் அளிக்க வாட்ஸப் எண் அறிமுகம்
‘வரலாறு தெரியாமல் நீக்கம்’ சமூக நீதி துறை பெயருக்கு திமுக கடும் எதிர்ப்பு..!
‘வரலாறு தெரியாமல் நீக்கம்’ சமூக நீதி துறை பெயருக்கு திமுக கடும் எதிர்ப்பு..!
Embed widget